Menu
Your Cart

எஞ்சிய பகல்

எஞ்சிய பகல்
-5 %
எஞ்சிய பகல்
சிவரமணி (ஆசிரியர்)
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சிவரமணி சிவானந்தன் (30.09.1967 19.05.1991) இருபத்து மூன்று வயதில் தற்கொலை செய்து கொண்ட ஈழத்துக் கவிஞை. அவர் தன்னைப் பூமியிலிருந்து விடுவித்துக் கொண்டபோது தன்னுடைய கவிதைகளையும் எரித்து அழித்தார். யாரிடமாவது ஏதாவது எஞ்சியிருந்தால் அவற்றையும் அழித்துவிடுமாறு தனது இறுதிக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். சிவராமணியின் கவிதை. குடும்பம். சமூகம். தேசம் எனும் கைவிலங்குகளுடன் தீவிரமாகப் போராடும் ஒரு பெண்ணின் கடினமான பயணத்தை அடையாளஞ் செய்கிறது. அது யுத்தத்தின் நடுவில் வாழும் சூழமைவு காரணமாக அசாதாரணமாகவும் அதேசமயம் அதில் பேசப்படும் பெண்ணனுபவத்தால் எல்லை கடந்து தொடர்புபடக் கூடிய ஒன்றாகவும் காணப்படுகிறது. இலங்கையில் தமிழர்களின் அரசியலை வலியுறுத்துவதில் முக்கியமானதொரு வரலாற்றுக் காலத்தின் கொந்தளிப்புகளில் மிக நுட்பமாக ஈடுபடுவதால் அவரது சாட்சிக் சமத்துவத்திற்கான அவரது தீராத தேடலையும் புரட்சிமீதான நம்பிக்கையையும் எதிர்த்தல் எனும் செயற்பாட்டையும் மட்டுமின்றி. மரணம் பற்றியும் வேறுபட்டிருக்கும் அவரது கருத்து நிலைப்பாட்டையும் அடையாளப்படுத்துகிறது. கவிஞர் அகிலனின் பொருத்தப்பாடுடைய கவித்துவமானதும் அறிவுபூர்வமானதுமான முன்னுரையோடு ஆரம்பமாகும் அவரது கவிதைத் தொகுப்பானது நினைவு கொள்ளலின் முக்கியமானதொரு செயற்பாடாகக் காணப்படுகிறது. அத்துடன் இவரது கவிதை அதன் மெதுவான பரிணாம வளர்ச்சியினை எமக்கு முன்னாகத் திறப்பதுடன் எழுதுவது என்பதை தப்பிப் பிழைத்தலாகக் (survival) கொண்ட பெண்களது வம்சாவழியில் அதனை நிலைநிறுத்தவுஞ் செய்கிறது.
Book Details
Book Title எஞ்சிய பகல் (Enjiya pagal)
Author சிவரமணி
ISBN 9789391949105
Publisher பரிசல் வெளியீடு (Parisal Veliyedu)
Pages 74
Published On Nov 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Eezham | ஈழம், Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author