Menu
Your Cart

இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
-5 %
இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
வெ.நீலகண்டன் (ஆசிரியர்)
₹71
₹75
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இன்றைய இளைய தலைமுறை பல புதுமைகளுக்கு பெருமிதத்தோடு சொந்தம் கொண்டாடுகிறது. யாரிடமாவது சென்று வேலைக்குச் சேர்ந்து சம்பாதிக்கும் மனநிலையைத் தூக்கிப் போட்டுவிட்டு, தங்களுக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பலருக்கு வேலை தரக்கூடிய தொழில் முயற்சிகளை 30 வயதுகூட நிரம்பாத இளைஞர்கள் பலர் மேற்கொண்டிருக்கிறார்கள். யாரோ பயணித்த, அழகாக உருவாக்கிக் கொடுத்த பாதையில் இவர்கள் பயணிக்கவில்லை. தங்களுக்கான பாதைகளை தாங்களே உருவாக்கினார்கள். மாய இருட்டிலிருந்து தங்களுக்கான வெளிச்சத்தைத் தேடிக் கண்டடைந்த இவர்கள், மற்றவர்களும் பயணிக்க வல்ல பாதையாக அதை மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள்.எல்லா தொழில்நுட்பங்களையும் போலவே இணையமும் இருமுனை கூர்மையான ஒரு கத்தியே! உலகையே ஒரு குடையின்கீழ் கொண்டு வந்திருக்கிறது இந்த வல்லமைமிக்க வலைப் பின்னல். இதன் ஆபத்துகள் பற்றி இங்கே விவாதிக்கப்பட்ட அளவுக்கு, இதன்மூலம் சம்பாதிக்கும் கலை விவாதிக்கப்படவில்லை. எதிலுமே இருக்கிற தவறுகள்தானே வெளியில் தெரிகிறது; நன்மைகளை நாம்தானே தேடிக் கண்டடைய வேண்டும். அப்படி இணையத்தில் தாங்கள் எப்படி சம்பாதித்தோம் என்ற தொழில் ரகசியங்களை பகிரங்கமாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் இந்த இளைஞர்கள். சம்பாதிப்பது எப்படி என்ற வழியையும் காட்டுகிறார்கள்.இந்த நூல் பலரையும் தொழிலதிபர்கள் ஆக்கும் சாத்தியங்களைக் கொண்டதாக இருக்கிறது..
Book Details
Book Title இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி? (Inayathalathil panam sambathippathu eppadi?)
Author வெ.நீலகண்டன் (Ve.Neelakantan)
ISBN 978-93-85118-13-5
Publisher சூரியன் பதிப்பகம் (Suriyan pathipagam)
Pages 96
Published On Jan 2014
Year 2014
Edition 2
Format Paper Back
Category சுயமுன்னேற்றம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இன்றைய நகரத்து மக்களிடம் இரவு, பகல் போன்ற காலமாற்றங்கள் எந்த வித்தியாசத்தையும் நிகழ்த்துவதில்லை. பொருளாதாரத் தேடலே முதன்மை பெறுவதால், அதைத் தாண்டிய சுக, துக்கங்கள் இம்மாதிரி மக்களின் வாழ்விலிருந்து தூர விலகிப் போகின்றன. அம்மாதிரியான விளிம்பு வாழ் மக்களை முதன்மைப்படுத்திய பதிவுகள் தமிழில் குறைவு. இந்..
₹105 ₹110
மனிதர்கள் படும் பாடெல்லாம் ஒரு சாண் வயிறு எழுப்பும் பசிக்காகத்தான். கிருஷ்ணவேணி, ஏதோ ஒரு முகமறியா மனிதனின் பிணத்தைத் தள்ளுவண்டியில் வைத்து நான்கைந்து கிலோ மீட்டர் தள்ளிக்கொண்டு வருவதும், ஆனந்தி, முகம் தெரியாத யாரோ ஒரு மனிதனின் விந்தணுவை தன் கருப்பையில் சுமப்பதும் பசியை விரட்டுவதற்கான நெடும் போராட்டத..
₹100 ₹105
தமிழர்களின் இல்லங்களை அவசியம் அலங்கரிக்க வேண்டிய நூல்களில் இது முக்கியமானது. வட இந்திய மன்னர்களில் யாருக்கும் இல்லாத பெரும் சிறப்பு ராஜேந்திர சோழனுக்கு உண்டு! இந்தியத் துணைக் கண்டத்தின் எல்லையைத் தாண்டிச் சென்று போரிட்டவர் என வட இந்தியாவில் யாருமில்லை. இப்போதைய ஆப்கானிஸ்தான் வரை அந்தக் காலத்தில் நீ..
₹143 ₹150
தன் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளும் உறவாக.. தனக்கு வழிகாட்டும் முன்னோனாக... தன் வாழ்க்கை நிகழ்வுகளுக்கு காரணகர்த்தாவாக... இப்படி சிறுதெய்வங்களை எல்லாமுமாகப் பார்க்கிறான் கிராமப்புற பாமரன். வேல், நடுகல், மரம் இப்படி எளிமையான பொருள்களில் இறையாக உறைந்திருக்கும் சிறுதெய்வங்களே தமிழக கிராமங்களின் காவல் அர..
₹176 ₹185