Menu
Your Cart

ஆமை காட்டிய அற்புத உலகம்

ஆமை காட்டிய அற்புத உலகம்
-5 %
ஆமை காட்டிய அற்புத உலகம்
யெஸ்.பாலபாரதி (ஆசிரியர்)
₹71
₹75
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கவிதைகள், சிறுகதைகள், நாவல், பத்திரிக்கை செயல்பாடுகள், சிறப்புக் குழந்தைகள் குறித்தான நூல்கள், ஆகிய தன் படைப்பு அனுபவங்களை எல்லாம் ஒரு தூரிகையின் இழைகளாகக் கொண்டு இந்த சிறார் நாவலை தீட்டியிருக்கிறார் யெஸ். பாலபாரதி. குழந்தைமையை ஆராதிக்கும் பேருவகையிலிருந்து, களிப்பூட்டிக் கற்பிக்கும் கனிவிலிருந்து உருவாகியிருப்பது இது. இயற்கையின் இயல்போடு சிறார் மனதை இசையவைக்கிற முயற்சி. ஆமையுடன் ஆழ்கடலுக்கு அழைத்துச் சென்று காரணங்களை கதையாய் கூறி கரை சேர்க்கும் கலையாகியிருக்கிறது இந்தப் படைப்பு. சிறார் படைப்பாளியாக முகிழ்த்திருக்கும் பாலபாரதியின் வருகை முக்கியமானது. சிறார் இலக்கிய தளத்தில் அவரால் அரியன நிகழும் என்பதை நான் உறுதியுடன் அறிகிறேன். வருக பாலபாரதி! - யூமா வாசுகி சாகசம் பிடிக்காத குழந்தைகள் இருக்க முடியுமா? இந்தக் கதையில் கடல் எனும் அற்புதங்களும் மர்மமும் நிரம்பிய உலகத்தில் சாகசங்கள் நடைபெறுகின்றன. ஜூஜோ, டாங்கோ உள்ளிட்ட கடல் உயிரினங்களுடன் குழந்தைகளும் சேர்ந்துகொள்கிறார்கள். கடல் சூழலியல் பற்றிய முக்கிய தகவல்களையும் கதையுடன் இணைத்துத் தந்திருப்பது சிறப்பாக உள்ளது. யெஸ்.பாலபாரதி எழுதிய இந்தக் குறுநாவலை, புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ளது. சிறார் நாவல் உலகில் ஓரு புதிய வரவு, ‘ஆமை காட்டிய அற்புத உலகம்’. ஜூஜோ என்ற ஆமையுடன் சிறுவர்கள் மேற்கொள்ளும் ஒரு சாகசப் பயணத்தை விவரிப்பதுதான் இந்த நாவல். சிறுவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் எப்போதும் வசீகரிப்பது கடல். கடலும் அதன் அற்புதங்களும் கேட்கச் சலிக்காதவை. அத்தகைய விரிவானதொரு பின்புலத்தில் கடலுக்குள்ளே சென்று நாமே பார்க்கிற நேரடி அனுபவத்தைத் தருகிறது இந்நாவல். கடல்வாழ் உயிரினங்கள், அவற்றின் வாழ்க்கை முறை, கடலை மாசுபடுத்தி அதன் தூய்மையைக் கெடுக்கும் பொருட்கள், சுற்றுச்சூழல் எனப் பல தகவல்களை இந்தக் கதையின் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது. கதையைச் சொல்லிக்கொண்டு போவதோடு ஒவ்வொரு அத்தியாயத்திலும் சிறப்புத் தகவல்களும் பெட்டிச் செய்தியாக இடம்பெற்றிருக்கின்றன. எந்த இடத்திலும் தொய்வில்லாமல் ஜாலியான நடையில் சிறார் மனம் கவரும்படி எழுதியிருக்கிறார் நூலாசிரியர். கி. சொக்கலிங்கத்தின் பொருத்தமான ஓவியங்கள் நாவலுக்குக் கூடுதல் அழகு சேர்க்கின்றன.
Book Details
Book Title ஆமை காட்டிய அற்புத உலகம் (Aamai Kaattiya Arputha Ulagam)
Author யெஸ்.பாலபாரதி (S.Balabharathi)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 80
Year 2016
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தங்களின் குழந்தைக்கு இன்னது என்று உணர்ந்துகொள்ள முடியாமல் இருக்கும் ஆயிரக்கணக்கான பெற்றோரில் ஒருவருக்காவது இப்புத்தகம் பயன்பட்டால் மிகுந்த மகிழ்ச்சியடைவோம். சரி, என் குழந்தை நல்லா இருக்கு. நோ ப்ராபளம் என்பவரா நீங்கள்.. அப்படியெனில்.. நீங்களும் தான் எங்களின் இலக்கு. குறைவான ஆட்டிசப்பாதிப்பு உள்ள குழந..
₹86 ₹90
மரப்பாச்சி சொன்ன ரகசியம்:   செம்மரக்கட்டையால் செய்யப்பட்ட மரப்பாச்சிப் பொம்மை ஒன்று, ஷாலினி எனும் சிறுமிக்குக் கிடைக்கிறது. அப்பொம்மை திடீரெனப் பேசத் தொடங்குகிறது. ஷாலினிக்குக் கிடைக்கும் சுவாரசியமான அனுபவங்கள் தான் இந்நூல்.   சுற்றுச் சூழல் பற்றிய புரிதலை மிக எளிமையாகச் சொன்ன பாலபாரதியின்..
₹57 ₹60
தமிழ் சிறார் இலக்கிய உலகில் இது, கொஞ்சம் புதுமையான முயற்சி. ஏற்கெனவே வெளியான பிரபலமான சில சிறார் நாவல்களில் இருக்கும் முக்கியமான கதாபாத்திரங்கள் ஒன்றாக சந்திக்கின்றன...
₹95 ₹100