Menu
Your Cart

ஆளைப்பாரு சோளக்காட்டுல!

ஆளைப்பாரு சோளக்காட்டுல!
-5 %
ஆளைப்பாரு சோளக்காட்டுல!
வா.மு.கோமு (ஆசிரியர்)
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எது எப்படியாயினும் அவள் தன் முழு உடலையும் கட்டெறும்புகளுக்குத் தின்னக் கொடுத்துக் கொண்டிருந்த வள்ளலாகவும் இருந்தாள். கிழவியின் உடலிலிருந்து துர்நாற்றமெதுவுமில்லாமலிருந்தது. அதற்குக்காரணம் அவள் தினமும் பூஜையறையில் பற்றவைக்கும் சாம்பிராணி வில்லைகளாகவும் இருக்கலாம்தான். பதிலாக இன்னமும் வீட்டிலிருந்து விடைபெற்றுப் போகாமல் வீட்டைத்தாங்கி நின்றிருந்த தூண்களில் ஒன்றை இறுக்கமாய்க் கட்டிக் கொண்டிருக்கும் மரணமானது வீட்டினுள் கட்டெறும்புகளை அவ்வப்போது கொத்தி உண்டு விட்டு பரணில் பறந்தபடி ஏறிப்படுத்துறங்கும் சேவலையும் வெடையையும் பார்த்துக் கொண்டே அவையிரண்டின் பிரகாசிக்கும் அழகில் சொக்கி நின்றுவிட்டது சிலைபோல தாய்க்கிழவி கணவனோடு வாழ்ந்த காலம் ரொம்பவுமே குறைச்சல்தான். எந்த நேரமும் கொட்டாவி விடும் நோயால் பீடிக்கப்பட்டிருந்தவன் வானில் நட்சத்திரங்கள் ஒன்றுகூட இல்லாத இரவொன்றில் கண்ட கனவில், முள்ளுப்பாதையில் காலில் செருப்பில்லாமல் சென்று செத்துப் போனதாய் ஊராருக்கு தாய்க்கிழவி சொல்லிக் கொண்டிருந்தாள். சாவு என்றால் நீருள்ள கிணற்றில் கல்லை உடலில் கட்டிக் கொண்டு விழுந்த சாவுதான் சாவுகளிலேயே மேன்மையானதென்றே பேசும் ஊராருக்கு தாய்க்கிழவியின் கணவனது சாவு பிடிக்கவில்லை. அவர்களது பெரிய வருத்தத்தை ஒரு பாடையிலும், அவளது கணவனை ஒரு பாடையிலும் சுடுகாடு தூக்கிப் போனவர்கள் ஒரே குழியில் அவனது பழைய துணிமணிகளோடு சேர்த்து அவர்களது வருத்தத்தையும் சேர்த்துப் புதைத்தார்கள்.
Book Details
Book Title ஆளைப்பாரு சோளக்காட்டுல! (aalapaaru-solakaatula-va-mu-komu)
Author வா.மு.கோமு (Va. Mu. Komu)
ISBN 978-93-93650-58-0
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Published On Jan 2024
Year 2024
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பாலின்பத்தின் வேட்கைகளும் வெளிப்பாடுகளும் ஒரு கலாச்சார வெளியில் எவ்வாறு நிகழ்கின்றன என்பதன் சாட்சியமே வா.மு.கோமுவின் இந்த நாவல். ஆபாசமென்றும், மிகை என்றும் சொல்லக் கூடாதவை என்றும் சொல்லப்பட்டவற்றை சொல்வதன் மூலம் நம் அசலான இருப்பை மிகவும் நெருங்கி வருகிறார் வா.மு.கோமு. நம்முடைய ஆபாசங்களும், இரகசிய வி..
₹228 ₹240
இந்தக் கதைகளை மயானத்தில் அரிக்கேன் விளக்கு பற்றவைத்து சம்மணமிட்டு அமர்ந்து பால்பாய்ண்ட் பேனாவில் மேப்லித்தோ தாளில் எழுதியதாக இதன் ஆசிரியன் தெரிவிக்கிறான். விளக்கு வெளிச்சத்தால் ஈர்க்கப்பட்டு வந்த வண்டொன்று ஆசிரியனது இடது காதில் நுழைந்து மூளைக்குள் சென்று கொஞ்சம் உறிஞ்சி விட்டு வெளியேற வழி தெரியாமல் ..
₹124 ₹130
இரண்டு முறை சாகித்ய அகடாமி விருது வாங்கியவர் மூன்று முறை ஞானபீடம் இவரது வீடு தேடி வந்தது. தமிழக அரசு அளித்த சிறந்த நாவலுக்கான விருதினைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டிருக்கிறார் இவர் என்றெல்லாம் மரபான வரிகளுக்குள் புதைத்து விட முடியாது நம் வா.மு.கோமுவை. சுருக்கமாக சொன்னால் குசும்பின் சிகரம், கொங்கு ..
₹171 ₹180