Menu
Your Cart

ஊர்க்காரி ஒருத்தியின் காதல்

ஊர்க்காரி ஒருத்தியின் காதல்
-5 %
ஊர்க்காரி ஒருத்தியின் காதல்
மௌனன் யாத்ரிகா (ஆசிரியர்)
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வேட்டையும் கூத்துமே தொல்குடியின், கூட்டுக் குமுகாயத்தின் அடிப்படையாய் அமைந்து, அதிலிருந்தே இசை, இயல், நாடகம் இன்னபிற கலைகள் யாவும் வளர்ந்தெழுந்தன. இந்நிலையில், தமிழ்க் குடிகளின் தூய பாவியத்தை வரைந்தெடுக்கும் முனைப்பாகவே மெளனன் யாத்ரிகாவின் ஊர்க்காரி ஒருத்தியின் காதல் வெளிவந்திருக்கிறது. ஐந்திணைகளில் வாழும் குடிகளின் களவும் காமமும் பெருக்கெடுத்தோடும் ஒவ்வொரு கவிதையிலும் கொலையும் தற்கொலையும் தலைவி, தலைவன் என்னும் தன்னிலைகளுக்குள் கருவிலிருந்து மரணம் வரை உடன் நிழலாகப் பின் தொடர்கின்றது. அறுபத்தைந்து அத்தியாயங்களாக எழுதப்படவேண்டிய காமமும் வாதையும் வலியும் அறுபத்தைந்து பாக்களாக எழுதப்பட்டுள்ளன. தூமையும் சாண்டையும் விந்தும் கமழும் இப்பனுவலின் புழுக்க நெடிக்குள், கொலைச் சுரக்கும் குருதியின் கவிச்சையைத் தவிர்த்து தொகுக்கப்பட்ட சங்க அகப்பாடல் பனுவல்களில் விடுபட்ட பக்கங்களை எழுதிச் சேர்த்திருக்கிறார் மெளனன் யாத்ரிகா. ஒரே அமர்வில் இப்பனுவலை வாசித்து முடித்ததும், அணங்கின் அல்குல் வாடையே தமிழ்ப் பாவியத்தின் உள்ளடக்கம் என்று எனக்காக முதல் வரியை எழுதத் தொடங்குகிறேன்.
Book Details
Book Title ஊர்க்காரி ஒருத்தியின் காதல் (oorkkaari-oruththiyin-kaadhal)
Author மௌனன் யாத்ரிகா (Mownan Yaadhrikaa)
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தத் தொகுப்பில் ஒவ்வொரு கவிதையின் விவரிப்பிலும் உரிப்பொருளை முன்வைக்க முதல் பொருளான நிலத்தையும் பொழுதையும் காட்டிவிட்டுக் கருப்பொருள்களை விளைவிக்கிறார் கவிஞர் மெளனன் யாத்ரிகா...
₹143 ₹150
தம் வாழ்வையும் நிலங்களையும் பொருளற்ற சுகத்திற்காக அடமானம் வைத்த அப்பாவி மற்றும் அடப்பாவி மனிதர்களை நினைக்கும்போதெல்லாம் எழுதத்தூண்டும் பேருணர்ச்சிகள் இப்போது வருகின்றன. பேய்த்திணை வந்தபோது அப்படியெல்லாம் ஒன்று தோன்றியதில்லை. அது தன்னைச் சுற்றிய வட்டத்துக்குள் ஒளிர்ந்த வாழ்வையும் கணங்களையும் கொண்டிரு..
₹94 ₹99
தமிழ் வாழ்கையில் தொல் வகைமை இன்றைய கிராம வாழ்கையில் எப்படியெல்லாம் தொழிற்படுகிறது என்பதை மௌனன் யாத்ரிகாவின் நவீனக் கவிதைகள் பேசுகின்றன. இக்கவிதைகளின் உள்ளே தற்காலத் தமிழ் அழகியலின் ஜல்லிக்கட்டு நடப்பதைத் தீவிர வாசகனால் உணர முடியும்...
₹124 ₹130