Menu
Your Cart

விசும்பின் துளி

விசும்பின் துளி
-5 %
விசும்பின் துளி
நாஞ்சில் நாடன் (ஆசிரியர்)
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இலக்கியம், மொழி, மனித உறவுகள் என பல திசைகளிலும் பயணிக்கும் 40 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அனைத்துக் கட்டுரைகளிலும் வெளிப்படும் நூலாசிரியரின் தனித்துவமான பார்வை நம்மை வியக்க வைக்கிறது. படைப்பிலக்கியவாதியான நூலாசிரியரின் தமிழ் மொழியறிவைப் பறைசாற்றும் கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பல நூல்களுக்கு நூலாசிரியர் எழுதிய முன்னுரைகளும் உள்ளன. படைப்புகளைப் பற்றியும், படைப்பாளிகளைப் பற்றியும் அவரின் கருத்துகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. எழுத்தாளர் ஜெயமோகன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட பல படைப்பாளிகளுடனான நூலாசிரியரின் தொடர்பு, அவர்களுடனான அனுபவங்களைச் சொல்லும் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. "உன் கால் அதை எங்கு வேண்டுமானாலும் போட்டுக் கொள், என் மேல் போடாமல் இருந்தால் சரி' இவ்வாறு கட்டுரைகளினூடே அவ்வப்போது மின்னல்வீச்சு போன்ற சொற்றொடர்கள் பரவசப்படுத்துகின்றன." நூலின் தலைப்பாக அமைந்திருக்கும் "விசும்பின் துளி' கட்டுரையில் நீரோடு தொடர்புடைய பல சொற்களை விளக்குகிறார். மேகம், மழை, அருவி, ஆறு, பொய்கை, வாவி, தடாகம், சுனை, ஊருணி, அகழி, ஊற்று, கிணறு, கேணி, நீராவி, ஏரி, கழி, காயல்,கடல் என பல சொற்கள், பழந்தமிழிலக்கியங்களில் எவ்வாறு ஆளப்பட்டுள்ளன என்று விளக்குவது சிறப்பு. நாஞ்சில் நாடனின் பதின்மூன்றாவது கட்டுரை நூலிது. இதிலடங்கும் நாற்பது கட்டுரைகளும் சிறியதும் பெரியதுமாக 2014-2016 ஈராண்டுகளில் எழுதப்பெற்றவை.
Book Details
Book Title விசும்பின் துளி (isumbin-thuli)
Author நாஞ்சில் நாடன் (Nanjil Nadan)
ISBN 9788184467956
Publisher விஜயா பதிப்பகம் (vijaya pathipagam)
Pages 341
Year 2016
Edition 3
Format Paper Back
Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நாஞ்சில்நாடனின் கதை என்பது கண்ணால் கண்ட காட்சியையோ காதால் கேட்ட செய்தியையோ மனதால் விரித்துகொண்ட கற்பனையையோ மாத்திரம் நம்பி எழுதப்பட்ட புனைவு அல்ல. மாறாக அவருடைய கதைகளின் சாராம்சத்தில் உள்ளுறைந்திருப்பது தொன்மையான ஒரு நிலமும், அதன் மொழியும் அவற்றின் தொகை விரிவான பண்பாட்டு செழுமையும் ஆகும். பின..
₹276 ₹290
கவிமணி ஒரு ‘மான்மியம்’ படைத்தார்; நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமுதாயம் ஒரு திருப்பங்கண்டது. சமுதாயத்தை மற்றொரு திருப்பத்துக்குச் சித்தப்படுத்துவது நாஞ்சில் நாடனின் இந்த ‘இரண்டாம் மான்மியம்.’ சமுதாயத்தின் மூத்த தலைமுறையைச் சப்புக்கொட்ட வைத்து, அடுத்த தலைமுறையைச் சிந்திக்க வைத்து, இளைய தலைமுறையைச் சீ..
₹152 ₹160
இத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை. ஜன்னல் இருமாத இதழில் வெளிவந்தவை. ஆகவே அனைத்துத் தரப்பு வாசகர்களுக்குமான எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை நாம் அனைவருக்கும் க..
₹114 ₹120
தலைகீழ் விகிதங்கள்நாஞ்சில் நாடனின் நாவலான 'தலைகீழ் விகிதங்கள்' உண்மையின் ரீங்காரம் நிறைந்தது. சுய அனுபவத்தை மதிக்கும் எழுத்தாளர்களிடம் மட்டுமே நாம் கேட்கும் ரீங்காரம் இது ... அவர் எதிர்கொள்ளும் வாழ்வு இன்றைய தமிழ் வாழ்வின் பிரதிபலிப்புகள் நிறைந்தது. ஜாதி, மூடநம்பிக்கைகள், வறட்டு ஜம்பம், பிற்போக்கு ஆ..
₹371 ₹390