Menu
Your Cart

ஆதிச்சநல்லூர் - கீழடி மண்மூடிய மகத்தான நாகாிகம்

ஆதிச்சநல்லூர் - கீழடி மண்மூடிய மகத்தான நாகாிகம்
-5 %
ஆதிச்சநல்லூர் - கீழடி மண்மூடிய மகத்தான நாகாிகம்
அமுதன் (ஆசிரியர்)
₹171
₹180
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆதிச்சநல்லூர் & கீழடிமண் மூடிய மகத்தான நாகரிகம் மிகப் பழங்காலத்திலேயே தமிழர்கள் நாகரிகத்தில் முன்னேறி இருந்தார்கள் என்பதும், அவர்களது நாகரிகம்தான் இங்கே இருந்து வடக்கே பரவியது என்பதற்கும் ஆதாரமாக இருப்பது ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடியில் நடந்த அகழாய்வுகளே. அதை ஆய்வு கண்ணோட்டத்தில் "தோண்டி" எடுத்து தமிழ் இனத்தின் பெருமையை இந்த நூலில் ஆசிரியர் அமுதன் பறைசாற்றி இருக்கிறார். ஒரு பல்கலைக் கழகம் குழு அமைத்து ஆற்ற வேண்டிய பெரும் பணியை தனி மனிதராக ஆற்றி இருக்கிறார். சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தைய நாகரிகம் தமிழர்களின் நாகரிகமே என்பதை இந்தநூலின் ஒவ்வொரு பக்கமும் வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. தினத்தந்தி ஞாயிறு மலரில் 49 வாரங்கள் வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பை பெற்ற தொடர். இப்போது அழகிய வண்ணப்படங்களுடன் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் நூல் வடிவம் பெற்றுள்ளது. இந்த நூலை அறிவுலகம் மகிழ்ந்து பார்க்கும்; ஆராய்ச்சி உலகம் வியந்து பார்க்கும். ஒரு தவத்தைப்போல இந்தத் திருப்பணியை மேற்கொண்ட ஆசிரியரைப் பாராட்டுகிறேன். இந்த அரிய நூலை அழகுறத் தந்த தினத்தந்திக்கு என் வாழ்நாள் வணக்கம். என்று அணிந்துரையில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதி இருப்பது நூற்றுக்கு நூறு உண்மை -அமுதன் மதுரை மண்ணின் மைந்தரான அமுதனின் இயற்பெயர் எம். தனசேகரன். 'தினத்தந்தி' செய்தி ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர், பத்திரிகைத் துறையில் 45 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். அப்துல்கலாம் வாழ்க்கை வரலாற்றை, 'கலாம் ஒரு சரித்திரம்' என்ற பெயரிலும், தஞ்சைப் பெரிய கோவில் பற்றி 'ஆயிரம் ஆண்டு அதிசயம்' என்ற பெயரிலும், எகிப்தின் பிரமிப்பூட்டும் பிரமிடுகள் பற்றி 'புதையல் ரகசியம்' என்ற பெயரிலும், இந்தியாவில் பழங்காலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் விஞ்ஞானம் உள்பட பல துறைகளில் நிறைந்த அறிவு பெற்று இருந்தார்களா என்பது குறித்து, 'பழங்கால இந்தியர்களின் விஞ்ஞானம்' என்ற பெயரிலும், இவர் எழுதிய புத்தகங்கள் பல பதிப்புகளைக் கண்டு மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Book Details
Book Title ஆதிச்சநல்லூர் - கீழடி மண்மூடிய மகத்தான நாகாிகம் (Aadhichanallur keezhadi Manmoodiya makathaana nagarigam)
Author அமுதன் (Amudhan)
ISBN 9788193298671
Publisher தினத்தந்தி (Thinathanthi)
Pages 272
Published On Jan 2017
Year 2017
Edition 1
Format Paper Back
Category Archeology | தொல்லியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மக்களின் ஜனாதிபதி" "ஏவுகணை நாயகன்" "இளைஞர்களின் வழிகாட்டி" என்று அழைக்கப்பட்டவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். மாணவர் சமுதாயத்தின் மீது அளப்பரிய அன்பு வைத்திருந்த அவரது இறுதி மூச்சு, மாணவர்கள் மத்தியிலேயே பிரிந்தது.எளிய குடும்பத்தில் பிறந்து மக்கள் மனதில் உயர்ந்த இடத்தைப் பெற்ற அந்த மாமனிதருக்காக இந்தியாவே..
₹171 ₹180
இந்நூலைப்பற்றி உலக நாயகன் கமல் ஹாசன்..... “ஒரு சுவாரசியமான மர்ம நாவலைப் படிப்பது போல இந்த நூலை வாசிக்க முடியும். சொந்த விருப்பு வெறுப்புகளைக் கலக்காமல், முழுக்க முழுக்க வரலாற்று ஆதாரங்களைப் பின்னணியாகக் கொண்டு இந் நூல் எழுதப்பட்டுள்ளது." “மருதநாயகத்தின் வாழ்க்கைச் சரிதத்தை அனைவரும் வாசித்தறியும்..
₹309 ₹325