Menu
Your Cart

அறுவடை

அறுவடை
-5 %
அறுவடை
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆர். ஷண்முகசுந்தரம் எழுதியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களில் பல ‘குறுநாவல்’ என்னும் வரையறைக்குள் அடங்குபவை. அவற்றுள் ‘அறுவடை’க்கு முக்கியமான இடம் உண்டு. பத்தாண்டுக்கும் மேல் எழுதாமல் இருந்துவிட்டுக் க.நா.சுவின் இடையறாத வற்புறுத்தலால் திரும்பவும் எழுத வந்த ஷண்முகசுந்தரம் ‘அறுவடை’யை எழுதினார். புதிதாக எழுதத் தொடங்கும் எழுத்தாளருக்குரிய உத்வேகமும் புதுமை செய்யும் உணர்வெழுச்சியும் ஒருங்கே அமையப்பெற்ற நாவலாக இது உருவாயிற்று. வட்டார மொழியும் வாழ்வியலும் இணைந்திருப்பதோடு மாந்தர்களின் மனப் போராட்டங்களை அவர் கையாண்டிருக்கும் விதமே இன்றைக்கும் இந்நாவலைப் புதுமையுடன் விளங்கச் செய்கிறது. அவரது எழுத்துக்களில் துலங்கும் ‘பெண் நோக்கு’ இந்நாவலில் வெளிப்படையாகத் தெரிகிறது. அதிகம் பேசப்பட்டிருக்க வேண்டிய இந்நாவல் குடத்துக்குள்ளிருந்து இப்போது வெளியுலகுக்கு வருகிறது. இனியேனும் இதன் வெளிச்சம் பரவ வேண்டும்.
Book Details
Book Title அறுவடை (Aruvadai)
Author ஆர்.ஷண்முகசுந்தரம் (R.Shanmugasundaram)
ISBN 9788194395652
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Published On Sep 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Classics | கிளாசிக்ஸ்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

‘சட்டி சுட்டது’ உறவுகளைப் பற்றியது. பாசம் மிக்க தந்தை தன் பிள்ளைகளால் பாதிக்கப்படும் அவலத்தை நாவல் பேசுகிறது. 1965இல் எழுதப்பட்டிருந்தாலும் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்ட நிகழ்வுகளை மையமிட்டது நாவல். ஒவ்வொரு உறவும் தன்னிடமிருந்து விலகிப் போகும்போது மௌனமாக அதைச் சகித்து ஏற்றுக்கொள்ளும் சாமிக்கவுண்ட..
₹143 ₹150
நாகம்மாள் என்னும் பாத்திரத்தை மையமாகக் கொண்ட இந்த நாவல், பெண்ணைச் சுயசிந்தனையும் செயல்பாடும் உடையவளாகப் படைத்த விதத்தில் முதன்மைத் தன்மை வாய்ந்தது. தமிழின் தொடக்க நாவல்கள் பெரும்பாலும் பெண்களையும் அவர்கள் பிரச்சினைகளையும் பற்றியவையே. ஆனால் அவற்றில் வரும் பெண்களுக்குச் சுயமுகம் எதுவுமில்லை. ஆண்கள் ..
₹143 ₹150
நாகம்மாள் என்னும் பாத்திரத்தை மையமாகக் கொண்ட இந்த நாவல், பெண்ணைச் சுயசிந்தனையும் செயல்பாடும் உடையவளாகப் படைத்த விதத்தில் முதன்மைத் தன்மை வாய்ந்தது. தமிழின் தொடக்க நாவல்கள் பெரும்பாலும் பெண்களையும் அவர்கள் பிரச்சினைகளையும் பற்றியவையே. ஆனால் அவற்றில் வரும் பெண்களுக்குச் சுயமுகம் எதுவுமில்லை. ஆண்கள் ..
₹133 ₹140
நிறைவேறாத கனவுகளின் வாழ்க்கை களம் பதேர் பாஞ்சாலி. கதையில் வரும் ஒவ்வொருவரும் மனதில் தங்கிச் செல்கின்றனர். ஹரிஹரனின் நாடோடித்தனத்திலும், சர்வஜயாவின் ஆசைகளிலும், துர்க்காவின் திருட்டுத்தனத்திலும், அப்புவின் குழந்தைத்தனத்திலும் வாழ்ந்து வெளிவருவது மனதை பிணக்கூராய்வு செய்ததாய் உணரச்செய்கிறது. துர்க்காவி..
₹309 ₹325