Menu
Your Cart

எனக்குரிய இடம் எங்கே?

எனக்குரிய இடம் எங்கே?
-10 %
எனக்குரிய இடம் எங்கே?
ச.மாடசாமி (ஆசிரியர்)
₹117
₹130
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கல்விச் சீர்திருத்தம், கல்விக்கூட சுதந்திரம், மாற்றுக்கல்வி ஆகியவை பற்றி சமீப ஆண்டுகளில் நிறைய விவாதங்கள் நடைபெறுகின்றன. பள்ளிக்கல்வி பற்றி இப்படி நிறைய கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தாலும், கல்லூரி மாணவர்களைப் பலரும் கண்டுகொள்வதில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்பும் நூல் இது! 'ஒரு வகுப்பறை யாருக்குச் சொந்தம்... பேராசிரியருக்கா? மாணவனுக்கா? கல்விக்கூடத்தின் கதாநாயகனாக யார் இருக்க வேண்டும்?’ எனக் கேள்விகளை எழுப்பி விடை தேடுகிறார் அவர். அய்யப்பராஜ் என்ற பேராசிரியரின் பார்வையில் ஒரு நாவல் போல விரியும் இந்த நூல், தங்கள் பணியில் அக்கறையுள்ள அத்தனை ஆசிரியர்களுக்கும் வேதம். அதே சமயம் மாணவர்களுக்கும் தங்களைச் செதுக்கிக்கொள்ள இந்த நூல் வாய்ப்பு தருகிறது. கல்வியில் முழுமை பெற்று, வாழ்வில் தனக்குரிய இடத்தை தேடிக்கொள்வது எப்படி என்பதற்கான வழிகாட்டியாக இந்த நூல் இருக்கிறது. பாதைகளை தேர்ந்தெடுப்பவர்களைத் தாண்டி, பாதைகளை உருவாக்குபவர்களும் இருக்கிறார்கள். எல்லோருக்கும் சிந்தனையின் வாசலைத் திறந்து வைத்துக் காத்திருக்கிறது 'எனக்குரிய இடம் எங்கே?’
Book Details
Book Title எனக்குரிய இடம் எங்கே? (Enakkuriya Idam Enge Bharathi Puthakalayam)
Author ச.மாடசாமி (Sa.Maatasaami)
ISBN 9789388126588
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 0
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழர் திருமணம் அன்று முதல்... இன்று வரைமேற்கத்திய கோட்டும், விஸ்கியும் கலந்த அளவுக்கு துணைவர்களை தேர்ந்தெடுக்கும் முறையில் திருமணத்தை தனிப்பட்ட சொந்தச் சடங்காக எளிய விருந்துடன் நடத்தும் முறையில் மேற்கத்திய பண்பாடு வந்துக் கலக்கவில்லை...
₹23 ₹25
வேத மரபும் பக்தி மரபும் வலியுறுத்திய சடங்குகளுக்கு எதிரானவர்களாகவும், கோயிலை - சிலை வழிபாட்டை மறுப்பவர்களாகவும் சித்தர்கள் இருந்தார்கள் என்பது உண்மைதான். இருப்பினும், மரபின் நிழல்களை முற்றிலும் அவர்கள் கடந்துவிடவில்லை என்பதும் உண்மை...
₹45 ₹50
‘இனியொரு விதி செய்வோம்’ என்ற பாரதி வரியை வைத்து, கல்லூரி நாட்களில் (முதுகலை, தமிழ்) விவாதித்தது நினைவுக்கு வருகிறது. விவாதத்துக்கு எப்போதும் உயிரூட்டும் ஆருயிர் நண்பர் ஷாஜஹான் கனி, ‘நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்! என்றுரைத்து சமூக, பண்பாட்டு விதிகளை உடைத்த பாரதியே, தானும் ஒரு விதி செய்யத்தானே..
₹90 ₹100