Menu
Your Cart

ஆராச்சார் | Aarachaar

ஆராச்சார் | Aarachaar
-5 %
ஆராச்சார் | Aarachaar
கே.ஆர்.மீரா (ஆசிரியர்), மோ.செந்தில்குமார் (தமிழில்)
₹713
₹750
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆராச்சார்: மேற்குவங்கத்தில் தூக்குத்தண்டனை நிறைவேற்றும் தொழிலை நூற்றாண்டுகளாக பரம்பரைத் தொழிலாகச் செய்துவரும் ஒரு குடும்பத்தைக் குறித்து எழுதப்பட்ட மலையாளப் புதினம். அக்குடும்பத்தில் ஒருத்தியான இருபத்தியிரண்டு வயது இளம் பெண் சேதனாவின் பார்வையில் கொல்கத்தாவின் வரலாறும் நிகழ்காலமும் ஊடாட, காதலின் தூக்குக்கயிறு இறுக்கி மூச்சுத் திணறும் ஆராச்சார் புதினம் ஒரு காவியமாக விரிகின்றது. விளிம்புநிலைப் பெண் குரலை ஒங்கி ஒலிக்கச் செய்யும் இப்புதினம் ஊடக அரசியல், சமூக அவலங்கள், சாதிக் கோட்பாடுகள், பாலின ஏற்றத்தாழ்வுகள் எனப் பல்வேறு விஷயங்களையும் நுட்பமாக அலசி ஆராய்ந்து வாசகர்களின் முன் வைக்கிறது. இப்புதினத்திற்கு வயலார் விருது, ஓடக்குழல் விருது, கேரள சாகித்திய அகாதெமி விருது, மத்திய சாகித்திய அகாதெமி விருது எனப் பல மதிப்புவாய்ந்த விருதுகள் கிடைத்துள்ளன. கே. ஆர். மீரா : மாறுபட்ட கதைக்களங்களையும் தனித்துவமான மொழியையும் கொண்டு, சமகால மலையாள எழுத்துவலல் தனித்து ஒளிர்பவர் சமூக வரலாறுகளை, விளிம்புநிலைப் பார்வையிலிருந்து மிக எளிதாகக் கதைகளாக்கிலிடும் பேராச்சரியம்; மலையாள எழுத்தின், சமகாலத்தின் புதிய வழித்தடம் கே.ஆர். மீரா. ஒவ்வொரு படைப்பிலும் பெண் குரலை மிக நுட்பமாக நெய்திடும் இவர், தனது இதழியல் பணியைத் துறந்துவிட்டு 2001 முதல் எழுத்துப்பணியில் தீவிரமாக இயங்கி வருகிறார். மோ செந்தில்குமார் : இப்புதினத்தின் மொழிபெயர்ப்பாளர் கோயம்புத்தூர் அரசு சுலைக்கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றிவரும் இவர், தமிழாய்வுச் சிந்தனைக்கு உரைகல்லாக விளங்கக்கூடிய 'பெயல்' ஆய்விதழின் முதன்மை ஆசிரியராகச் செயல்பட்டு வருகிறார். மலையாளச் சிறுகதைகள், கவிதைகள் பலவும் இவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
Book Details
Book Title ஆராச்சார் | Aarachaar ( Aarachaar)
Author கே.ஆர்.மீரா
Translator மோ.செந்தில்குமார்
ISBN 9789355482969
Publisher சாகித்திய அகாதெமி (Sahitya Akademi)
Published On Jul 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு , New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சூர்ப்பனகையில் நம் சமூகத்தின் பல்வகையான பெண்கள் வந்து வந்து போகிறார்கள். அவர்களின் சந்தோசக் கதவுகள் அடைக்கப்படுவதால் மனச்சோர்வில் மூழ்கிப் போகிறார்கள். அன்பின் ஈரம் கசியும் ஒரு வார்த்தைக்காக ஏங்குபவர்களாகவும் செல்லும் இடங்களிலெல்லாம் புறக்கணிக்கபடுவேராகவும் இருக்கிறார்கள்...
₹95 ₹100
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்’ நாவலைப் படித்து முடித்துப் புத்தகத்தைக் கீழே வைத்த போது இந்தக் கதாசிரியையின் மற்ற படைப்புகளை மீண்டும் படிக்க வேண்டும் என்ற உள் தூண்டுதல் எனக்குள் ஏற்பட்டது. ஒரு கதையின் வாசிப்பு அப்படி ஒரு விருப்பத்தை நம்மிடம் உண்டு பண்ணும் போது, அந்தக் கதைப் படைப்பாளியின் மற்..
₹133 ₹140
கே. ஆர். மீராவின் படைப்பாளுமையில் கனன்றெரிவது பெண்மைதான் என்ற உண்மையை கபர் நாவலும் உறுதிப்படுத்துகின்றது. அதன் தீக்கொழுந்து சுயமரியாதையினுடையது. அந்தச் சுயமரியாதை மனிதத்தன்மையின் ஒளிர்வேதான் என்ற புரிதலுக்குக் கபர் வாசகரைக் கொண்டு சேர்க்கிறது. – பேரா. எம்.கே. ஸானு தனிப்பட்ட வாழ்க்கை முதல் தேசிய வர..
₹143 ₹150
அறிவற்றவள், நுகர்வுப்பண்டம், தானாக எதையும் செய்யும் தகுதியற்றவள், சார்பு உயிரி எனப் பலவாறு ஒடுக்கிய ஆணியப் பொதுப்புத்திக்குள் புகுந்து அதன் மேட்டிமைத்தனங்களை உடைத்துச் சுக்குநூறாக்கி நடுத்தெருவில் எறிந்துவிடும் அறிவிலும் செயலிலும் ஆற்றல் மிக்க பெண்களைப் படைத்துக்காட்டும் மீராவின் எழுத்து, பழமைவாதக் ..
₹143 ₹150