Menu
Your Cart

நாக்கை நீட்டு

நாக்கை நீட்டு
-10 %
நாக்கை நீட்டு
மா ஜியான் (ஆசிரியர்), எத்திராஜ் அகிலன் (தமிழில்)
₹81
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமது திருமண உறவு சிதைந்துபோன நிலையில், ஒரு சீன எழுத்தாளர் திபெத் நாட்டுக்குப் பயணம் செல்கிறார். அங்கே இருக்கும் கிராமப்புறங்களில் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் வேளையில் அவருக்கு, ஒரு விண்ணடக்கத்தை நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிட்டுகிறது; தன்னுடைய மகளோடு படுத்துறங்கிய பாவத்திற்குப் பரிகாரம் தேடுவதற்காக யாத்திரை சென்றுகொண்டிருக்கும் ஒரு நாடோடியோடு கூடாரத்தைப் பகிர்ந்துகொண்டு, தங்க நேர்கிறது; காற்றால் உலர்ந்துபோன தன்னுடைய காதலியின் உடலைக் குகை போன்ற குடியிருப்பின் சுவரில் தொங்கவிட்டிருக்கும் ஒரு வெள்ளி ஆசாரியைச் சந்திக்க வாய்க்கிறது; பௌத்தமத தீட்சை பெறும் சடங்கின் போது உயிர்விட்ட வாழும் புத்தரின் மறுபிறவியான ஒரு பெண்ணைப் பற்றிய கதையைக் கேட்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. திபெத் எனும் காற்றழுத்தம் குறைந்த உயர்ந்த பீடபூமியில் நடக்கும் இந்த நிகழ்வுகள், உண்மைக்கும் புனைவுக்குமான வேறுபாட்டைப் பிரித்தறிய முடியாமல் நம்மைத் திணற வைக்கிறது. இதன் மூலம் அந்த எழுத்தாளர் ஓர் அயல் கலாச்சாரத்தால் அதன் ஆழத்துக்கு இழுபட்டுச் செல்கிறார்; அது அவருடைய கனவுகளிலும் துன்புறுத்துகிறது. இதுவே படைப்பின் வெற்றியாகவும் அமைந்துவிடுகிறது. *** 1987ஆம் ஆண்டு சீனாவில் தடைசெய்யப்பட்ட புகழ்பெற்ற ‘நாக்கை நீட்டு’ எனும் இந்தக் கதைப் புத்தகம், நூலாசிரியர் மா ஜியான் நாடு கடத்தப்படுவதற்கும் அவருடைய படைப்புகளைச் சீனாவில் வெளியிட தடைகளை நீடிக்க வைப்பதற்கும் இன்றும் காரணமாக இருக்கிறது.
Book Details
Book Title நாக்கை நீட்டு (Naakkai Neettu)
Author மா ஜியான் (Maa Jiyaan)
Translator எத்திராஜ் அகிலன்
ISBN 9788177203035
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 96
Year 2019
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தானே யுத்தத்தில் படைவீரனாக இணைந்து, போர்க் கைதியாகப் பிடிபட்டு, விடுவிக்கப்பட்டு,பின் சராசரி மனிதனின் பார்வையில், யுத்தத்தின் போக்கையும் மக்களின் செயல்பாடுகளையும் மன ஓட்டங்களையும் தனக்கே உரிய தனித்துவமான யதார்த்த எள்ளலுடன் லூயிஸ் பால் பூன் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.ஒரு பத்திரிக்கையாளரின் பகைப..
₹441 ₹490
ஐஸ்லாந்து நாட்டின் கடலோரக் கிராமம் ஒன்றில் தற்செயலாகப் பிறக்க நேர்ந்த, தாய் தந்தையரை அறியாத அல்ஃப்கிரைமுரின் இளமைக்கால மனப்பதிவுகளினூடாக விரிகிறது இந்த நாவல். அவன் வளரும் ப்ரெக்குகாட் இல்லம் விசித்திர மனிதர்களின் வாழ்விடம். தனது தாத்தாவாக வரித்து கொண்ட ப்யோர்னைப் போலவே தானும் ஒரு செம்படவனாக வேண்..
₹338 ₹375
கிழக்கின் கலாச்சார வளத்தையும் மேற்கின் நவீனத்தையும் தன்னில் ஒருங்கே ஊடுபாவியது ஓரான் பாமுக்கின் கதையுலகம். பாஸ்ஃபரஸ் நதியின் இரு கரைகளாக இருக்கும் இந்த உலகங்களுக்கு இடையிலான முரண்களையும்ம் அடையாளச் சிக்கல்களையும் தொடர்ச்சியாக விசாரணை செய்வதால் அவரது எழுத்தின் சமகாலப் பொருத்தப்பாடு மிகுந்த முக்கியத்த..
₹531 ₹590
தனக்கு மிகவும் பரிச்சயமான சூழலில் மேலும் மேலும் ஓட்டைகளையும் பிளவுகளையும் அய்வாஸின் தன்னிலைக் கதைசொல்லி கண்டுபிடிக்கிறான். அதன் விளைவாக முழுமையான மற்றொரு நகரமே அவனுக்குத் திறந்து கொள்கிறது. நம்முடைய அன்றாட அலுவல்கள் நிறைந்த உலகில், நம் கண்களுக்குப் புலனாகாமலேயே இருக்கும் மற்றொரு வெளி. இந்தப் புலனாகா..
₹216 ₹240