Menu
Your Cart

காட்டில் நடந்த கதை

காட்டில் நடந்த கதை
-5 %
காட்டில் நடந்த கதை
₹90
₹95
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
‘பதேர் பாஞ்சாலி’ நாவல் மூலம் உலகப் புகழ்பெற்ற விபூதிபூஷண் பந்தோபாத்யாயவின் பத்துச் சிறுகதைகளின் தொகுப்பு இது. மண்ணின் மனதை வாசித்தறிந்த கலைஞர் விபூதிபூஷண். அவரது படைப்புலகில் இயற்கை தனது மானுடச் சாயலை வெளிப்படுத்துகிறது. தாவரங்களும் விலங்குகளும் பறவைகளும் புழுக்களும் பூச்சிகளும் மனித இயல்பு கொள்கின்றன. அதே சமயம் மனிதர்கள் இயற்கையின் கொடையாக உருவம் பெறுகின்றனர். அவர்களது மனமும் செயலும் மிகையின்றி அப்பட்டமாக முன்வைக்கப்படுகின்றன. அவர்களது நன்மையும் வன்மமும் பகையும் பயமும் குதூகலமும் பச்சை வாடை மறையாமல் சித்தரிக்கப்படுகின்றன. மனிதனை இயற்கையுடன் இயையுபடுத்தும் சூழலியல் முயற்சிகள் இன்று வியந்து பேசப்படுகின்றன. ஆனால் முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே இந்த நோக்கைத் தனது கலையில் பிரதிபலித்தவர் விபூதிபூஷண் பந்தோபாத்யாய. இந்தத் தொகுப்பு அந்தக் கலை நோக்கின் சான்றுகளில் ஒன்று.
Book Details
Book Title காட்டில் நடந்த கதை (Kaatil Nadantha Kathai)
Author விபூதி பூஷண் பந்தோபாத்யாய (Bibhutibhushan Bandyopadhyay)
Translator புவனா நடராஜன் (Bhuvana Natarajan)
ISBN 9789380240893
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 144
Published On Nov 2010
Year 2011
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பிள்ளைப் பிராயத்துக் காதலுக்குத்தான் எத்தனை மகத்தான சக்தி. வாழ்க்கை பூராவும் நினைவில் மலந்துகொண்டே இருக்கும். அதிலும் நிறைவேறாத காதல் ஓர் இலக்கியமாகவே அமைந்துவிடுகிறது. தேவதாஸ் பார்வதி காதலும் அத்தகையதுதான். பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட 'தேவதாஸ்' திரைப்படமாகவும் பல மொழிகளில் வந்திருக்கிற..
₹171 ₹180
வனவாசிதனிமனிதனின் அனுபவப் பகிர்வாகப் புனையப்பட்ட இந்நாவலில் இயற்கை வளம் கொழிக்கும் ஒரு வனத்தின் பல்வேறு பண்புகளும் அவ்வனத்தைச் சார்ந்து வாழ்கின்ற மக்களின் வறுமைமிகுந்த எளிய வாழ்வும் இயல்பாக எடுத்துவைக்கப் பட்டுள்ளன.நாவலில் இடம்பெற்றுள்ள சிறப்புப்பெயர்களே இதனை ஒரு மொழிபெயர்ப்பு நாவலாக நினைவூட்டிக்கொ..
₹285 ₹300
மஹாஸ்வேதா தேவி கதைகள்காடுகளையே தங்களின் உலகமாகக் கொண்ட ஆதிவாசிகளின் பிரச்சனைகளைப் பேசும் மஹாஸ்வேதா தேவியின் எழுத்துக்கள் நம்மை மனம்பதறச் செய்பவை. ‘காடு கொன்று நாடாக்கிய’ சமூகமும் அரசும் இவை எதற்கும் பொறுப்பேற்காது கண்ணை மூடிநிற்கும் நிலையில் ஆதிவாசிகளின் கொதிநிலையை பிரதிபலிப்பை அவரது எழுத்துக்கள். வ..
₹285 ₹300
கடைசி நமஸ்காரம் எனும் இந்நூல் சுயசரிதநடை முறையில் எழுதப்பட்டு ஒரு எழுத்தாளரின் ஒற்றைச் சாளரம் வழியே வாழ்க்கையின் முழுப் பரிமாணத்தையும் உட்கொண்டு, வாழ்வின் நிறைகள் மற்றும் அவலங்களை தத்ரூபமாகச் சித்தரிக்கும் மகத்தான நாவல் இது. ஒரு வாராந்திரத் தொடராக வந்த இந்நூல் 1972-ஆம் ஆண்டு வங்க மொழிக்கான சாகித்..
₹394 ₹415