Menu
Your Cart

விஷ்ணுபுரம் (நற்றிணை பதிப்பகம்)

விஷ்ணுபுரம் (நற்றிணை பதிப்பகம்)
-5 %
விஷ்ணுபுரம் (நற்றிணை பதிப்பகம்)
ஜெயமோகன் (ஆசிரியர்)
₹741
₹780
FREE shipping* (within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
விஷ்ணுபுரம் நம் மரபின் பெரும் படிமவெளியை நவீன நாவல்வடிவுக்குள் அள்ளி நிறுத்தி ஓர் உலகை உருவாக்குகிறது. ஆகவே அது செவ்விலக்கியம். நம் செவ்வியல் ஆக்கங்களுடன் ஒப்புநிற்கும் தகுதி அதற்குண்டு என நான் நம்புகிறேன். ஆகவேதான் விஷ்ணுபுரம் வெளிவந்த நாட்களில் அது எதிர்கொள்ள நேர்ந்த சில்லறை விமர்சனங்கள் என்னைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. கண்டடையப்படாமல் கிடப்பதென்பது பேரிலக்கியங்களுக்குரிய இயல்பு என்ற எண்ணமே எனக்கிருந்தது. அதன் புதுமையாலும் வேகத்தாலும் விஷ்ணுபுரம் வெகுவாகக் கவனிக்கப்பட்டது, பேசப்பட்டது. தமிழில் தொடர்ச்சியாக இத்தனை வருடம் பேசப்பட்ட பிற படைப்புகள் குறைவே. விஷ்ணுபுரம் இதுவரை தொடர்ந்து அச்சில் இருக்கிறது, சிறப்பாக விற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு ஓர் அழகிய பதிப்பு வெளியாகவில்லை என்ற எண்ணம் வாசகர் மத்தியில் உண்டு. அதை இப்பதிப்பின் மூலம் நற்றிணை பதிப்பகம் சாத்தியமாக்கியிருக்கிறது. - ஜெயமோகன் .
Book Details
Book Title விஷ்ணுபுரம் (நற்றிணை பதிப்பகம்) (Vishnupuram Natrinai Pathippagam)
Author ஜெயமோகன் (Jeyamohan)
ISBN 9788192366890
Publisher நற்றிணை (Natrinai)
Pages 864
Year 2014
Category Novel | நாவல், Hindu | இந்து மதம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சட்டம் இயற்றும் பிரதிநிதிகள்முதல் ஆட்சியை நடத்தும் அதிகாரிகள் வரை ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. இந்தியா உயிர்த்திருக்கவேண்டுமானால் ஊழல் அழித்தொழிக்கப்படவேண்டும். அதற்கு அண்ணா ஹசாரே தேர்ந்தெடுத்த ஆயுதம், உண்ணாவிரதம். பிரிட்டனின் ஆதிக்கத்தை நொறுக்க காந்தி தேர்ந்தெடுத்த அதே ஆயுதம்...
₹147 ₹155
இன்றைய காந்தி(கட்டுரைகள்) - ஜெயமோகன் :காந்திய சிந்தனைகளை இன்றைய நோக்கில் அணுகும் விவாதங்களின் தொகுதி இந்த நூல். சமகாலத்து இளைய தலைமுறை காந்தியை அணுகும்போது உருவாகும் ஐயங்கள் சிக்கல்கள் ஆகியவை இந்த உரையாடல்கள் வழியாக இயல்பாக உருவாகி வந்துள்ளன. காந்தியை முழுமையாக அணுகும் இந்நூல் அவர் மீது கறாரான ஒரு ப..
₹504 ₹530
இரவுஇந்த இரவில்இப்புவியில்எத்தனை கோடி உயிர்கள் உறவு கொள்கின்றன !காட்டில் கரிய பெரும் யானைகள்மண்ணுக்குள் எலிகள்நீருக்குள் மீன்கள்பல்லாயிரம் கோடி புழுக்கள் பூச்சிகள்நாளைய புவிஇங்கே கரு புகுகிறதுநிறைவுடன்சற்றே சலிப்புடன்பெருமூச்சு விட்டுக் கொண்டுதிரும்பிப் படுக்கிறதுஇரவு..
₹276 ₹290
அனல் காற்றுஅனல்காற்றின் தனித்தன்மை என்னவென்றால் வெப்பம் ஏறிஏறிச் சென்று அதன் உச்சத்தில் சட்டென்று மழை வந்துவிடுகிறது என்பதே, வாழ்க்கையில் அனல்காற்று வீசும் பருவம் ஒன்றை தாண்டிவராதவர்கள் யார்? அந்த உச்சகட்ட இறுக்கம் கொண்ட சில நாட்களின் கதை இது. எதிர்த்திசை நோக்கி முறுக்கிக்கொள்ளும் உறவுகள், தீமழை கொட..
₹171 ₹180