- Edition: 1
- Page: 54
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: தம்பி பதிப்பகம்
1992 இல் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் புறப்பட்டனர். அத்வானி இந்துத்துவத்தின் அரசியல் முகமாக இருந்து நடத்திய ரத யாத்திரையின் கர சேவகர்கள் கூட்டம் டிசம்பர் 6 புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தினத்தன்று பாபர் மசூதியை இடித்தது. அன்றையதினம் ஆர்.எஸ்.எஸ். இரண்டு சமிஞ்சைகளை வெளிப்படுத்தியது. ஒன்று சிறுபான்மையினர் தவிர்த்த இந்து, இந்தியா; மற்றொன்று டாக்டர் அம்பேத்கரைத் தவிர்த்த அரசமைப்புச் சட்டம். அதற்காகத்தான் பாபர் மசூதி இடிப்பதற்கு டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவு தினத்தை தேர்ந்தெடுத்தனர்.
அத்வானி பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் முகமாக இருந்து ரத யாத்திரையை நடத்தியிருக்கலாம் ஆனால் அதற்கு அத்வானிதான் சரியானவர் என்று தேர்ந்தெடுத்து முன்னிறுத்தியதும் ரத யாத்திரையை வழிநடத்தியதும் ஆர்.எஸ்.எஸ்.தான்.
| Book Details | |
| Book Title | சாவர்க்கர், கோல்வால்கர் VS அரசமைப்புச் சட்டம் (Chaavarkkar) |
| Author | மழவை.சுபெ.தமிழமுதன் (Mazhavai.Chupe.Thamizhamuthan) |
| Publisher | தம்பி பதிப்பகம் (Thambi Pthippakam) |
| Pages | 54 |
| Edition | 1 |
| Format | Paperback |