+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழறிஞர் என்று பொதுவாக அறியப்படும் அ.ச.ஞானசம்பந்தன் ஒரு தமிழறிஞராக மட்டுமல்லாது, எழுத்தாளர், சொற்பொழிவாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர். அவரது அனைத்துத் தமிழ்ப் பணிகளையும் இந்நூலில் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். தனது ஒன்பதாவது வயதில் துறையூர் சைவ சமய மாநாட்டில் முதன்முதலில் மேடையேறிப் பேசினார் அ.ச.ஞா. அதனைத் தொடர்ந்து பதினைந்தாவது வயதில், தூத்துக்குடியில் வ.உ.சி. ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ரா.பி. சேதுப்பிள்ளை உள்ளிட்ட தமிழறிஞர்கள் பலருடன் அ.ச.ஞா.வும் உரையாற்றிப் புகழ் பெற்றார். தந்தை வழியாக இவர் பெற்ற தமிழுணர்வு இவருக்கு ஆசானாக அமைந்த அறிஞர் பெருமக்களால் துலக்கமுற்றது. அ.ச.ஞா. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது அவரது ஆசான்களாக நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், மகாவித்துவான் இரா. இராகவையங்கார், "ரைட் ஆனரபில்' சீனிவாச சாஸ்திரியார் போன்றோர் இருந்தனர். அ.ச.ஞா. சைவ சமயத்தில் ஆழங்கால் பட்டவராய் இருப்பினும் திருவாசகம், பெரியபுராணம் போன்ற நூல்களை மட்டுமல்லாது, கம்பராமாயணம், திருக்குறள் போன்ற நூல்கள் குறித்தும் பாரதி, பாரதிதாசன் ஆகியோர் பற்றியும் ஆய்வுநோக்கில் முப்பத்தேழு நூல்கள் எழுதி தமிழுக்கு அணி சேர்த்திருக்கிறார். அ.ச.ஞா. தனது ஆசிரியரான நாவலர் சோமசுந்தர பாரதியாரிடம், திருக்குறளுக்கு பரிமேலழகர் வைத்துள்ள வைப்புமுறை தவறு என்பதையும், கலித்தொகையின் 62-ஆவது பாடலை நச்சினார்க்கினியர் பெருந்திணைப் பிரிவில் அடக்கியது ஏற்கத்தக்கதல்ல என்பதையும் விளக்கி, நாவலரை ஏற்கச் செய்தமை அ.ச.ஞா.வின் நுண்மாண் நுழைபுலத்துக்கு ஒரு சான்று. அ.ச.ஞா. எழுதிய நூல்களும், அவர் பெற்ற விருதுகள் மற்றும் பட்டங்களும் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பு.
தனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோர்வுற்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார்..
இந்நூல் வரலாற்றிலும் உலகின் போக்கிலும் மிகப்பெரும் விளைவை ஏற்ப்படுத்திய 100 பேர் யார் என்பதைப் பற்றி விவாதிக்கிறது. இந்த 100 பேரையும், அவரவர்களின் முக..
தன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வ..
கேரளத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு நம்பூதிரி குடும்பங்களில் நிலவி வந்த இறுக்கமான நம்பிக்கைகள், சடங்குகள் பற்றியும், பெண்ணடிமைத்தனம் பற்றியும் ம..