Menu
Your Cart

கோபிகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

கோபிகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
-5 %
கோபிகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
கோபிகிருஷ்ணன் (ஆசிரியர்), ந.முருகேச பாண்டியன் (தொகுப்பாசிரியர்)
₹162
₹170
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கோபி கதைகளின் பலமே கேலி, கிண்டல், நக்கல், பகடிதான். எந்தவொரு விஷயமும் விவரிக்கப்படும் முறையினால் முக்கியமானதாகிறது. கிராமத்துச் சாவடிக்கு முன்னர் உள்ள ஆலமரத்தடியில் அமர்ந்து ஊர்க்கதை பேசிடும் மனிதர்களின் விட்டேத்தியான மனநிலை கோபியிடம் தோய்ந்துள்ளது. கதைகளின் வாயிலாக அறியப்படும் கோபி எதிலும் பரபரப்பு அற்றவர்; திடுக்கிடும் சம்பவங்களை வெறுத்து ஒதுக்குபவர்; போலியாக மனநிறைவு தரும் சுப முடிவுகள் குறித்து அக்கறையற்றவர்; மயிர் பிளக்கும் விவாதங்கள், செறிந்த மொழிநடையைப் புறக்கணிப்பவர். எல்லாவற்றையும்விடப் பொதுவாகக் கதைகளை முடிப்பதில் அவருக்கு விருப்பமில்லை. இது கதைக்கான தளமாக முடியுமா என்று முதல் வாசிப்பில் தோன்றும் பல சம்பவங்கள் விவரிக்கப்படு்ம் முறை காரணமாகவே நேர்த்தியான கதைகளாக வடிவெடுத்துள்ளன. மாபெரும் சாதனையாளர்கள், வீரர்கள், வெற்றியாளர்களைக் குறித்துக் கோபிக்குச் சிறிதும் ஆர்வமில்லை. சாதாரண ஜந்துகளாய் இயங்கிக்கொண்டிருக்கும் மனிதப் பூச்சிகளின் உலகிற்குள் நுழைந்து பார்த்துப் புதிய அம்சங்களை வெளிப்படுத்துவதில் கோபியின் கதைசொல்லல், நுட்பமான தளங்களில் பயணபபடுகிறது.
Book Details
Book Title கோபிகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (Gopi krishnan Therndhedutha sirukathaigal )
Author கோபிகிருஷ்ணன் (Gopikrishnan)
Compiler ந.முருகேச பாண்டியன் (Na. Murugesa Pandian)
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 150
Published On Apr 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், Classics | கிளாசிக்ஸ், Collection | தொகுப்பு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும்திரைப்படம், மது ஆகிய இரண்டும் தமிழர்களின் வாழ்வில்ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சேதங்கள் அளவற்றவை. உலகம் முழுக்க சினிமாவின் ஆதிக்கம்இருந்தபோதிலும், கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆள்கின்றவர்கள், சினிமாவிலிருந்துவந்தது போன்ற நிலைமை, வேறு எந்த நாட்டிலும் இருக்க வாய்ப்பி..
₹57 ₹60
ஒரு ஊரின் ஜம்பதாண்டு காலச் சாட்சியாகத் தன்னை உணரும் முருகேசபாண்டியன், தனக்கு ஊரோடு உள்ள ஈரமான உறவைச் சித்தரிப்பதில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறார். வெறுமனே ஊர் நினைவுகளைப் பெருமிதமாக அடையாளம் காட்டாமல் அது பண்பாட்டுரீதியில் எவ்வாறு அமைந்திருந்தது, தமிழர் வாழ்க்கை எப்படிக் காலந்தோறும் உருமாறி வருகிற..
₹333 ₹350