Menu
Your Cart

கொலை கொலையாம் காரணமாம்

கொலை கொலையாம் காரணமாம்
-5 % Out Of Stock
கொலை கொலையாம் காரணமாம்
கோமல் அன்பரசன் (ஆசிரியர்)
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் குற்றவாளிகள் என்று தெரிந்தாலும் சட்டத்துக்கு சரியான ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். காவல்துறை முடிந்தவரை தனது கடமையைச் செய்தால்கூட, முக்கியமான சாட்சிகள் பிறழ் சாட்சிகளாகிவிடுவார்கள். ஆனால், காவல்துறையின் கைகளை அரசாள்பவர்கள் கட்டிப்போட்டுவிடுவதால்தான் பல வழக்குகளில் குற்றவாளிகள் யாரென்றே தெரியாமல் போகும்! பிரபலங்கள் வழக்குகளில் சிக்கிக்கொள்ளும்போது மீடியாக்களுக்கு நல்ல தீனி கிடைக்கும். ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் மக்களுக்குத் தகவல் அளிப்பார்கள். அந்த ஜுரமும் கொஞ்ச நாளில் அப்படியே அமுங்கிப் போகும். தமிழ்நாட்டில் நடந்த பிரபலமான 25 வழக்குகளை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அலசி ஆராய்ந்து இருக்கிறார் நூல் ஆசிரியர் கோமல் அன்பரசன். ஒவ்வொரு அத்தியாயத்தையும் திரைக்கதை போல் சொல்லி, படிப்பவர்களை அந்தந்தக் காலகட்டத்துக்கே அழைத்துச் சென்றுள்ளார். ஆஷ் கொலை வழக்கு, மருதுபாண்டியர் நகைகள் வழக்கு, சிங்கம்பட்டி ஜமீன் வழக்கு, அன்னிபெசன்ட்& ஜெ.கிருஷ்ணமூர்த்தி வழக்கு, தூத்துக்குடி சதி வழக்கு என்று பழைய வழக்குகளையும் எடுத்துக்கொண்டது இந்தத் தலைமுறையும் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால்தான். இந்த நூலில் உள்ள பல வழக்குகளில் குற்றவாளிகள் யாரென்றே இதுவரை தெரியாதது வேதனையையும் வியப்பையும் தான் தருகிறது. சரித்திரத்தின் ரத்தம் படிந்த பக்கங்களைப் புரட்டிப் பார்க்க மனோ தைரியத்துடன் உள்ளே செல்லுங்கள்...
Book Details
Book Title கொலை கொலையாம் காரணமாம் (Kolai Kolaiyam Karanamam)
Author கோமல் அன்பரசன் (Komal Anbarasan)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழ் தொலைக்காட்சியின் முடிசூடா மன்னர் கலாநிதி மாறன். கூர்மையான மதிநுட்பம், போட்டியாளர்களை வளரவிடக்கூடாது என்ற வெறி, தேவையான அளவு அரசியல், அதிகாரப் பின்னணி, வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற வேகம் என அனைத்தும் சேர்ந்து மிகக் குறுகிய காலத்தில் தென்னிந்தியாவின் மீடியா மன்னராக ஆகியுள்ளார் கலாநிதி...
₹81 ₹85
அரசியல் தூய்மையாக வேண்டும் அரசியல் மக்களுக்கானதாக மாற வேண்டும் நல்லரசியல் நடக்கிற நாடாக வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவரா நீங்கள்? அப்படியானால் இந்தப் புத்தகம் உங்களுக்கானதுதான். எனக்கு அரசியலே பிடிக்காது நமக்கு எதற்கு அந்த சாக்கடை எல்லாம் ? என்று முகம் சுளிப்பவரா நீங்கள்? முதலில் இந்த புத்தகத்தை நீ..
₹119 ₹125
எழுத்தாளர் அசோகமித்திரனின் ‘18வது அட்சக்கோடு’ நாவலில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திருவிதாங்கூர் திவானாக இருந்த சர்.சி.பி.ராமசாமி குறித்த விவரிப்பு உள்ளது. இதன் வழி சர்.சி.பி.ராமசாமியை தமிழ் வாசகர்கள் அறிவார்கள். ஆனால், சி.பி.ராமசாமி என்ற ஆளுமையின் முழுமையான சித்திரத்தை உதாரணமான சம்பவங்களுடன் அன்ப..
₹238 ₹250