Menu
Your Cart

மதராசபட்டினம்

மதராசபட்டினம்
-5 %
மதராசபட்டினம்
நரசய்யா (ஆசிரியர்)
₹309
₹325
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்நூலின் பக்கங்களில் காணப்படுவது, ஒரு பெரிய திரைச்சீலையில் தீட்டப்பட்டிருக்கும் வார்த்தைகளாலான வண்ணப்படமாக அமைந்துள்ளது. கோரமண்டலக்கையின் சரித்திரத்தின் பகுதிகளை சிரத்தையுடன் எழுதி, அதில் போர்ச்சுகீசியர்களின் சாந்தோம் வரவிலிருந்து ஆரம்பமாகிறது. புனித ஜார்ஜ் கோட்டை நிர்மாணிக்கப்பட்டதும் அது வளர்ந்த விவரமும் கூறப்பட்டுள்ளன. வணிகம், மதம் மற்றும் ஜாதி பேதங்கள்பற்றிய விவரங்களைக் காட்டுகையிலும், மதராசபட்டினத்துப் பஞ்சங்களையும், அடிமை வியாபாரத்தையும் குறித்து விவரிக்கையிலும் அவரது சரித்திரத் தேடல் நன்றாகவே தெரிகிறது. ஆங்கிலேயர்களும் இந்நகரத்து இந்தியப் பிரமுகர்களும் இந்நகரத்திற்கும் தென்னகத்திற்கும் செய்த பெரும் சேவையை எடுத்துக் கூறுகையில் அவர் துபாஷிகளையும் அவர்கள் சேவைகளையும் நன்கு விவரித்துள்ளார். இந்திய நாட்டின் நகராண்மை, நில அளவை,கல்வி முறை, அச்சுப் பணி, வானசாஸ்திரம், வங்கி முறை மற்றும் மருத்துவம் முதலான சேவைகளுக்கு எவ்வாறு, மெட்ராஸ் முன்னோடியாக அமைந்தது என்பதை வலியுறுத்திச் சொல்கிறார். கற்பவர் ஆய்வாளர் மற்றும் சரித்திரத்தில் ஈடுபாடுள்ள சாதாரண வாசகர் எல்லோருக்குமே அவர்களது கவனத்தை ஈர்க்கும் முறையில் நரசய்யா தயாரித்துள்ள நூல் இது. அவர்களெல்லோரும் இந்நூலைப் படிக்க நேர்ந்தால், அதுவே இந்நகரத்தின் சரித்திர சேவைக்கு நரசய்யா செய்துள்ள பெரும் தொண்டாக அமையும்.
Book Details
Book Title மதராசபட்டினம் (Madharaasapattinam)
Author நரசய்யா
ISBN 9788183793841
Publisher பழனியப்பா பிரதர்ஸ் (Palaniyappa Brothers)
Pages 232
Published On Jan 2006
Year 2006
Edition 4
Format Hard Bound
Category History | வரலாறு, தமிழகம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

காவூரி ராமலிங்கம் அப்பல நரசய்யா, ஒரிஸ்ஸாவில் பிறந்தவர். கப்பற் பொறியியலில் தேர்ச்சி பெற்ற பிறகு 10 வருடங்கள் கடற்படை கப்பல்களில் பணியாற்றினார். ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற விமானந்தாங்கிக் கப்பலின் ஃபிளைட் டெக் சீஃப் ஆக பணியாற்றினார். பிறகு 2 வருடங்கள் வணிகக் கப்பல்களில் பணியாற்றிய பின்னர், விசாகப்பட்..
₹219 ₹230
நாகரீக வளர்ச்சியின் முக்கியப் பங்காக இருப்பது பயணங்களே. தமிழர்கள் முற்காலத்தில் கடல்வழி வணிகத்தில் எப்படிச் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை இலக்கியத்தினூடே சொல்லி இருந்தாலும் தொல்லியல் துறை கண்டுபிடித்த சாட்சிகளுடன் நரசய்யா விவரிக்கிறார் அக்கால மனிதர்களின் திறமைகளை. வணிகர்களே மாற்றத்தை கொண்டு வரு..
₹456 ₹480