Your shopping cart is empty!
காஞ்சி இருக்க கலிங்கம் குலைந்த களப்போர் என்ற வாக்கியத்தோடு கடல்புறா தொடங்குகிறது. சாண்டில்யன் ஒரு இளமைதுள்ளும் ஒரு எழுத்தாளரின் அடையாளமாக அந்த வரிகள் விளங்குகின்றன். காஞ்சியில் சோழமன்னன் குலோத்துங்கள் இருக்கும்போதே அவனது படைகள் கலிங்க நாட்டை அழித்தது என்று கலிங்கத்து பரணியில் பாடி இருக்கிறார்களாம். அதைத்தான் மேற்கோள் காட்டுகிறார் என்று நினைத்தால் கூடவே இன்னொரு விளக்கமும் கொடுக்கிறார். அதாவது காஞ்சி என்பது பெண்களில் அணியும் ஒரு ஆபரணம். கலிங்கம் என்பது ஆடை. ஆக பெண்ணின் நகை களையாமல் உடைகள் குலைந்த களப் போர். என்பதாக அந்த வாக்கியத்தைக் குறிக்கிறார். முதல் வரி படிக்கும்போதே ஜிவ்வென்று இருக்கிறது.