Menu
Your Cart

கடலுக்கடியில் ரகசிய உரையாடல்

கடலுக்கடியில் ரகசிய உரையாடல்
-5 %
கடலுக்கடியில் ரகசிய உரையாடல்
சூ.ம.ஜெயசீலன் (ஆசிரியர்)
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சாகசத்துக்காக, ஆன்மிகத் தேடலுக்காக, வரலாற்று உண்மைகளை கண்டறி வதற்காக என நீண்ட நெடும் பயணங்களை மேற்கொண்ட மகத்தான யாத்திரிகர்களை பூமி தரிசித்திருக்கிறது. சீனாவில் இருந்து இந்தியா வந்தடைந்தார் உலகின் மூத்த பயணி யுவான் சுவாங். தனது 20 வயதில் புத்தத் துறவியாக மாறிய யுவான் சுவாங், புத்த மத நூல்களைத் தேடி சீனா முழுவதும் பயணம் செய்தார். அந்தப் பயணத்தின் வழியே சேகரித்த நூல்களுக்கு இடையில் தென்பட்ட முரண்பாடுகள் தனது தேச எல்லையைக் கடக்க அந்த இளம் துறவியை உந்தித்தள்ளியது. அப்படித்தான் காஷ்மீர் முதல் காஞ்சிபுரம் வரை 17 ஆண்டுகால பயணமாக அது உருவெடுத்தது. வெறும் சென்றோம், ஊர் சுற்றினோம் என்றில்லாமல் தான் கடந்து வந்த பாதையை முறையாகத் தொகுத்து ஆவணப்படுத்தி வரலாற்றில் தனக்கென தனித்துவமான இடம்பிடித்துச் சென்றார். இதுபோன்று வரலாற்று நெடுகிலும் அபாரமான பயணங்களை மேற்கொண்ட ஆளுமைகள் பலருண்டு. அவ்வளவு ஏன் மனிதகுலத்தின் வளர்ச்சிக்கும், புதிய தேசங்கள், கண்டங்கள் கண்டறியப்பட்டதற்கும் வழிகோலியது பயணம்தானே! இது மாதிரியான வேறு பல பயணக் கதைகளின் தொகுப்பாக, ‘கடலுக்கடியில் ரகசிய உரையாடல்’ (சிறகை விரி...உலகை அறி!) புத்தகத்தை தமிழ் திசை பதிப்பகம் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். நூலாசிரியர் சூ.ம.ஜெயசீலன் பயணப் பிரியர். அதிலும் தன்னந்தனியாக பயணம் செய்வதில் பேரார்வம் கொண்டவர். பயணம் மீது கொண்ட காதலுக்கு இணையான ஈடுபாட்டை எழுத்திலும் கொண்டவர். இலங்கை முதல் அமெரிக்காவரை 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார். காமதேனு மின்னிதழில், ‘சிறகை விரி... உலகை அறி’ என்ற தலைப்பில் தொடராக வெளிவந்த கட்டுரைகளுக்கு கிடைத்த பரவலான வரவேற்புக்கு பிறகு அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கட்டுரைகளை மூன்று பாகங்கள் ஆகப் பிரித்து முதல் பாகமாக, ‘மண்ணுக்குள் அரண்மனையும் மரண ரயில் பாதையும்’ மற்றும் இரண்டாம் பாகமாக ‘சிறகை விரி... உலகை அறி!: ஆஸ்விட்ச் வதை முகாமும் சாக்ரடீஸின் கால் தடமும்’ என்ற தலைப்பிட்ட புத்தகத்தை அண்மையில் வெளியிட்டோம். தற்போது ‘கடலுக்கடியில் ரகசிய உரையாடல்’ (சிறகை விரி...உலகை அறி!) மூன்றாம் பாகமாக, இந்நூலை வெளியிடுகிறோம். நிச்சயம் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் வாசகர்களை அந்த நாட்டிற்கே கைபிடித்து அழைத்துச் செல்லும். இதுவரை பயணம் செய்வதில் ஆர்வம் கொள்ளாதவர் மனத்திலும் ஆசை துளிர்க்கச் செய்யும். ஒவ்வொரு நாட்டின் முக்கிய நகரங்கள், அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள், சின்னங்கள், அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் உள்ளிட்டவை குறித்து அழகிய புகைப்படங்களுடன் கூடிய அருமையான பயண வழிகாட்டியாக அமைந்திருக்கிறது இந்த நூல்.
Book Details
Book Title கடலுக்கடியில் ரகசிய உரையாடல் (Kadalukkadiyil ragasiya uraiyadal)
Author சூ.ம.ஜெயசீலன் (Soo.Ma.Jeyaseelan)
Publisher இந்து தமிழ் திசை (Hindu Thamizh Thisai)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Travelogue | பயணக்குறிப்பு, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஒரு தாய், அழுத தமது குழந்தையை மடியில் கிடத்தியிருந்தாள். மண்ணில் சிதறடிக்கப்படாது இன்னும் சுரந்து கொண்டிருக்கும் தம் பாலை உணவாகப் புகட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். குழந்தையும் மகிழ்ச்சியோடு சுவைத்திருக்கிறது. இதனிடையே எங்கிருந்தோ வந்த ஷெல் அந்தத் தாயின் கழுத்தில் பட்டிருக்கிறது. அவள் அப்படியே குழந்த..
₹124 ₹130
"நீங்கள் சொல்லுவதை நாங்கள் கேட்டே ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். வாதம், பிரதிவாதம் இல்லாமல் ஒரு தீர்ப்பமைந்தால் அது முழுமையாகாது தானே. அதனால், நாங்கள் சொல்லுவதையும் கேட்க நேரம் ஒதுக்குங்கள்” என உங்களிடம் பேச வருகிறார்கள். வாருங்கள் குழந்தைகள் பேசுவதைக் கேட்போம்...
₹76 ₹80
ஆன்டன் செகாவ்வின் கதைகள் நிதர்சன உலகைப் பிரதிபலிப்பவை. இவரது கதாபாத்திரத்தின் மீதான விமர்சனமோ, கிண்டலோ இவரது எழுத்துக்களில் இருக்காது. கருணை நிறைந்த கதாபாத்திரங்கள், இறந்த குழந்தையை வீட்டுக்குச் சுமந்து செல்லும் பெண்ணிடம் கனிவாகப் பேசும் முதியவர் போன்ற கதாபாத்திரங்கள் இவர் கதைகளில் ஏராளம். ரோமி..
₹119 ₹125