Menu
Your Cart

ஆஷ்கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்

ஆஷ்கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்
-5 %
ஆஷ்கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
‘1911 ஜூன் 17. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து காலை 9.30 மணிக்குப் புறப்படும் மணியாச்சி மெயில் நின்றுகொண்டிருந்தது’ என்னும் வாக்கியத்துடன் ஆரம்பமாகும் நூல் அதன்பின் நிகழும் ஒவ்வொரு நிகழ்வையும் மிக நுணுக்கமாகவும் தெளிவாகவும் ஒரு திரைப்படம் நம் முன் ஓடுவதுபோல் கண்முன் கொண்டுவருகிறது. ஆஷின் கொலை, வாஞ்சியின் தற்கொலை, ஆஷ் துரையின் பின்னணி, தொடர்ந்து நிகழும் போலீஸ் வேட்டைகள், இந்தியப் புரட்சி இயக்கத்தின் பின்னணி, இப்பின்னணிக்கும் ஆஷ் கொலைக்கும் இருந்த உறவுகள் ஆகியவற்றைப் படிப்படியாக விவரித்துக்கொண்டு போகிறார் ஆசிரியர். இவ்விவரிப்பு, பெரும் நிகழ்வுகளைச் சார்ந்தும் சரி, மிகச் சிறிய நிகழ்வுகளைச் சார்ந்தும் சரி அசைக்க முடியாத சரித்திர ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இங்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. சரித்திரச் சான்றுகளைச் சார்ந்த புனர்நிர்மாணம் என்ற அறிவுலக ஒழுக்கத்திற்கு இது ஒரு அபூர்வமான உதாரணம். முன் னெண்ணங்களிலிருந்து முற்றாகப் பெற்ற விடுதலையும் விஞ்ஞானரீதியான ஆராய்ச்சியில் அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்ட உதாரணம்.
Book Details
Book Title ஆஷ்கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் (Aash Kolayum Indhiya Puratchi Iyakkamum)
Author ஆ.சிவசுப்பிரமணியன் (A.Sivasubramanian)
ISBN 9788189945923
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 184
Published On Nov 2008
Year 2014
Edition 3
Format Paper Back
Category History | வரலாறு, India History | இந்திய வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சாகச விழைவுக்குச் சமமாக அறஉணர்வும் கொண்ட வேட்டைக்காரர் ஜிம் கார்பெட். விலங்குகளைத் தாழ்வாகக் கருதும் சராசரி மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டவர். மனிதர்களுக்குத் தீங்கு செய்யாத விலங்குகளை வேட்டை இன்பம் கருதிக் கொல்லத் துணியாதவர். முழுநேர எழுத்தாளருக்குரிய அவதானிப்பும் எழுத்தில் முதிர்ச்சியும் கொண்டவ..
₹276 ₹290
சமயத்தின் முந்தைய வடிவங்களில் ஒன்று மந்திரம். வேட்டைச் சமூகத்தில் தொடங்கி வேளாண் சமூகம் வரை மந்திரச் சடங்குகள் உருப்பெற்று வளர்ந்தன. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த சமூகங்களிலும் இவை முற்றிலும் மறைந்துவிடவில்லை. மனித சமூக வரலாற்றில் முக்கிய இடம்பெற்றுள்ள மந்திரமும் மந்திரச் சடங்குகளும் குறித்து மானி..
₹238 ₹250
மன்னர்களை மையமாகக் கொண்டு எழுதப்படும் மரபுவழி வரலாற்றுக்கு மாற்றாக உருவாகியுள்ள விளிம்பு நிலை வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள் படிக்கவேண்டிய நூல். சங்க காலம் தொடங்கி வெள்ளையர் ஆட்சிக் காலம் முடிய தமிழ்நாட்டில் நிலவிய அடிமை முறையை, கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், காகித ஆவணங்கள், இலக்கியம் ஆ..
₹209 ₹220
‘செய் அல்லது செத்துமடி’ என்ற முழக்கத்துடன் 1942 ஆகஸ்ட் திங்களில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தொடங்கியது. தலைவர்களின் வழிகாட்டுதல்கள் குறித்துக் கவலைப்படாத, பொது மக்களின் தன்னியலார்ந்த எழுச்சியாக இப்போராட்டம் அமைந்தது. ஆங்கில அரசுக்கு எதிரான தம் எதிர்ப்பைக் காட்டும் வழிமுறையாக, ரயில் போக்குவரத்த..
₹143 ₹150