Menu
Your Cart

இந்திய சுதந்திரப்போரில் இரு சகோதரர்கள்

இந்திய சுதந்திரப்போரில் இரு சகோதரர்கள்
-5 %
இந்திய சுதந்திரப்போரில் இரு சகோதரர்கள்
செ.திவான் (ஆசிரியர்)
₹105
₹110
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்திய சுதந்திரப் போராட்டம் பல இலட்சக்கணக்கான மக்களின் தியாகங்களினால் எழுதப்பட்டது. விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரின் வரலாறும் முழுவதுமாக சொல்லப்படவில்லை என்றாலும் சிலரின் பங்களிப்புகள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. குறிப்பாக, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களின் தியாகங்கள், அவர்களின் வீர வரலாறுகள் முற்றிலுமாக மறைக்கப்படுகின்றன. இதை யாராலும் மறுக்க முடியாது. இவ்வாறு மறைக்கப்பட்ட வரலாற்றிற்கு சொந்தக்காரர்கள்தான் அலி சகோதரர்கள் என்றழைக்கப்படும் மௌலானா முகம்மது அலி மற்றும் சௌகத் அலி. என் தோள் மீது இருக்கும் இரு சிங்கங்கள் என்று தேசத்தந்தை காந்தியடிகளால் பெருமிதத்துடன் கொண்டாடப்பட்ட அலி சகோதரர்களின் வாழ்க்கையை இந்தியர்கள் அனைவரும் அறிந்து கொள்வது காலத்தின் கட்டாயம் ஆகும். முஸ்லிம்களின் அடையாளங்கள் இடங்களின் பெயர்களிலும் சாலைகளின் பெயர்களிலும் இருக்கக் கூடாது என்று கட்டுக்கடங்காத மதவெறி கொண்ட கும்பல் ஆட்சியில் அமர்ந்து வரலாற்றை மறைப்பதிலும் திரிப்பதிலும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றது. இச்சூழலில் அலி சகோதரர்களின் வாழ்க்கையை அறிவது நமது கடமையாகவே இருக்கின்றது
Book Details
Book Title இந்திய சுதந்திரப்போரில் இரு சகோதரர்கள் (India suthanthira poril iru sakotharargal)
Author செ.திவான் (S.Diwan)
Publisher இலக்கியச் சோலை (Ilakiya Solai)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக 1857இல் நடைபெற்ற புரட்சியில் இந்திய சுதந்திரப் பெரும்போரில் சீரி எழுந்த முஸ்லிம்களின் தியாக வரலாற்றையும் வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படாமல் விட்டுப்போன தென்னகத்தின் பங்களிப்பு பற்றியும் அதில் பங்கேற்ற முஸ்லிம்கள் பற்றியும் இயன்றவரை இந்நூலில் தொகுத்திருக்கிறேன..
₹665 ₹700
நான் ஆஸனங்கள் பயின்றவன், நெடுநேரம் மூச்சை அடக்கப் பழகியவன்; கழுத்தைக் கயிறு இறுக்காத வண்ணம் கழுத்தை உப்ப வைத்து மூச்சை அடக்கிக் கொள்ளத் தெரிந்தவன்; ஆகையால் எனது உயிர் போகாமல் இன்னும் இருப்பவன்; நான் விரும்பினாலொழிய என்னை நீங்கள் கொல்ல முடியாது; இனி நான் உயிர்வாழ விரும்பவில்லை. எனக்காக என்னோடு தோளோடு..
₹219 ₹230
முகலாயப் பேரரசர் ஷாஜஹானும், ஆலம்கீர் ஔரங்கஜேப்பும், டில்லியை அதிர்ஷ்டத் தலைநகர் என்று அழைத்தனர். கிபி 1719 இல் பூமி அதிர்ச்சி, கிபி 1739 இல் நாதிர்ஷாவின் படையெடுப்பும், கிபி 1759 இல் மராத்தியர் படையெடுப்பு, கிபி 1798 இல் ரோஹில்லாக்களின் தீவைப்பு, கிபி 1803 இல் பிரிட்டிஷாரின் நுழைவு. இத்தனையும் தாங்க..
₹43 ₹45