Menu
Your Cart

கடவுள் மட்டும் எப்படி ஜெயிக்கிறார்

கடவுள் மட்டும் எப்படி ஜெயிக்கிறார்
-5 %
கடவுள் மட்டும் எப்படி ஜெயிக்கிறார்
ஶ்ரீநேசன் (ஆசிரியர்)
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்த நவீன வாழ்வுதரும் நம்பிக்கைகளுடன் மட்டும் தன்னைக் கரைத்துக்கொள்ளாமல், முன்பிருந்த தன் வாழ்வை அதன் உலகை அதன் வாழ்வியல் காட்சிகளை அற்புதமான கவிதைகளாக்கியுள்ளார். பிறரது கவனத்தை ஈர்ப்பதற்கும், ரசனைகளை வெளிப்படுத்தவும், மேதமையைக் காட்டவும், வாழ்க்கைக்காக பயன்படுத்திக்கொள்ளவும் தெரிந்தவனுக்கு இக்கவிதைகளை எழுதத் தெரிந்திருக்காது. பெரும் காலவோட்டத்தில் தன்னைக் கரைத்துக்கொள்ளாமல் ‘தொடர்ந்து எழுது’ என்ற புத்திமதிகளுக்கும் செவிசாய்க்காமல் தோன்றியபோது எழுதிக்கொண்டிருகிறார். இத்தன்மை கொண்டவர்கள் பெரும் படைப்பாக்கங்களுக்குப் பிறகும் அதிலிருந்து விலகி பிறிதொரு உலகிலும், தம்மை ஒப்புக்கொடுத்திருப்பார்கள். ஸ்ரீநேசன் அவர்களில் ஒருவர்” ~ கண்டராதித்தன் தொகுப்பாசிரியராக எழுத்தாளர் ஜீ.முருகன் அவர்கள் தேர்ந்தெடுத்துத் தொகுத்த கவிஞர் ஸ்ரீநேசன் கவிதைகள் அடங்கிய புதியநூல் ‘கடவுள் எப்படி ஜெயிக்கிறார்’ தன்னறம் நூல்வெளி வாயிலாக வெளியீடு கொள்கிறது. வருகிற ஜனவரி புத்தகக் கண்காட்சியில் இத்தொகுப்பு வெளியாகிறது. இக்கவிதைகளின் முந்தைய பதிப்புகளை வெளியிட்ட எல்லா பதிப்பகத் தோழமைகளுக்கும் இக்கணத்தில் நன்றியுரைக்கிறோம். தமிழின் சிறந்த மூத்த கவிஞர்களில் ஒருவராகிய ஸ்ரீநேசனின் கவிதைகளை வெளியிடுவதில் நிறைமகிழ்வு அடைகிறோம். ‘இயற்கை இறைக்கு நிகரானது’ என்கிற புள்ளியை நோக்கி வாசகமனதை அழைத்துப்போகும் இவருடைய கவிதைகள் நம் அகத்திற்கு அணுக்கமான கண்டடைதல்கள் எனலாம்.
Book Details
Book Title கடவுள் மட்டும் எப்படி ஜெயிக்கிறார் (Kadavul Mattum Eppadi Jeyikirar)
Author ஶ்ரீநேசன்
ISBN 9789395560061
Publisher தன்னறம் நூல்வெளி (Thannaram Publications)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

"நள்ளிரவில் இயேசு' எந்த மொழித் தொகுப்பிலும் இடம் பெறக்கூடிய நல்ல கவிதை - ஞானக்கூத்தன்...
₹105 ₹110
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழிலக்கியச்சூழலில் தனக்கேயுரிய அகவளத்தோடு, குறிப்பிடத்தக்க மூத்த கவிஞர்களில் ஒருவராகத் திகழ்பவர் ஸ்ரீநேசன். கவிஞர் ஸ்ரீநேசன் அவர்களால் எழுதப்பட்ட புதிய கவிதைகளின் தொகுப்பு ‘தப்பு விதை’ தன்னறம் நூல்வெளி வாயிலாக விரைவில் வெளியீடு கொள்கிறது. சலனமற்ற குளத்தில்..
₹86 ₹90