Menu
Your Cart

கைம்மண் அளவு

கைம்மண் அளவு
-5 % Out Of Stock
கைம்மண் அளவு
நாஞ்சில் நாடன் (ஆசிரியர்)
₹190
₹200
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
* கடவுள் என்பவர் யாருடைய கடவுள்? தங்கத்தேர் இழுப்பவர், மணி மண்டபங்கள் பணி செய்து கொடுப்பவர், தங்க அங்கியும் வைரமணி முடியும் அணிவிப்பவரின் கடவுளா? அல்லது நான்கு மணி நேரம் வரிசையில் நிற்பவரின் கடவுளா? அன்னதானம் வாங்கிப் பசியாறு பவரின் கடவுளா? * மிகவும் மலிவான கால் குப்பி மதுவின் விலை 98 ரூபாய் என்றால் அதில் நாற்பத்தைந்து ரூபாய் அரசாங்கத்துக்கு, முப்பது ரூபாய் தயாரிப்பாளன் ஆதாயம், மிச்சம் உற்பத்திச் செலவு. யாரிதில் இடைத்தரகர் கனவான்களே? தரகர்களால் தரகர்களுக்காக தரகர்களே நடத்தும் தரகாட்சி! அதன் மாற்றுப் பெயர்தான் மக்களாட்சி என்பது. * பண்டைய கோயில்களில் சிற்பங்களாக, ஓவியங்களாக வடித்தோ, தீட்டியோ வைத்திருப்பார்கள்... இரு பாம்புகள், வட்ட வடிவமாக ஒன்றன் வாலை இரண்டாவது பாம்பு கவ்விக்கொண்டிருக்கும். இரண்டாவதன் வாலை முதலாவது கவ்விக்கொண்டிருக்கும். அந்தச் சிற்பத்தின் பொருள் விளங்கியதில்லை எனக்கு. இப்போது பொருளாகிறது, ஒருவன் மற்றவனைத் தின்ன முயல்வதன் குறியீடு அது என! * சிலருக்கு இரண்டு மணி நேரத்தில் கிடைக்கும் நீதி. செல்வமும் செல்வாக்கும் அரசியல் பின்னணியும் இருந்தால்! அதிகாரத்தின் துணை இருந்தால் குற்றவாளிகளே தமக்குச் சாதகமான தீர்ப்பு எழுதி, நீதி தேவர்களின் கையெழுத்துக்கு அனுப்பிவிடலாம்தானே! - இப்படி இந்தத் தொகுப்பில் நாஞ்சில் நாடன் தமிழ்ச் சமூகத்துக்கு எழுப்பும் கேள்விகள் வீரியமானவை! ‘குங்குமம்’ இதழில் தொடராக வெளிவந்து, இப்போது நூல் வடிவம் பெற்றிருக்கிறது.
Book Details
Book Title கைம்மண் அளவு (Kaimman Alavu)
Author நாஞ்சில் நாடன் (Nanjil Nadan)
Publisher சூரியன் பதிப்பகம் (Suriyan pathipagam)
Pages 0
Year 2016
Category Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நாஞ்சில்நாடனின் கதை என்பது கண்ணால் கண்ட காட்சியையோ காதால் கேட்ட செய்தியையோ மனதால் விரித்துகொண்ட கற்பனையையோ மாத்திரம் நம்பி எழுதப்பட்ட புனைவு அல்ல. மாறாக அவருடைய கதைகளின் சாராம்சத்தில் உள்ளுறைந்திருப்பது தொன்மையான ஒரு நிலமும், அதன் மொழியும் அவற்றின் தொகை விரிவான பண்பாட்டு செழுமையும் ஆகும். பின..
₹276 ₹290
கவிமணி ஒரு ‘மான்மியம்’ படைத்தார்; நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமுதாயம் ஒரு திருப்பங்கண்டது. சமுதாயத்தை மற்றொரு திருப்பத்துக்குச் சித்தப்படுத்துவது நாஞ்சில் நாடனின் இந்த ‘இரண்டாம் மான்மியம்.’ சமுதாயத்தின் மூத்த தலைமுறையைச் சப்புக்கொட்ட வைத்து, அடுத்த தலைமுறையைச் சிந்திக்க வைத்து, இளைய தலைமுறையைச் சீ..
₹152 ₹160
இத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை. ஜன்னல் இருமாத இதழில் வெளிவந்தவை. ஆகவே அனைத்துத் தரப்பு வாசகர்களுக்குமான எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை நாம் அனைவருக்கும் க..
₹114 ₹120
தலைகீழ் விகிதங்கள்நாஞ்சில் நாடனின் நாவலான 'தலைகீழ் விகிதங்கள்' உண்மையின் ரீங்காரம் நிறைந்தது. சுய அனுபவத்தை மதிக்கும் எழுத்தாளர்களிடம் மட்டுமே நாம் கேட்கும் ரீங்காரம் இது ... அவர் எதிர்கொள்ளும் வாழ்வு இன்றைய தமிழ் வாழ்வின் பிரதிபலிப்புகள் நிறைந்தது. ஜாதி, மூடநம்பிக்கைகள், வறட்டு ஜம்பம், பிற்போக்கு ஆ..
₹371 ₹390