Menu
Your Cart

ரணங்களின் மலர்ச்செண்டு

ரணங்களின் மலர்ச்செண்டு
-5 %
ரணங்களின் மலர்ச்செண்டு
கல்யாண்ஜி (ஆசிரியர்)
₹105
₹110
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கதைகள் எழுதும்போது இவர் வண்ணதாசன்.கவிதையுலகில் கல்யாண்ஜி. வீட்டிலும் வேலை செய்த இடத்திலும் கல்யாணசுந்தரம். விழைவு மனமும் விழா மணமும் கொண்டவர் என்றாலும் மௌனமும் மௌனம் குலைந்த பொழுதில் வெம்மையும் இயல்பில் கொண்டவர். கங்கைக்கரையில் தியானித்திருக்கும் தவசியைப் போலவும் புத்தகயாவில் காலமறியாது தொடர்ந்து பெருநிலைக்கு முனையும் புத்தத் துறவியைப் போலவும் நள்ளிருள் நிலாவின் மௌன நகர்ச்சியைப் போலவும் சதா காலமும் எண்ணமும் எழுத்துமாக வாழும் பவித்ரன் வண்ணதாசன். இவரது உலகில் அன்பு உண்டு. ஆரவாரமில்லை; சமயமும் இல்லை. சமயோசிதமும் இருக்காது. மரமாய் நிழலாய் கனிந்த மனிதர்களின் வாழ்வும் காட்சியும் காட்சிப்பிழைகளும் கொண்டவை இவரது கவிதைக் கணங்கள். ‘யாருடனும் போட்டி இல்லை எனக்கு’ என்று இவர் பிரகடனப்படுத்தினாலும் போட்டிப் போட்டுக் கொண்டு இவரிடம் வந்து சேர்கிறார்கள் அடுத்தடுத்த தலைமுறையினர். சமீபகாலமாக கதாசிரியர் வண்ணதாசனுடன் கவிஞர் கல்யாண்ஜிக்கும் சரி நிகர் போட்டி ஒன்று நிலவி வருவதும் வெளிப்படையான உண்மை. தற்போது ஒரே நேரத்தில் வண்ணதாசனின் கமழ்ச்சி சிறுகதைத் தொகுப்பும் கல்யாண்ஜியின் ரணங்களின் மலர்ச்செண்டு கவிதைத் தொகுப்பும் வெளிவருகின்றன. கமழ்ச்சி நெடுங்கதைகளின் தொகுப்பாகவும் ரணங்களின் மலர்ச்செண்டு கல்யாண்ஜியின் மொத்த வாழ்வனுபவத்தின் திரட்சியாகவும் மனம் கடந்த நிலையில் வந்திறங்கிய வார்த்தைகளாகவும் நம்மைச் சலனப்படுத்துகின்றன. ‘சுந்தரன் நான் எனும் மந்திரம் புரிந்தது’ என்று எழுதுகிற கல்யாண்ஜியை இந்தத் தொகுப்பில்தான் எல்லா கல்யாண குணங்களும் கொண்ட சுந்தரனாய் கண்டு கொள்ளமுடிகிறது. மௌனம் கலைகிறபோது எழுகிற ஆற்றலை அரிய இயலாது. அது பாற்கடலை கடைவது போல்தான். நஞ்சு நீக்கி அமுதம் திரளும் தருணம். சொல் உக்கிரம் பெறும்காலம். ‘குளிராவது ஒன்றாவது? என்று என்றைக்காவது மௌனம் பேசியிருக்குமா? உரத்தக் குரலில் பேசியிருக்கிறது. இத்தொகுப்பில் வாழ்வின் ரகசியத்தை வாழ்வு தரும் வலியோடு வரைந்திருக்கிறார் கல்யாண்ஜி. இல்லை கல்யாண சுந்தரன்.
Book Details
Book Title ரணங்களின் மலர்ச்செண்டு (Ranangalin Malarchendu)
Author கல்யாண்ஜி (Kalyaanji)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 0
Year 2017
Category Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அந்தரப் பூ - கல்யாண்ஜி:புத்தகத்திலிருந்து சில ..மரத்தில், கிளையில்,மஞ்சரியில் பார்த்தாயிற்று.கீழ்த் தூரில், மண்ணில்கிடப்பதையும் ஆயிற்று.வாய்க்க வேண்டும்காம்பு கழன்ற பின்தரை இறங்கு முன்காற்றில் நழுவி வருமோர்அந்தரப் பூ காணல்..
₹105 ₹110
நான் என் கவிதை ஒன்றில் எழுதியிருப்பது போல நீங்கள் எழுதும் கவிதைக்கு முன்பே வரிகள் இருந்தன. உங்களுக்கு பின்னாலும் வர இருக்கிறார்கள். நிறையப் பேர் அடித்தல் திருத்தல் அற்ற வரிகளுடன் எனக்கு முன்னாலும் ஏராளமான தடங்கள் இருந்தன எனக்குப் பின்னாலும் தடங்கள் இருக்கும் இதில் என் தடம், உம் தடம் எதுவும் இல்லை. அ..
₹760 ₹800
செம்மண் தூவிய முதுகுடன் தேயிலைத் தோட்டங்களில் நடக்கிறது யானைக் குடும்பம். தாளைத் தேர்ந்தெடுத்துத் தின்கிறது தாய்ப் பசு வாழை மட்டையை விட்டுவிட்டு. கணினி மையத்தில் வெள்ளுடம்பு நிர்வாணம் கண்டு கரமைதுனம் செய்கிறான் பதினாறான். காவல் நிலையத்தில் செத்துக் கிடக்கிறாள் காக்கி வன்புணர்வில் சிதைந்த கருப்புப் ப..
₹105 ₹110
கட்டக் கட்ட தகர்ந்துகொண்டு இருக்கிறது காமத்திற்கும் மரணத்திற்கும் இடையிலான கல்பாலம். பொங்கிப் புரண்டு புனலோடிக்கொண்டு இருக்கிறது கங்கு கரையற்ற கானல் நதியில்..
₹71 ₹75