Menu
Your Cart

பூனைகள் நகரம்

பூனைகள் நகரம்
-5 % Out Of Stock
பூனைகள் நகரம்
ஹாருகி முரகாமி (ஆசிரியர்), ஜி.குப்புசாமி (தமிழில்)
₹333
₹350
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

முரகாமி – நவீன ஜப்பானியனின் அகக்குரல்

ஹாருகி முரகாமியின் பெயர் தமிழ் இலக்கியச் சூழலுக்கு பரிச்சயமாகி பதினைந்து வருடங்களாகி விட்டன. இக்காலகட்டத்தில் தமிழில் மிக அதிகமாக வாசிக்கப்பட்ட அயல் எழுத்தாளர்களில் அவரே முதன்மையானவரும் கூட. இதற்குக் காரணங்கள் எளிமையானவை. கீழைத்தேய ஆன்மாக்களிடையே காணும் ஒற்றுமைகள். ஆசிய இதயத்தோடு மேற்குலக சிறகுகளையும் பொருத்திக் கொண்டிருக்கும் விநோதம் மற்றொரு காரணம். இந்தியப் புராணிகக் கதைகளின் கவர்ச்சிக்கு தென்னமெரிக்க மாய யதார்த்தப் புனிதங்கள் மற்றொரு பரிமாணத்தைத் தந்ததென்றால், முரகாமியின் புனைவுகளில் வெளிப்படும் மாயங்கள், ஜப்பானிய கிமானோக்களோடு அமெரிக்க – ஐரோப்பிய சிறகுகளையும் பொருத்திக் கொண்டு உலமமயமாக்கலில் எல்லைகளைத்தாண்டி வேர்பதித்துக்கொண்ட நவீன மனிதனின் அகச்சிக்கல்களுக்கு நெருக்கமாகியிருக்கின்றன.

இவை இன்றைய தமிழ் மனதுக்கு அளிக்கும் விசாலப்பார்வை அலாதியானது. கிட்டத்தட்ட போதையூட்டக் கூடியது. அதனால்தான் முரகாமியை முதன்முதலாக வாசித்த வாசகன் மேலும் மேலும் அவரைத் தேடித்தேடி வாசிக்கிறான். இந்தக் கவர்ச்சிதான் உலகின் வேறெந்த தீவிர இலக்கியவாதிக்கும் இருப்பதைவிட அதிகமான வாசகர் கூட்டத்தை முரகாமிக்கு சேர்த்துக் கொடுத்திருக்கிறது. இப்பெரும் வாசகப் பரப்பைக் கண்டு முரகாமியை வாசிக்காமலேயே அவரை கேளிக்கை எழுத்தாளர் என்று முத்திரை குத்திவிடுகிற விமரிசனங்களையும் தமிழ் உலகம் கண்டு கொண்டிருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளாக ஒவ்வொரு வருட நோபல் அறிவிப்புக்கு முன்பும் முரகாமியின் பெயரை எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழ் வாசகர்கள் எண்ணிக்கையும் வியப்பூட்டுமளவுக்கு அதிகமாகிக் கொண்டுவருவதைப் பார்க்கிறோம். இவர்களில் பெரும்பாலோர் அவரது சிறுகதைகளை மட்டுமே வாசித்தவர்களாக இருப்பார்கள்.

ஆனால் முரகாமியின் மேதமையை அவருடைய நாவல்களில்தான் முழுமையாகக் காணமுடியும். நான்கு வருடங்களுக்கு முன் வெளிவந்த அவரது மகத்தான நாவலான 1Q84 ன் சிறு பகுதியே இத்தொகுப்பின் தலைப்புக்கதையான ‘ பூனைகளின் நகரம் ‘. இச்சிறுகதைக்கு வெளியே பல்வேறு அடுக்குகளில் பின்னப்பட்ட அந்நாவலையும், அவரது நாவல்களில் மிகச்சிறந்ததாக நான் கருதும் Wind – Up Bird Chronicle ஐயும் வாசிப்பவர்களுக்கு முரகாமியின் விஸ்வ‘ரூப தரிசனம் கிடைக்கப்பெறும்.

