Menu
Your Cart

சைவமும் வைணவமும்

சைவமும் வைணவமும்
-5 %
சைவமும் வைணவமும்
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
திருச்சிற்றம்பலம் சைவம் சைவம் என்னும் சொல்லின் பொருள் சைவம் என்பது சிவசம்பந்தம் உடையது எனப் பொருள்படும். அஃது உலக முதற் பொருளாகிய கடவுளைச் சிவம் எனத் தெளிந்து வழிபடும் நெறிக்குப் பெயராகி வழங்கி வருகிறது. சைவம் எனினும், சிவநெறி எனினும், சைவ சமயம் எனினும் ஒக்கும்.சிவம் என்பதன் பொருள் கடவுள், இறைவன், முதல்வன் என்றாற் போலப் பெரியோர்கள். உலக முதற்பொருளுக்கு இட்டு வழங்கிவரும் பெயர்கள், அம் முதற் பொருளின் ஒவ்வோரியல்பை நினைவூட்டும். கடவுள் என்னும் பெயர் யாவர் உணர்வையும் செயலையும் கடந்தது என, முதற் பொருளின் எட்டாத நிலையினை அறிவிக்கும் இறைவன் என்பது ! "எப்பொருளிலும் தங்குபவன் என அவன் எங்கும் உள்ள நிலைமை யைக் குறிக்கும். முதல்வன் என்பது எப்பொருட்கும் முற்பட்டு நின்று அதனைத் தொழிற்படுத்துபவன் என, எல்லாவற்றிற்கும் தான் சார்பாயிருந்து நடத்தும் வினை முதலாந் தன்மையை (பரம ஆதார. நிமித்த காரணன் ஆம் தன்மையை) உணர்த்தும். இவற்றைப் போலச் சிவம் என்னும் பெயர், முதற்கடவுள் எத்தகைய மாறுதலும் மாய்தல் இன்றித் தூய பேரின்பப் பொருளாய் அனுபவப்படும் தன்மையை உணர்த்துவதாகும். இது செம்பொருள் என்னும் சொல்லோடு ஒத்த பொருள் உடையது.முதல்வன், உலகப் பொருள்களுள் ஒன்றல்லனாய்ப் பெண், ஆண், அலியெனும் பெற்றினாய் நிற்றலின், அவன், இந்நெறிக்கண் சிவன் என ஆண்பாற் சொல்லாலும், சி வை (சிவா) எனப் பெண்பாற் சொல்லாலம், சிவம் என ஒன்றன்பாற் சொல்லாலும் ஒப்ப வழங்கப்படுதல் அறியத்தக்கது. 'பெண்ணாண் அலியெனும் பெற்றியன் காண்க' என்பது திருவாசகம்.சைவமும் வைணவமும்
Book Details
Book Title சைவமும் வைணவமும் (Saivamum vainavum)
Author தவத்திரு ஆறுமுக நாவலர்
Publisher ஸ்ரீசெண்பகா பதிப்பகம் (Srisenbaga Pathipagam)
Pages 212
Published On Jan 2010
Year 2010
Edition 2
Format Paper Back
Category Spirituality | ஆன்மீகம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அறுமுகநாவலர்- இவர் சாலிவாகன சகம் 1745 சித்ரபானு . பிறந்தவர். இவர் யாழ்ப்பாணத்து நல்லூரினர்; கக வேளாளர் குலத்தவர்; தூயசைவர். இவர் யார் கந்தப்பிள்ளை அநுட்டித்தவர். தமிழ் இலக்கிய, இலக்கணங்களைச், இவர் நைட்டிகப் பிரமசரியம் சேநாதிராய முதலியாரிடத்தும், சரவண முத்துப் புலவரிடத்தும் கற்றவர். கல்வியறிவே அன்றித..
₹67 ₹70
நன்னூல், தொல்காப்பியத்தையும், தொல்காப்பியம் இளம்பூரணர் உரையையும் முதல்நூலாகக் கொண்ட வழிநூல். இது தொல்காப்பியம் கண்ட தமிழியலைப் பின்பற்றி நன்னூல் தோன்றிய காலத்தில் இருந்த தமிழையும் உள்ளத்தில் கொண்டு தமிழ்மொழியை ஆராய்ந்துள்ளது. சுமார் 1700 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் நிகழ்ந்த தமிழியல் பார்வை இஃது ..
₹295 ₹310
தமிழ் நாட்டின் சமய வாழ்க்கையில் சைவமும், வைஷ்ணவமும் இரு கண்களாகத் திகழ்ந்து வருகின்றன. சிவபெருமானும், விஷ்ணுவும் முறையே இதற்குத் தெய்வங்கள். தேவாரத்தில் சிவனை விஷ்ணுவாகவும், பிரபந்தத்தில் விஷ்ணுவை சிவனாகவும் பாவித்துப் பாடிய பகுதிகள் உள்ளன. சிவனை, "அலைகடல் நடு அறிதுயிலமர் அரியுரு இயல்பான்" என்று சம்..
₹181 ₹190