Menu
Your Cart

சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு

சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு
-10 % Available
சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு
பி.ஆர்.பாபுஜி (ஆசிரியர்), ரங்கநாயகம்மா (தமிழில்)
₹72
₹80
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

 சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு

ரங்கநாயகம்மா சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு சொல்லவில்லை; மார்க்சியத்தை போதுமான அளவில் விளக்கவில்லை; அது மார்க்சியமே இல்லை என்றெல்லாம் கொச்சைப் பொருள்முதல்வாதியான ஈஸ்வரன் விளக்குவதில் உள்ள அபத்தத்தை நாம் இப்போது பார்ப்போம்:

இவரைப் பொறுத்தவரை, சாதி உலர்ந்து உதிர்ந்துவிடும் என்பதுதான் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு சொல்லும் வகையில் எழுதுவதாகும். இந்த சமூக அமைப்பு எத்தகையது, உழைப்புச் சுரண்டல் என்றால் என்ன? உழைப்புச் சுரண்டலை புரிந்து கொள்ளவேண்டும், உழைப்புச் சுரண்டலை எதிர்க்க வேண்டும், தனி உடமையின் அடிபடையிலான உற்பத்தி சாதனங்களின் உடைமையை மாற்றி அமைக்க வேண்டும், அதன் அடிப்படையிலான உற்பத்தி உறவுகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பாட்டாளி வர்க்க உணர்வு ஏற்படுத்தும் வகையில் விளக்குவது மார்க்சியமில்லை. மேலும், இதையெல்லாம் அடையும் விதமாக வர்க்கப் போராட்டம் தொடுப்பது, வர்க்கப் போராட்டப் பாதையில் மற்றப் போராட்டங்களை நடத்துவது, இதற்கான செயல் திட்டத்தோடு கம்யூனிஸ்ட் கட்சிகள் போராடுவது, அமைப்பு கட்டுவது அவசியம் என்று ரங்கநாயகம்மா விளக்குவதெல்லாம் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வல்ல.

உள்முரண்பாடுகளின் காரணமாக வர்க்கப் போராட்டம் வெடிக்கும், அப்போது சாதி உலர்ந்து உதிர்ந்து விடும் என்று மார்க்சின் முடிவுரையை அப்படியே சாதி என்ற சொல்லை மட்டும் வைத்து எழுதுவதுதான் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு.

அந்த இயக்கப் போக்கை விரிவாக விளக்காததாலும், நடைமுறையோடு அதனை ஒப்பிட்டு விளக்காததாலும் ஈஸ்வரன் நமக்கு ஒரு பொருளாதார நிர்ணயவாதியாக மட்டுமே கடைசியில் எஞ்சுகிறார். அந்த நிர்ணயவாதத்தில் எந்த வகையிலும் நாம் பாடாளி வர்க்க உணர்வைக் காணமுடியாது. அது குட்டி பூர்ஷுவா அறிவுஜீவித்தனமாக மட்டுமே எஞ்சுகிறது. ஒருவகையில் நிலவுடைமை ஆதிக்க மனநிலையை கொண்டதாகவும் இருக்கிறது. தத்துவத்தின் full stop, comaவை மட்டும் சரி பார்க்கும் ஒரு ஆசிரியர் தன்மை விமர்சனங்களும், கொட்டேஷன் தொகுப்பு நூல்க்ளும் எந்த வகையிலும் பாட்டாளிவர்க்கத்தையோ-தலித் மக்களையோ (வர்க்க) அரசியல் மயப்படுத்த உதவாது. மேலும், பாட்டாகளிடையே, தலித்திகளிடையே அறச்சீற்றத்தையோ, போராட்டக் குணத்தையோ ஏற்படுத்தவும் உதவாது. அதனினும் பிரச்சினையாக மார்க்சியம் குறித்த ஒரு தப்பெண்ணத்தையும், நம்பிக்கையின்மையையுமே ஏற்படுத்த அது உதவும். அ.கா.ஈஸ்வரனின் நூலைப் படித்ததைக் கொண்டு நடைமுறையில் மார்க்சியத்தை எப்படி பொருத்திப் பார்த்து விளக்குவது என்பதற்கு எனக்கு எந்த வகையிலும் உதவியதில்லை. தம் சொந்த விளக்க முறையில் எழுதப்பட்ட அரசியல் பொருளாதாரம் உள்ளிட்ட மார்க்சிய நூல்களில் எனக்கு அந்த சிரமம் இருக்கவில்லை.

Book Details
Book Title சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு (sathiyaprachanaikkana thirvu)
Author பி.ஆர்.பாபுஜி (P.R.babuji)
Translator ரங்கநாயகம்மா (ranganayagamma)
Publisher குறளி பதிப்பகம் (kurali pathippagam)
Pages 416
Year 2016
Edition 3
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சாதிய பிரச்சினைக்கு தீர்வுசெல்ல வேண்டிய பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய சக்திவாய்ந்த சித்தாந்தமே இவ்வுலகிற்குத் தேவைப்படுகிறது.அந்த சித்தாந்தவாதி புத்தராகவோ,கார்ல் மார்க்ஸாகவோ,அம்பேத்காராகவோ அல்லது வேறு யாரேனும் ஒருவராக இருக்கலாம்.நோயை எது குணப்படுத்துகிறதோ அதுவே மருந்து! மனிதர்களுக்கு துன்பங..
₹80
குழந்தைகள் அறிவியல் உண்மைகளைக் கண்டடைய வேண்டும். நாம் வாழும் உலகம் பற்றி, இயற்கை பற்றி, எல்லாவற்றையும் பற்றி ஆதாரங்களுடன் விளக்குவது அறிவியல் ஆகும். இயற்கை தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஒருவர் படிக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. மருத்துவ விஞ்ஞானத்தை அனைவரும் படிப்பது அவசியமில்லை. அன்றாட வாழ்விற்க..
₹180