ஹாருகி முரகாமியின் முதல் சிறுகதைத் தொகுப்பை தமிழில் கொண்டுவந்ததற்காக வம்சி பதிப்பகமும் , நானும், செழியனும், ராஜகோபாலும் பெருமிதம் கொள்வது முற்றிலும் நியாயமானதேயாகும். ‘ நூறுசதவீதம் பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது ‘ என்ற அந்த விநோதமான தலைப்பே அத்தொகுப்புக்குப் பரவலான கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது.

அதன்பிறகு நான் மொழிபெயர்த்த முரகாமியின் சிறுகதைகளைத் தொகுப்பாகக் கொண்டு வருவதற்கு இவ்வளவு வருடங்கள் தாமதமானதற்கு எனது சோம்பலே காரணம். அசாத்திய பொறுமையோடு என்னை சகித்துக் கொண்டு தொகுப்பைக் கொண்டுவரும் என் குடும்ப உறுப்பினர்களான பவா – ஷைலஜாவுக்கு என் அன்பு. பெரியப்பாவுக்காக மிக அற்புதமாக அட்டைப்படத்தை வடிவமைத்துக் கொடுத்த என் செல்லம் வம்சிக்கு முத்தங்கள்.

Book Details
Book Title பூனைகள் நகரம் (Punaiigal ngaram)
Author ஹாருகி முரகாமி (Haruki Muragami)
Translator ஜி.குப்புசாமி (Ji.Kuppusaami)
ISBN 9789384598341
Publisher வம்சி பதிப்பகம் (Vamsi)
Pages 300
Year 2016
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நோர்வீஜியன் வுட்இந்த நாவல் மறுக்கவியலாதபடி நவீனமானதும், மாணவர் எழுச்சி, கட்டுப்பாடற்ற காதல், மது மற்றும் 1960-ன் பாப் உலகம் குறித்த ஞாபகங்களாலும் ஆனது. அத்துடன் இது உணர்ச்சிப்பூர்வமாக பதின்பருவ வயதின் மேலதிக அதிகபட்ச எழுச்சியையும் வீழ்ச்சியையும் விவரிக்கிறது...
₹333 ₹350
ஓரான் பாமுக்கின் படைப்புகளில் தனித்துவமான நாவல் ‘பனி’. சொல்லப்படும் கதையும் கதை நிகழும் களமும் அவரது பிற நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. பாமுக்கின் படைப்புகளில் வெளிப்படையாக அரசியல் பேசும் நாவல் ‘பனி’. மதச் சார்புக்கும் சார்பின்மைக்கும் இடையிலான மோதலைத் துப்பறியும் கதையின் வேகத்துடனும் தி..
₹618 ₹650
துயரம், நினைவுகள், காதல் - இவை மூன்றும்தாம் ஜான் பான்வில்லின் 'கடலை' உருவாக்கியிருக்கும் கூறுகள். கலை வரலாற்று ஆய்வாளரான மாக்ஸ் மார்கன் இளம் பருவத்தில் விடுமுறையைக் கழித்த கடலோர கிராமத்துக்கு மனைவி அன்னாவின் மறைவுக்குப் பிறகு திரும்பவும் வருகிறார். பிள்ளைப்பிராயக் கோடைக்காலத்தில் பார்த்த அதே கிர..
₹325
காலம்: பதினாறாம் நூற்றாண்டு. களம்: துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல். ஆட்டமன் சாம்ராஜ்ஜியத்தின் சுல்தான் மூன்றாம் மூராத் ஹிஜ்ரா சகாப்தத்தின் ஆயிரமாவது ஆண்டுத் தொடக்கத்தைக் குறிக்கும் ‘விழா மலரை’ உருவாக்க விரும்புகிறார். ஆட்டமன் பேரரசின் மகத்துவங்களையும் தன்னுடைய கீர்த்தியையும் பதிவு செய்யும் வகை..
₹808 ₹750