Menu
Your Cart

பாரபாஸ் (We Can Books)

பாரபாஸ் (We Can Books)
-10 %
பாரபாஸ் (We Can Books)
₹130
₹144
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இருவரில் ஒருவரை சிலுவையில் அறையலாம் என்ற நிலையில், அரசுக்கு எதிராக செயல்பட்ட இயேசு மிக ஆபத்தானவராக கருதப்படுகிறார். ஆகையால் இயேசுவின் மரணதண்டனையை உறுதி செய்து, திருட்டு குற்றத்திற்கு தண்டனைக்குள்ளான மற்றொருவனை விடுக்கிறார்கள். விடுவிக்கப்பட்ட அந்த மனிதன்தான் பாரபாஸ். சிலுவையை சுமந்து செல்லும் இயேசுவை தன்னிச்சையாக தொடர்கிறான் பாரபாஸ். சிலுவையில் அறையப்பட்ட அந்த மனிதனைப் பார்க்கிறான். அந்த மனிதனின் உயிர் உயிர் அவனை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் கரைந்துகொண்டிருந்தது. தன்னை விடுவித்துவிட்டு இவனை சிலுவையில் அறைகிறார்கள் என்றால் இவன் தன்னை விட பெரும் குற்றத்தை செய்தவனாக இருக்கவேண்டும். ஆனால் இந்த மனிதனை பார்த்தால் அப்படி தெரியவில்லையே. உடல் மெலிந்தவனாக பலம் அற்றவனாக இருக்கும் இவன் அப்படி என்ன குற்றம் செய்திருப்பான் . எல்லா கண்களும் தன்னையே மொய்ப்பதாக உணர்கிறான். இறந்துகொண்டிருக்கும் இந்த மனிதனின் தாயைப் பார்க்கிறான். மற்றவர்களின் துயரத்திற்கும் இந்த பெண்ணின் துயரத்திற்கும் பெரிய வேறுபாட்டை உணர்கிறான். மற்றவர்களை விட இவள் அதிகமாக அவனுக்காக துயருற்றிந்தாள். மகன் சிலுவையில் தொங்குவதற்கு மகனையே குற்றம் சாட்டிக் குறைக்கூறுவது போன்ற பாவம் அவள் முகத்தில் இருந்தது. பாரபாசுக்கு உறவு என்று யாரும் கிடையாது. ஒருவேளை தனக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் தனக்காக யார் அழுவார்கள் என்று எண்ணிப் பார்க்கிறான். இயேசுவின் உயிர் பிரிகிறது. மகனின் உடலை பார்த்த தாய் தன் துயரத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்தமுடியாமல் திணறிக் கொண்டிருக்கையில் அங்கிருந்த ஒரு பெண் பாரபாஸை அத்தாயிடம் சுட்டிக்காட்டி ஏதோ சொல்கிறாள். அந்த பார்வையிலேதான் எவ்வளவு பரிதாபமும், குற்றம் சாட்டும் தன்மையும் நிறைந்திருந்தது. அந்த தாயின் பார்வையை தன் வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாது என்பதை உணர்கிறான். கல்லறையில் அந்த மனிதனை அடக்கம் செய்து ஒரு பெரிய கல்லை வைத்து மூடும்வரை அங்கு நின்றுகொண்டிருந்தவன் அந்த இடத்தை விட்டு ஜெரூசலத்தை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறான்.
Book Details
Book Title பாரபாஸ் (We Can Books) (Parapas (We Can Books))
Author பேர் லாகர் குவிஸ்டு
Translator க.நா.சுப்ரமண்யம் (Ka.Na.Subramanyam)
ISBN 9788192551500
Publisher வளரி | We Can Books (We Can Books)
Pages 142
Published On Oct 2018
Year 2018
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, Christianity | கிறிஸ்தவம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சமூக அந்தஸ்தில் அந்தணர் முதல் தீண்டாதார் வரை, நாசூக்கு நாராயணர்கள் முதல் ரவுடிகள்வரை, நிலச்சுவான்தார்கள் முதல் பிச்சைக்காரர் கள், பாலியல் தொழிலாளிகள் வரை வெவ்வேறு தளங்களில் பிரிந்தும் இணைந்தும் உருவாகும் சமூக உறவுக் கண்ணிகளைச் சுருக்கமாகவும் நுட்பமாகவும் கோடிகாட்டுகிறது இந்நாவல். சமூக அமைப்பின் அத..
₹315 ₹350
The growth of Soil நட்ஹாம்சன் நார்வேஜியன் மொழியில்  எழுதி நோபல் பரிசு பெற்ற நாவல். தமிழில் க.நா.சு. ஆங்கிலம் வழியாக 'நிலவளம்' என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்கையை ஒட்டி வாழ்ந்த மனிதர்களின் கதை. காட்டை சீர்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக விளைநிலமாக்கி மனிதன் மிருகங்களுடனு..
₹396 ₹440
அவதூதர்' நாவலை டைப் செய்து அப்பொழுது விளம்பரப்படுத்தப்பட்டிருந்த ஒரு சர்வதேச நாவல் போட்டிக்கு அனுப்பினேன். நாவலுக்குப் பரிசு வரவில்லை. ஆனால் பிரசுரிக்க ஏற்றுக்-கொண்டிருப்பதாகச் சொல்லி ஒரு ஆயிரம் டாலர் ராயல்டி முன்பணமும் கான்ட்ராக்ட்டும் அமெரிக்கப் பிரசுரலாயத்திலிருந்து வந்தது. அச்சுக்கு நூலைக் கொடுக..
₹216 ₹240
எனக்கு மர்ம நாவல்கள் படிப்பதில் கனமான நாவல்கள் படிப்பது போல ஈடுபாடு உண்டு. மர்ம நாவல்களையும் இலக்கியத் தரமுள்ளதாக பிரெஞ்சு நாவலாசிரியர் ஜியார்ஜஸ் ஸிமனான் என்பவர் எழுதுகிறார் என்பதைக் கவனித்தபோது ஏன் அம்மாதிரி சில நாவல்கள் எழுதக் கூடாது என்று தோன்றியது.சிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு சம..
₹126 ₹140