Menu
Your Cart

புதிய தமிழ் இலக்கிய வரலாறு (3 தொகுதிகள்)

புதிய தமிழ் இலக்கிய வரலாறு (3 தொகுதிகள்)
-10 % Out Of Stock
புதிய தமிழ் இலக்கிய வரலாறு (3 தொகுதிகள்)
₹1,602
₹1,780
FREE shipping* (within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மூன்று தொகுதிகளாக வெளியிடப்படும் புதிய தமிழ் இலக்கிய வரலாறு, இதுவரை தமிழில் வெளிவந்துள்ள அனைத்து இலக்கிய வரலாற்று நூல்களினின்றும் வேறுபட்டது. பண்டைக் காலம், இடைக்காலம், இக்காலம் என்று மூன்று காலங்களுக்கும் தனித் தனித் தொகுதிகள் கொண்டது. அவ்வக்கால மொழியின் வளர்ச்சி. சமூக அரசியல் பின்புலம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனித் தனிக் கட்டுரையும் வெவ்வேறு அறிஞர்களால் எழுதப்பட்டுள்ளது இந்நூலின் தனிச்சிறப்பு. மலேசியா, ஈழம் ஆகிய நாடுகளின் இலக்கிய வரலாறும் இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளது. அறிஞர் பெருமக்களுக்கும் மாணவர்களுக்கும் பெரும் பயன் நல்கும் தகவல் களஞ்சியம் புதிய தமிழ் இலக்கிய வரலாறு. தொகுப்பாசிரியர்களாகவும், முதன்மைப் பதிப்பாசிரியர்களாகவும் விளங்குபவர்கள் பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம், எழுத்தாளரும் அறிஞருமான நீல பத்மநாபன் இருவரும் ஆவர். நீல பத்மநாபன் சாகித்திய அகாதெமி தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளராக இருந்த காலத்தில் (1998-2002) இத்தொகுதிகள் திட்டமிடப்பட்டன. சிற்பி பாலசுப்பிரமணியம் தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளராக விளங்கிய காலத்தில் (2008-2012) இப்பணி நிறைவு பெற்றது. நாவல், சிறுகதைப் படைப்பாளியான நீல பத்மநாபன், சாகித்திய அகாதெமி விருதும் மொழிபெயர்ப்புப் பரிசும் பெற்றவர். கவிஞரான சிற்பி பாலசுப்பிரமணியம் கவிதை, மொழிபெயர்ப்பு ஆகிய இரு துறைகளில் சாகித்திய அகாதெமி விருதுகள் பெற்றவர்.
Book Details
Book Title புதிய தமிழ் இலக்கிய வரலாறு (3 தொகுதிகள்) (Pudhiya)
Author நீல.பத்மநாபன் (Neela.Padmanaban), சிற்பி பாலசுப்ரமணியம் (Sirpi Paalasupramaniyam)
ISBN 9788126043620
Publisher சாகித்திய அகாதெமி (Sahitya Akademi)
Pages 976
Year 2013
Category தமிழர் வரலாறு, Essay | கட்டுரை, Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

‘நாவல்’ என்பது நவீன இதிகாசம். வாழ்வை இதிகாசம் போல் சித்தரிப்பவனே உயர்ந்த படைப்பாளி. நீல. பத்மநாபனிடம் இந்த அம்சம் மேலோங்கியிருக்கிறது. வாசகனுக்கு இதிகாச உணர்வைத் தரும் நவீனத் தமிழ் நாவல்கள் வெகு சொற்பம். மகத்தான நாவலாசிரியர்களோடு வைக்கத் தகுந்தவர் நீல. பத்மநாபன். ‘தலைமுறைகள்’ ஒரு நவீன இதிகாசம்..
₹423 ₹470
காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவரும் ‘பள்ளிகொண்டபுரம்’ நீல. பத்மநாபனின் நாவல்களில் முதன்மையானது என்று சொல்லலாம். அனந்த நாயரின் துக்கம் கவிந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்த நாவலில் கேரளத்தின், திருவனந்தபுரத்தின் நேற்றைய - இன்றைய கலாச்சார வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளது. மலையாள நாவலாசிரியர்களில..
₹315 ₹350
நீல. பத்மநாபனின் கவனிக்கத்தக்க சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல்...
₹180 ₹200
நீல. பத்மநாபனின் கவனிக்கத்தக்க சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். இதனை சிறுகதைத் தொகுப்பு என்று சொல்வதைக் காட்டிலும் யதார்த்த வாழ்வின் அழுத்தமான வார்ப்பு என்று சொல்வதே மிகப் பொருத்தமானது. ஒவ்வொரு கதைகளுக்குள்ளும் நுழையும் போது காகிதத்தில் கண் பதிக்கும் உணர்வையும் மறந்து, கதைக் களத்தில் கால் பதிக்க..
₹72 ₹80