Menu
Your Cart

கந்தர்வன் சிறுகதைகள் (முழுத் தொகுப்பு)

கந்தர்வன் சிறுகதைகள் (முழுத் தொகுப்பு)
-5 %
கந்தர்வன் சிறுகதைகள் (முழுத் தொகுப்பு)
கந்தர்வன் (ஆசிரியர்)
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கவிஞர் கந்தர்வன் அடிப்படையிலே ஒரு கதைஞர். கவிதையிலும் “நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை, ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை” என்று கதையைத்தான் சொன்னார். எதைசொல்லுவது என்பதில் தெளிவும் எப்படிச்சொல்லுவது என்பதில் கூடுதல் நுட்பமும் அழகும் கொண்டவை அவரது கதைகள். எள்ளலும் துள்ளலுமாய் நகரும் ஒரு மொழியில் அவர் கதை சொல்கிறார். பிற படைப்பாளிகள் தொட அஞ்சிய தொழிற்சங்க வாழ்வையும் துலக்கமாக எழுதியவர் அவர். புறவயமாகவே பேசிச்செல்வது போலத் தோற்றம் கொண்டாலும் மனிதர்களின் அக உலகைக் கச்சிதமாகப் பிடித்து நமக்குக் கையளிப்பவை அவரது சிறுகதைகள். சீவன், மங்கலநாதர், காடுவரை.., பூவுக்குக் கீழே, தராசு, மைதானத்து மரங்கள் என அவரது முத்திரைக்கதைகளாகப் பல கதைகள் இருக்கின்றன. மக்கள் எழுத்தாளர் சங்கத்தில் துவங்கி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவராகத் தன் இலக்கியச் செயல்பாடுகளுக்கு வடிவம் கொடுத்தவர். வாசகரின் தோள் மீது கை போட்டுத் தோழமை மிக்க ‘ஒரு குரலில்’ கதை சொல்வது அவரது தனித்த பாணி. எல்லாவிதமான சிந்தனைப்பள்ளிகளைச் சேர்ந்தவர்களும் ஏற்கும் அசலான படைப்பாளி கந்தர்வன். - ச. தமிழ்ச்செல்வன்
Book Details
Book Title கந்தர்வன் சிறுகதைகள் (முழுத் தொகுப்பு) (Gandharvan sirukathaikal)
Author கந்தர்வன் (Kandharvan)
Publisher தமிழ்வெளி பதிப்பகம் (Tamizhveli Publications)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

எழுத்தாளர் கந்தர்வன் வாழ்ந்தது அறுபது ஆண்டுகள். அதுபோலவே அவரின் கதைகளும் 62 மட்டுமே. ஆனால் நவீன தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்பவர். பூவுக்குக் கீழே, ஒவ்வொரு கல்லால், அப்பாவும் அம்மாவும் கொம்பன் ஆகிய சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்து மிகுந்த கவனத்தைப் பெற்றன. சிறுகதைகள் மட்டுமல்லாத..
₹713 ₹750
சீவன்கவிஞர் கந்தர்வன் என அழைக்கப்பட்டாலும் அவர் அடிப்படையில் ஒரு கதை சொல்லிதான், கவிதையிலும் கட்டுரையிலும் நாடகத்திலும் மேடைகளிலும் அவர் கடைசி வரை கதைகளே சொல்லிக் கொண்டிருந்தார். வாசகனின் தோள்மீது கை போட்டுத் தோழமை மிக்க குரலில் கதை சொன்னவர் கந்தர்வன். கேலியும் கிண்டலும் பகடியான விமர்சனங்களை இத்தொனி..
₹57 ₹60
கந்தர்வன் கவிதைகள்2000 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான கவிதை வரலாறு கொண்ட தமிழ் மொழியில், எழுதத் தலைப்படும் எல்லோரும் கவிஞராக முயற்சிக்கும் ஒரு சூழலில் தனித்துவம் மிக்கதொரு கவிக்குரல் கந்தர்வன். ஆழமான அரசியல் கவிதைகளும் அழகியலோடு படைக்கப்படுவது சாத்தியம் என்பதை நிரூபித்தவர். கிழிசல்கள், சிறைகள், ம..
₹143 ₹150