Menu
Your Cart

வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி

வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி
-5 %
வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி
சோ.தர்மன் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அழிந்துவரும் முதன்மையான நாட்டுப்புறக் கலைகளில் ஒன்று வில்லிசை. வாத்தியங்கள் என்று சொல்லக்கூடிய எதுவுமே இல்லாமல், பனையிலிருந்தும் பனையோடு தொடர்புடைய சில பொருள்களையும் வைத்துக்கொண்டு நிகழ்த்தப்பட்ட கலைதான் வில்லிசை. சோ. தர்மன் இந்த நூலில் பிச்சைக்குட்டியின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்வதன் மூலம் வில்லிசை அவருடைய மடியில் தவழ்ந்து வளர்ச்சி பெற்ற விதங்களை நம்மிடம் மீட்டுத் தருகிறார். சிறு தெய்வ வழிபாட்டிற்கு மட்டுமே நிகழ்த்தப்பட்ட இந்தக் கலை, நெல்லை அய்யம்பிள்ளைக்குப் பிறகு பிச்சைக்குட்டியாபிள்ளையிடம் வந்துசேர்ந்து, முழுவடிவம் பெற்ற கதையை நம்மிடம் சொல்லும் போது நமக்குப் புதிய அனுபவத்தைத் தருகிறார் நூலாசிரியர். வில்லிசையில் புதுப்புதுக் கதைகள், காலத்திற்கேற்ற நவீனம், புதிய இசைக் கருவிகளைப் புகுத்தியது, சங்க இலக்கியத்திலும் ஆங்கிலத்திலும் இருந்த புலமை, வளமான குரல்வளம், பல்வேறு ராகமெட்டுக்கள், சங்கீத ஞானம், சமகாலப் பிரச்சினைகளைக் கச்சிதமாகக் கதையினூடே சொருகுதல், துளியும் ஆபாசம் இல்லாமல் நினைத்து நினைத்துச் சிரிக்கவைக்கும் நகைச்சுவை என ஒவ்வொன்றும் பிச்சைக்குட்டியிடம் எவ்வாறு கைகூடியிருந்தன என்பதை விவரிப்பதன் மூலம் சோ. தர்மன் வில்லிசையின் உள்நாதத்தை நம்முள் பரவ விடுகிறார். அயல்நாட்டினருக்கும் என்.எஸ். கிருஷ்ணன், எஸ்.எஸ். ராஜேந்திரன், டி.ஏ. மதுரம் போன்ற திரைக் கலைஞர்களுக்கும் வில்லிசையைப் பயிற்றுவித்த பிச்சைக்குட்டியின் ஆசிரியம் குறித்தும் நூலாசிரியர் கூறுகிறார்; நம்மையும் அதில் பங்கேற்க வைக்கிறார். தமிழக நாட்டுப்புறக் கலைகளில் ஆர்வமுள்ளவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்.
Book Details
Book Title வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி (Villisai vendhar pichaikutty)
Author சோ.தர்மன் (So.Dharman)
ISBN 978 81 7720 336 3
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 144
Year 2023
Edition 1
Format Paper Back
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சூல் :2019-ஆம் ஆண்டிற்கான ''சாகித்திய  விருதினை வென்ற நாவல்"தூர்வை', "கூகை' நாவல்களைத் தொடர்ந்து இந்நாவலை எழுதியிருக்கிறார் சோ.தர்மன்.ரஷியாவின் பிரஷ்னேவ் எழுதிய "தரிசு நில மேம்பாடு' புத்தகத்தில் வரும் ஒரு சம்பவமே நாவலின் கரு என்கிறார்.எட்டயபுரம் அரசாட்சிக்கு உட்பட்டது உருளைப்பட்டி கிராமம். இங்க..
₹475 ₹500
தூர்வை - சோ.தர்மன்:'தூர்வை, அதிகம் அலட்டிக் கொள்ளாமல் எழும் ஒரு மாற்றுக் குரல், திர்ப்புக் குரல்... தானறிந்த வாழ்க்கையின் ஒரு சித்திரம் இது. வரலாற்றின் ஒரு பரிமாணம். வெகு தீர்மானமான அமைதியான குரல். இக்குரல்தான் ஒரு எழுத்தாளனின் கலை சமூக சக்தியாக, உண்மைக்குச் சாட்சியாக, மனசாட்சியின் குரலாக, இப்படிப் ..
₹266 ₹280
கூகை(நாவல்) - சோ.தர்மன்:கூகையை தலித்துகளுக்கான குறியீடாக்கி, சமகால தலித் வாழ்க்கையைப் படைப்பாக உருவாக்குவதில் பெரும் வெற்றி கண்டிருக்கிறார் சோ. தர்மன்.கூகை என்கிற கோட்டான் இடப்பெயர்ச்சியில் ஆர்வமில்லாத பறவை. மிகுந்த வலிமை கொண்டது. எனினும் அந்த வலிமையைத் தன் உணவுக்காக அன்றி வேறு சமயங்களில் பெரிதும் ப..
₹333 ₹350
கரிசல்மண் சார்ந்த நிலவெளியில் மக்கள் திரளின் செயல்பாடுகள் இனக்குழுத் தன்மைகளுடன் இருப்பது தவிர்க்கவியலாதது. பூமியில் ஒவ்வொரு நிலத்துக்குமென இயற்கையாக உருவாகியிருக்கும் தனிப்பட்ட பண்புகள், அங்கு வாழ்கிற அனைத்து உயிரினங்களின் இருத்தலையும் நுட்பமாகத் தீர்மானிக்கின்றன. இந்தத் தொகுப்பில் உள்ள சோ. தர்மனின..
₹124 ₹130