Menu
Your Cart

கடல்வழி வணிகம்

கடல்வழி வணிகம்
-5 %
கடல்வழி வணிகம்
நரசய்யா (ஆசிரியர்)
₹456
₹480
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நாகரீக வளர்ச்சியின் முக்கியப் பங்காக இருப்பது பயணங்களே. தமிழர்கள் முற்காலத்தில் கடல்வழி வணிகத்தில் எப்படிச் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை இலக்கியத்தினூடே சொல்லி இருந்தாலும் தொல்லியல் துறை கண்டுபிடித்த சாட்சிகளுடன் நரசய்யா விவரிக்கிறார் அக்கால மனிதர்களின் திறமைகளை. வணிகர்களே மாற்றத்தை கொண்டு வருபவர்களாக இருந்திருக்கிறார்கள், இந்தியா அடிமைப்பட்டுக்கிடந்ததற்குத் தொடக்கப்புள்ளியை உண்டாக்கிய மேல்நாட்டு வணிகர்கள் தங்கள் திறமையாலும் இங்கே ஆளும் மன்னர்களின் ஒற்றுமையின்மையாலும் அதிகாரத்தைத் தங்கள் வசமாக்கி உரிமையில்லாத மண்ணின் செல்வங்களைக் கொள்ளையடித்துச் சுரண்டியது சுதந்திர வேட்கையை மக்களிடம் தூண்டிவிட்டது என்பதைப் பல வரலாற்றுச் சம்பவங்களில் படித்திருந்தாலும் இதில் கப்பல் தொழிலில் அவ்வரலாற்று நிகழ்வுகள் எம்மாதிரியான தாக்கத்தைக் கொண்டுவந்தது என்பதைப் பல சாட்சிகளுடன் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். கடல் வணிகத்தில் சிறந்திருந்த ராஜ்ஜியங்கள் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு அதை அவர்கள் நசுக்கி அழித்ததால் காணாமல் போய் இருந்ததை மெல்ல தேவைகளுக்கு ஏற்ப மீட்டெடுத்து வந்தாலும் பல பலிகளைக் கொண்டே துறைமுகங்கள் அமையப் பெற்றது. வரலாறுகள் சொல்லிச் செல்வது ஒன்றே தான் காலச் சக்கரம் எதையும் எவற்றையும் ஒரே இடத்தில் ஒரே மாதிரி நிலை பெற விடுவதில்லை,மாற்றங்களைப் புகுத்திக்கொண்டே அதற்குப் பல நூறு பெயர்களையும் சூட்டிச் செல்கிறது.
Book Details
Book Title கடல்வழி வணிகம் (Kadalvazhi-Vanigam)
Author நரசய்யா
Publisher பழனியப்பா பிரதர்ஸ் (Palaniyappa Brothers)
Year 2001
Edition 05
Format Paper Back
Category History | வரலாறு, Essay | கட்டுரை, Economics | பொருளாதாரம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்நூலின் பக்கங்களில் காணப்படுவது, ஒரு பெரிய திரைச்சீலையில் தீட்டப்பட்டிருக்கும் வார்த்தைகளாலான வண்ணப்படமாக அமைந்துள்ளது. கோரமண்டலக்கையின் சரித்திரத்தின் பகுதிகளை சிரத்தையுடன் எழுதி, அதில் போர்ச்சுகீசியர்களின் சாந்தோம் வரவிலிருந்து ஆரம்பமாகிறது. புனித ஜார்ஜ் கோட்டை நிர்மாணிக்கப்பட்டதும் அது வளர்ந்..
₹309 ₹325
காவூரி ராமலிங்கம் அப்பல நரசய்யா, ஒரிஸ்ஸாவில் பிறந்தவர். கப்பற் பொறியியலில் தேர்ச்சி பெற்ற பிறகு 10 வருடங்கள் கடற்படை கப்பல்களில் பணியாற்றினார். ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற விமானந்தாங்கிக் கப்பலின் ஃபிளைட் டெக் சீஃப் ஆக பணியாற்றினார். பிறகு 2 வருடங்கள் வணிகக் கப்பல்களில் பணியாற்றிய பின்னர், விசாகப்பட்..
₹219 ₹230