Menu
Your Cart

இந்திரநீலம் (வெண்முரசு நாவல்-07)

இந்திரநீலம் (வெண்முரசு நாவல்-07)
-5 % Out Of Stock
இந்திரநீலம் (வெண்முரசு நாவல்-07)
ஜெயமோகன் (ஆசிரியர்)
₹1,045
₹1,100
FREE shipping* (within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

இந்திரநீலம்(7) - வெண்முரசு நாவல் (மகாபாரத நாவல் வடிவில்):

இந்திரநீலம் கிருஷ்ணன் தன் காதலால் சத்யபாமை, ருக்மிணி, ஜாம்பவதி, நக்னஜித்தி, மித்ரவிந்தை, லட்சுமணை, பத்ரை, காளிந்தி என்னும் எட்டு நாயகியரையும் உருவாக்கி எடுப்பதன் கதை.உலகளந்தவனின் உள்ளத்தில் நீங்காது அமர்ந்த எட்டு திருமகள்கள் அவர்கள். நீங்காதவர்கள் பிரியவோ மீண்டும் இணையவோ முடியாது. ஆகவே இதெல்லாம் ஓர் இனிய விளையாட்டு மட்டுமே. அவர்களின் கன்னிமை ஏக்கமும், காதலின் துயரமும், ஆழத்துத் தனிமையும், காமத்தின் களிப்பும், மனைபுகுந்தபின் உரிமையாடலும், ஒருவரோடொருவர் கொள்ளும் போராட்டமும் எல்லாம் அவர்கள் எங்கும் நீங்கவேயில்லை என்னும் நிலையில் நிகழும் மாயைகள்.

அந்த விளையாட்டை நிகழ்த்துவது அழகென்றும் செல்வமென்றும் ஆணவமென்றும் தன்னைக்காட்டும் இவ்வுலகத் திரு. அதன் வடிவாகிய சியமந்தக மணி. அனைவரையும் தன் ஆட்டவிதிகளின்படி சுழற்றியடிக்கிறது. ஆழத்தில் தொடங்கி ஆழத்திற்கே மீள்கிறது. அதுவும் அவன் நீலமேயாகும். இந்நாவல் எட்டு திருக்கள் சூழ அவன் இருக்கும் துவாரகை எனும் ஆலயத்தின் காட்சி.

Book Details
Book Title இந்திரநீலம் (வெண்முரசு நாவல்-07) (Indhiraneelam-Venmurasu(7))
Author ஜெயமோகன் (Jeyamohan)
ISBN 9789384149710
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 968
Year 2016
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Hindu | இந்து மதம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சட்டம் இயற்றும் பிரதிநிதிகள்முதல் ஆட்சியை நடத்தும் அதிகாரிகள் வரை ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. இந்தியா உயிர்த்திருக்கவேண்டுமானால் ஊழல் அழித்தொழிக்கப்படவேண்டும். அதற்கு அண்ணா ஹசாரே தேர்ந்தெடுத்த ஆயுதம், உண்ணாவிரதம். பிரிட்டனின் ஆதிக்கத்தை நொறுக்க காந்தி தேர்ந்தெடுத்த அதே ஆயுதம்...
₹147 ₹155
இன்றைய காந்தி(கட்டுரைகள்) - ஜெயமோகன் :காந்திய சிந்தனைகளை இன்றைய நோக்கில் அணுகும் விவாதங்களின் தொகுதி இந்த நூல். சமகாலத்து இளைய தலைமுறை காந்தியை அணுகும்போது உருவாகும் ஐயங்கள் சிக்கல்கள் ஆகியவை இந்த உரையாடல்கள் வழியாக இயல்பாக உருவாகி வந்துள்ளன. காந்தியை முழுமையாக அணுகும் இந்நூல் அவர் மீது கறாரான ஒரு ப..
₹504 ₹530
இரவுஇந்த இரவில்இப்புவியில்எத்தனை கோடி உயிர்கள் உறவு கொள்கின்றன !காட்டில் கரிய பெரும் யானைகள்மண்ணுக்குள் எலிகள்நீருக்குள் மீன்கள்பல்லாயிரம் கோடி புழுக்கள் பூச்சிகள்நாளைய புவிஇங்கே கரு புகுகிறதுநிறைவுடன்சற்றே சலிப்புடன்பெருமூச்சு விட்டுக் கொண்டுதிரும்பிப் படுக்கிறதுஇரவு..
₹276 ₹290
அனல் காற்றுஅனல்காற்றின் தனித்தன்மை என்னவென்றால் வெப்பம் ஏறிஏறிச் சென்று அதன் உச்சத்தில் சட்டென்று மழை வந்துவிடுகிறது என்பதே, வாழ்க்கையில் அனல்காற்று வீசும் பருவம் ஒன்றை தாண்டிவராதவர்கள் யார்? அந்த உச்சகட்ட இறுக்கம் கொண்ட சில நாட்களின் கதை இது. எதிர்த்திசை நோக்கி முறுக்கிக்கொள்ளும் உறவுகள், தீமழை கொட..
₹171 ₹180