Menu
Your Cart

ஏமாளியும் திருடனும்

ஏமாளியும் திருடனும்
-7 % Out Of Stock
ஏமாளியும் திருடனும்
ச.மாடசாமி (ஆசிரியர்)
₹14
₹15
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எட்டுக் கதைகளின் தொகுப்பு இது.தமிழ்நாட்டில் அறிவொளிக் காலத¢தில் தொகுக்கப்பட்ட கதைகளும் சில வெளிநாட்டுக் கதைகளும் விவாதக் குறிப்புகளுடன் தரப்பட்டுள்ளன.எவரும் வாசித்து விடக்கூடிய எளிய நடையில் கதைகள் சொல்லப்பட்டு எவரிடம் சென்று இக்கதைகள் வாசிக்கப்பட வேண்டும் என்கிற சுவாரஸ்யமான சிபாரிசுகளுடன் வந்துள்ள புத்தகம்.உதாரணத்துக்கு ஒரு கதை.மறைந்த அறிஞர் ஏ.கே.ராமானுஜம் அடிக்கடி எடுத்துக்காட்டிப் பேசும் கதை.ஒரு ஊரில் ஒரு விதவைத்தாய்.அவளுக்கு இரண்டு மகன்கள் இருவருக்கும் கல்யாணம் ஆனதும் கிழவிக்கு மரியாதை குறைகிறது.மகன்களும் மதிப்பதில்லை.ஆகவே மருமகள்களும் மதிப்பதில்லை.நாலு பேரும் திட்டத் திட்ட தாயின் மனப்பாரம் பெருகி உடலும் பருத்து விடுகிறது.முடிவில் அவள் ஊரின் கடைசியில் நிற்கும் சத்திரத்தின் குட்டி சுவருடன் பேசத் துவங்குகிறாள்.மூத்த மகன் ப்ச்சின் கொடுமையைச் சொல்லி அழவும் ஒரு சுவர் இடிந்து விழுகிறது.அவளுடைய பாரம் கொஞ்சம் குறைக¤றது.இப்படியே நாலுபேர் கொடுமையும் சொல்லி முடிக்க நாலு குட்டிச்சுவர்களும் இடிந்து வீழ அவள் உடலும் மெலிந்து போகிறாள்.இப்போது அவளைப் பார்க்கும் மக்கள் இரக்கப்படுகிறார்கள்.இது கதை.இக்கதையை பேச்சுப் புறக்கணிக்கப்பட்ட குடும்பங்களிலும்,வகுப்பறைகளிலும்,அலுவலகங்களிலும் வாசிக்க வேண்டுமென தொகுப்பாளர் குறிப்பு முடிகிறது.
Book Details
Book Title ஏமாளியும் திருடனும் (Yemaaliyum Thirudanum)
Author ச.மாடசாமி (Sa.Maatasaami)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 0

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழர் திருமணம் அன்று முதல்... இன்று வரைமேற்கத்திய கோட்டும், விஸ்கியும் கலந்த அளவுக்கு துணைவர்களை தேர்ந்தெடுக்கும் முறையில் திருமணத்தை தனிப்பட்ட சொந்தச் சடங்காக எளிய விருந்துடன் நடத்தும் முறையில் மேற்கத்திய பண்பாடு வந்துக் கலக்கவில்லை...
₹24 ₹25
வேத மரபும் பக்தி மரபும் வலியுறுத்திய சடங்குகளுக்கு எதிரானவர்களாகவும், கோயிலை - சிலை வழிபாட்டை மறுப்பவர்களாகவும் சித்தர்கள் இருந்தார்கள் என்பது உண்மைதான். இருப்பினும், மரபின் நிழல்களை முற்றிலும் அவர்கள் கடந்துவிடவில்லை என்பதும் உண்மை...
₹48 ₹50
கல்விச் சீர்திருத்தம், கல்விக்கூட சுதந்திரம், மாற்றுக்கல்வி ஆகியவை பற்றி சமீப ஆண்டுகளில் நிறைய விவாதங்கள் நடைபெறுகின்றன. பள்ளிக்கல்வி பற்றி இப்படி நிறைய கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தாலும், கல்லூரி மாணவர்களைப் பலரும் கண்டுகொள்வதில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்பும் நூல் இது! 'ஒரு வகுப்பறை யாருக்குச் ச..
₹124 ₹130