Menu
Your Cart

அசோகமித்திரன்

தண்ணீர் - அசோகமித்திரன்:அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடுதான் அவரது சிறந்த நாவல் என்பார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை அவரது கரைந்த நிழல்களும் தண்ணீரும்தான் அவரது ஒப்பற்ற, ஏன், நவீனத் தமிழ் இலக்கியத்திலேயே ஒப்பற்ற, அமர சிருஷ்டிகள் என்பேன். இந்த இரண்டு நாவல்களையும்போல், இப்போது அவரால்கூட எழுதமுடியாது ..
₹81 ₹90
தமிழின் தீவிர எழுத்தாளர்கள் வெகுசனத் திரைப்படங்களை புறக்கணித்த காலத்திலேயே அவற்றைப் பொருட்படுத்தி எழுதியவர் அசோகமித்திரன். ஜெமினி ஸ்டூடியோவில் பதினேழு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். திரைப்படம் தயாரிப்பை அறிந்தவர். உலக சினிமாவைப் பார்த்தவர். திரைப்பட விழாக்களுக்குச் சென்றவர். தணிக்கைக் குழ..
₹351 ₹390
தமிழின் மதிக்கத்தக்க மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும், கிட்டத்தட்ட 59 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருபவருமான அசோகமித்திரன் அவர்களை ஒரு வெகுஜன இதழில் முதல்முறையாகப் பத்தி எழுதவைத்த முயற்சியே இந்தப் புத்தகத்தின் தொடக்கம். ‘குங்குமம்’ இதழில் எழுதுவதற்கு அவரை அணுகியபோது, ஆச்ச..
₹117 ₹130
அசோகமித்திரனின் சமீப இரண்டு குறுநாவல்களும் மூன்று சிறுகதைகளும் கொண்ட தொகுப்பு. நகர்ப்புறத்துக் கீழ் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த மனிதர்களைக் கூரிய பார்வையோடு அடங்கிய தொனியில் வெளிப்படுத்தியிருக்கிற ;பம்பாய் 1944 லீவு லெட்டர் ஆகிய குறுநாவல்கள் வாசிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் அருமையான படைப்புகள். ..
₹90 ₹100
படைப்பாளிகள் உலகம்ஒரு கதாசிரியன் எவ்வளவுதான் கதைகள் எழுதினாலும் ஒரே கதையைத்தான் மா(ற்)றி மா(ற்)றி எழுதுகிறான் என்ற கூற்றில் உண்மையில்லை என்று கூறிவிடமுடியாது. இதையே இன்னும் சிறிது விஸ்தரித்தோமானால் அவன் என்ன எழுதினாலும் அது அந்த ஒரே கதையின் இன்னொரு வடிவம்தான் என்றும் கூறிவிடமுடியும்.இத்தொகுப்பிலுள்ள..
₹171 ₹190
அசோகமித்திரனின் அதிகம் அறியப்படாத சில பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது இந்த நூல். உணர்ச்சிகளை அதிகம் வெளிக் காட்டிக்கொள்ளாதவராக அறியப்படும் அசோகமித்திரன், இலக்கியக் கொள்கைகள், போக்குகள் ஆகியவை குறித்துத் தீவிரத்தன்மையுடன் இதில் பேசுகிறார். படைப்புகளையும் அவற்றின் மீதான விமர்சனங்களையும் கறாராக விமர்சிக..
₹162 ₹180
முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் கொண்ட இத்தொகுப்புக்குப் 'பார்வைகள்' என்று தலைப்பிருந்தாலும் பார்வை ஒன்றே. ஒரு புனைகதாசிரியன் எப்படி ஒரு மாபெரும் கதையின் வெவ்வேறு பகுதிகளைத் தன் வாழ்நாள் முழுவதும் எழுதிய வண்ணமிருக்கிறானோ அதேபோலக் கட்டுரையாசிரியனுக்கும் ஒரு மாபெரும் கட்டுரையின் வெவ்வேறு அத்தியாயங்கள..
₹153 ₹170
தாத்தாவிடம் ஒரு அன்பான சொல் பேசியது கிடையாது. அவரைப் பார்த்ததேகூட கிடையாது. அவர் சொத்து மட்டும் வேண்டும் இது என்ன சுரண்டல் எண்ணம்? இது என்ன ஒட்டுண்ணி வாழ்க்கை? காலம் காலமாக மனிதன் நீடித்து இருப்பதே இப்படிச் சுரண்டுவதற்கும் மாற்றான் முயற்சியின் பலன்களைத் தான் பறித்துக்கொள்வதற்கும் தானா? தலைமுறைகள் ..
₹270 ₹300
Showing 37 to 48 of 55 (5 Pages)