Menu
Your Cart

பாலைப்புறா

பாலைப்புறா
-5 %
பாலைப்புறா
சு.சமுத்திரம் (ஆசிரியர்)
Categories: கதைகள்
₹190
₹200
  • Edition: 1
  • Year: 2016
  • Page: 328
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: அருவி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

பாலைப்புறா

கள விளம்பரத்துறை அதிகாரி என்ற முறையில்,நண்பர் சமுத்திரம்,எய்ட்ஸ் பற்றிய பல விழிப்புணர்வு கூட்டங்களை,முகாம்களை,பட்டறைகளை நடத்தும் பொறுப்பில் ஈடுபட வேண்டியிருந்தது.தனியாரும் அரசும் கூட்டாக செய்து வரும் விளம்பரங்களைப் பற்றி விமர்சிக்கும் வாய்ப்பை அப்போது அவர் எனக்குக் கொடுத்தார்.அரசாங்கம் உபதேசிக்கும்,ஒழுக்கம்,எய்ட்ஸ் பற்றிய விளம்பரங்கள், விழிப்புணர்வு இயக்கங்கள் ஆகியவை குறித்த எனது கருத்துக்களை,எல்லா அரசு மேடைகளிலும் பேசவும்,விவாதிக்கவும்,முழு சுதந்திரத்தோடு சொல்வதற்கும்,காரணமாக இருந்தவர் சு.சமுத்திரம்.இறுதி நோக்கம்,சாதாரண மக்களின் வாழ்க்கையை ஒரு துளியாவது மேம்படுத்துவதற்கு உதவுவதாக இருக்குமானால்,யாரும் மனதுக்குப்பட்டதை சொல்லலாம் என்பது சமுத்திரத்தின் ஆழமான நம்பிக்கை என்று எனக்குப்படுகிறது.இந்த அணுகுமுறைதான் அவரது எழுத்திலும் வெளிப்படுகிறது.


எய்ட்ஸ் நோயாளிகளின் வலிகளை,வேதனைகளை வெளிப்படுத்துவதை விடவும்,இந்த தொடர்கதையில்,சமுத்திரம் அதிக வெற்றி பெறுவது எய்ட்ஸின் பெயரால் மோசடிகளில் ஈடுபடுகிற சில மருத்துவர்களையும், ‘தொண்டு’ நிறுவனங்களையும் அம்பலப்படுத்து வதிலேயேயாகும்.கலைவாணி பாத்திரம்,சமுத்திரத்தின் வேதனைகளுக்கும்,தார்மீகக் கோபத்துக்கும் வடிகாலாய் விளங்குகிறது;குடும்பக் கட்டுப்பாடு திட்டம் எப்படி முறைகேடாகவும்,அராஜமாகவும் நடைமுறையில் ஒரு காலகட்டத்தில் இருந்ததோ,அதே திசையில் எய்ட்ஸ் திட்டம் போய்க் கொண்டிருப்பது பற்றி மருத்துவத்துறையிலும்.சமூக நலப்பணித் துறையிலும்,பலர் கவலையோடு இருக்கிறார்கள்.அவர்களின் பிரதிநிதியாக சமுத்திரம்,இந்த நாவலில் செயல் பட்டிருக்கிறார்.அதே சமயம்,வெவ்வேறு தளங்களில்,மனித இயல்புகள்,எப்படி செயல்படுகின்றன என்பதில் ஆர்வம் காட்டும் எழுத்தாளனாக,எய்ட்ஸ் நோயாளி மனோகருடன்,விதவிதமான முறைகளில் உறவாடும் பல்வேறு மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

Book Details
Book Title பாலைப்புறா (paalaipura)
Author சு.சமுத்திரம் (S.Samuthiram)
Publisher அருவி (aruvi)
Pages 328
Year 2016
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தென்காசி திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் வேலை பார்த்தவர். 15 புதினங்கள், 8 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகத் திகழ்ந்தவர். அடிமட்டத்து மக்களின் வாழ்க்கைய..
₹171 ₹180