Menu
Your Cart

மனித சிந்தனை வளம்

மனித சிந்தனை வளம்
-5 %
மனித சிந்தனை வளம்
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தனி மனிதர்களின் நிழல்தான் சரித்திரம் என்று எமர்ஸன் என்கிற அமெரிக்க ஞானி ஒரு இடத்தில் கூறினார். சரித்திர காலத்திலே பல தனி மனிதர்களின் சிந்தனைகளும் சாதனைகளும் சிறப்பாக நமக்குத் தெரிகின்றன. மக்களுக்கு நீதி என்றால் என்னவென்று நிர்ணயித்து முதல் முதலாகக் கூற முயன்ற கம்முரபி என்கிற பாபிலோன் நகரத்து மன்னன் முதல், மனித சுபாவத்தையே மாற்றி ஹிம்சையைத் துறந்து அஹிம்சையை வாழ்க்கை வழியாகக் கொள்ள முடியும் என்று சொல்லிச் செய்து காட்டிய நமது மகாத்மா காந்தி வரைக்கும், எத்தனையோ எண்ணிக்கையற்ற கடவுள்களை நம்பித் துதித்துக்கொண்டு நின்ற மனிதனுக்கு, ஒன்றே கடவுள் என்று சொன்ன அகனெடான் என்கிற அபூர்வ எகிப்திய ஃபாரோ; முதல் மனிதன் உலகில் தோன்றிய காரண காரியங்களை உடற்கூறு ஞான பூர்வமாக அலசி உலகை ஏற்க வைத்த சார்லஸ் டார்வின் வரையில், ஒன்றே கடவுள் அவன் பிரஜைகள் நாம், அவன் விதிகள் இவை – எனக்குச் சொன்னான் என்று சொன்ன மோஸஸ்; முதல் மனிதனின் மனத்தின் அடிப் பிரக்ஞையைத் தைரியமாக ஆராய முற்பட்ட ஸிக்மன்ட் ஃப்ராயட் வரையில், புண்ணியத்தையும், பாவத்தையும் அதன் காரணமாக எழுந்த சுவர்க்கத்தையும், நரகத்தையும் அற்புதமான சிந்தனை மாளிகைகளாக எழுப்பித் தந்த ஜரதுஷ்டிரன் முதல்; நீள, அகலம், கனம் கூட உறவு முறைகளால் ஏற் படுவதே என்று நிரூபித்த எயின்ஸ்டீன் வரையில், பல மனிதர்கள் உலகில் பல பாகங்களிலும் தோன்றி, இன்றைய மனித குலத்தின் சிந்தனை வளத்தைச் சாத்தியமாக்கியிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி ஒருவர்பின் ஒருவராக எடுத்துக்கொண்டு இங்கு சொல்ல முயலுவேன். க.நா.சு
Book Details
Book Title மனித சிந்தனை வளம் (Manitha Sinthai Valam)
Author க.நா.சுப்ரமண்யம் (Ka.Na.Subramanyam)
Publisher மெய் நிழல் (Mei Nizhal)
Pages 114
Year 2023
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சமூக அந்தஸ்தில் அந்தணர் முதல் தீண்டாதார் வரை, நாசூக்கு நாராயணர்கள் முதல் ரவுடிகள்வரை, நிலச்சுவான்தார்கள் முதல் பிச்சைக்காரர் கள், பாலியல் தொழிலாளிகள் வரை வெவ்வேறு தளங்களில் பிரிந்தும் இணைந்தும் உருவாகும் சமூக உறவுக் கண்ணிகளைச் சுருக்கமாகவும் நுட்பமாகவும் கோடிகாட்டுகிறது இந்நாவல். சமூக அமைப்பின் அத..
₹333 ₹350
The growth of Soil நட்ஹாம்சன் நார்வேஜியன் மொழியில்  எழுதி நோபல் பரிசு பெற்ற நாவல். தமிழில் க.நா.சு. ஆங்கிலம் வழியாக 'நிலவளம்' என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்கையை ஒட்டி வாழ்ந்த மனிதர்களின் கதை. காட்டை சீர்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக விளைநிலமாக்கி மனிதன் மிருகங்களுடனு..
₹418 ₹440
அவதூதர்' நாவலை டைப் செய்து அப்பொழுது விளம்பரப்படுத்தப்பட்டிருந்த ஒரு சர்வதேச நாவல் போட்டிக்கு அனுப்பினேன். நாவலுக்குப் பரிசு வரவில்லை. ஆனால் பிரசுரிக்க ஏற்றுக்-கொண்டிருப்பதாகச் சொல்லி ஒரு ஆயிரம் டாலர் ராயல்டி முன்பணமும் கான்ட்ராக்ட்டும் அமெரிக்கப் பிரசுரலாயத்திலிருந்து வந்தது. அச்சுக்கு நூலைக் கொடுக..
₹228 ₹240
எனக்கு மர்ம நாவல்கள் படிப்பதில் கனமான நாவல்கள் படிப்பது போல ஈடுபாடு உண்டு. மர்ம நாவல்களையும் இலக்கியத் தரமுள்ளதாக பிரெஞ்சு நாவலாசிரியர் ஜியார்ஜஸ் ஸிமனான் என்பவர் எழுதுகிறார் என்பதைக் கவனித்தபோது ஏன் அம்மாதிரி சில நாவல்கள் எழுதக் கூடாது என்று தோன்றியது.சிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு சம..
₹133 ₹140