Menu
Your Cart

மறைமலை அடிகள் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

மறைமலை அடிகள் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
-4 %
மறைமலை அடிகள் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இரா.இளங்குமரன் (ஆசிரியர்)
₹48
₹50
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

மறைமலை அடிகள்

மறைமலை அடிகள் (1876-1950) (இயற்பெயர் சுவாமி வேதாசலம்) தமிழ்ப் பெரும்புலவர்களில் ஒருவர். ஆங்கிலத்திலும், வடமொழியிலும் வல்லுநர். சைவசமயத்தில் மிகுந்த பற்று உடையவர். நல்லாசிரியராகவும், ஆராய்ச்சியாளரெனவும் புகழ் பெற்றவர். தனித்தமிழ் இயக்கம் கண்டது இவரது தலையாய தொண்டாகும். பழமையிலும் புதுமையிலும் ஏற்றம் பெற்றவர். சீர்திருத்தச் செம்மல். மூடப் பழக்கவழக்கங்களையும், பகுத்தறிவுக்கு ஒவ்வாதவற்றையும் ஒதுக்கி அறிவியல் நெறியில் அறநெறி மேற்கொண்டவர். இவரது நினைவாக மறைமலை அடிகள் நூலகம், மறைமலையடிகள் கலைமன்றம் முதலியவை விளங்குகின்றன.

இந்நூலாசிரியர் இளங்குமரன் பல்வேறு நிலைகளில் ஆசிரியராகவும் ஆய்வாளராகவும் 42 ஆண்டுகள் பணிசெய்தவர். இலக்கியம், இலக்கணம், வரலாறு, ஆராய்ச்சி என்னும் வகைகளில் 200க்கு மேல் நூல்கள் இயற்றியவர். பாவாணர் நூலகம், திருவள்ளுவர் தவச்சாலை என்பனவற்றின் நிறுவனர். இச்சிறு நூலில் பிறமொழிவாசகர்களையும் கருத்தில் கொண்டு, மறைமலை அடிகளின் வாழ்க்கை மற்றும் நூல்கள் பற்றிய விவரங்களை எளிமையாக எடுத்துரைத்துள்ளார் இந்நூலாசிரியர்.


Book Details
Book Title மறைமலை அடிகள் (இந்திய இலக்கியச் சிற்பிகள்) (Maraimalai Adigal)
Author இரா.இளங்குமரன் (Iraa.Ilangumaran)
ISBN 817201743X
Publisher சாகித்திய அகாதெமி (Sahitya Akademi)
Pages 115
Year 2012
Edition 4
Format Paper Back
Category Biography | வாழ்க்கை வரலாறு, Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha