Menu
Your Cart

ஒரு கலை நோக்கு

ஒரு கலை நோக்கு
-5 %
ஒரு கலை நோக்கு
சுந்தர ராமசாமி (ஆசிரியர்)
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சுந்தர ராமசாமி, தன்னை பாதித்த, செயலுக்கு ஊக்கமளித்த, சிந்தனைக்கு உரமூட்டிய படைப்புகளையும் ஆளுமைகளையும் முன்னோடிகளையும் குறித்து எழுதியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஒரு கலைஞனின் சமரசமற்ற நோக்கிலேயே தான் பெற்ற அனுபவத்தையும் அறிவையும் கண்டடைந்த முடிவுகளையும் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். அனுபவசாரத்திலிருந்து உயிர்கொண்ட கருத்துகள். உண்மையின் சார்பில் நிற்கும் முனைப்பு. கலையில் தார்மீக மதிப்பிட்டை வலியுறுத்தும் பிடிவாதம், படைப்பின் பெருவெளிச்சத்தின் முன் அடையும் குதூகலம், மானுடக் கரிசனையின்பால் நெகிழ்வு - இவை அவரது கலைநோக்கின் அடிப்படைகள். மிகைவியப்போ, பொருந்தா உதாசீனமோ தென்படமுடியாத அந்த கலைநோக்கில் பார்க்கப்படும் ஆளுமைகளும் படைப்புகளும் மேலும் பெருமை பெறுகின்றன. நோக்குபவரும் பெருமதிப்பைப் பெறுகிறார்.
Book Details
Book Title ஒரு கலை நோக்கு (Oru kalai nokku)
Author சுந்தர ராமசாமி (Sundara Ramasamy)
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category கட்டுரைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது ‘தோட்டியின் மகன்.’ தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம்-சேரி; கேட்காத மொழி-பாமரக் கெ..
₹190 ₹200
மனிதனுடன் தொடர்பு ஏற்படும்போது, மிகச் சுருங்கிய நேரத்தில், குறுக்குப் பாதை வழியாகக் கிடுகிடு என நடந்து, அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகைவாசலைச் சென்றடைகிறேன். என் மீது உன் துக்கத்தையெல்லாம் கொட என்ற செய்தியை எப்படியோ மறைமுகமாக என்னால் உணர்ததிவிட முடிகிறது. மனிதனுக்குரிய சகல பலவீனங்களும் கொ..
₹238 ₹250
சுந்தர ராமசாமியின் முதலிரு நாவல்களிலிருந்து மொழி நடையிலும் அமைப்பிலும் வேறுபட்ட வகையில், முழுக்கவும் குடும்பம் சார்ந்த சூழலைக் களமாகக் கொண்டது ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்.’ கேரளத்தின் கோட்டயத்தில் 1937, 38, 39ஆம் ஆண்டுகளில், ஐந்து குடும்பங்களைச் சார்ந்த மனிதர்களிடையேயான உறவு நிலைகளை மையமாகக் கொண்..
₹660 ₹695
‘கூறியது கூறல்’, ‘போலச் செய்தல்’ இவையிரண்டையுமே மறுதலித்து மேலெழும் சுந்தர ராமசாமியின் படைப்பு உலகின் ஆகச் சிறந்த கதைகளின் தொகுப்பு இந்நூல். யதார்த்தக் கதைகளின் வழியே வாசகனை மனவிரிவுக்கு உட்படுத்தும் அதேவேளையில் மொழியழகோடு கூடிய அபூர்வமான சொல்லாட்சிகள் மூலம் கவித்துவத் தருணங்களைத் தேர்ந்த இசைக்..
₹428 ₹450