Menu
Your Cart

தனியள்

தனியள்
-5 %
தனியள்
தி.பரமேஸ்வரி (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தனியள்

மொழிவயப்பட்ட விவரணையே கவிதையின் அடிப்படை அலகைத் தீர்மானிக்கிறது. சொற்சேர்க்கைகளும் முக்கியமானவை. பரமேசுவரியின் கவிதைகள் வாசிக்கையில் நெருடல்களற்று, தேவையற்ற சொற்களின் ஆக்கிரமிப்பின்றி, அதன் அர்த்தப்பாடுகளை நமக்குள்ளாக எளிதில் நிகழ்த்துகிறது. கவிதையின் சொல்லடுக்குகள் கவிதையை அணுகுவதிலிருந்து சிதைத்து விடாமலிருக்க வேண்டும். அப்படியான படிமங்களில் கவரப்பட்டு மனமொன்றிப்போகிற பல கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. நிராயுதபாணியாகவும், தேம்புதல்களினூடாகவும், பேராசைகளற்ற எளிய எதிர்பார்ப்புகளின் மீதான நிச்சமின்மையையும், அதன் பொருட்டெழுகிற பயங்கள், சந்தோஷங்கள், இயற்கையின் கொண்டாட்டங்களில் சுய இயல்பு நிலைகளைப் பொருத்தி வெளியாற்றும் பலவும் இக் கவிதைகளில் உணர முடிகிறது. வழமையான நவீன பெண் கவிஞர்களின் விரிவு வேலியிருந்து விலகி வேறொரு தளத்தில், பிறழ்வு நிலை சந்தோஷச் சித்திரங்கள், நனவு நிலைத் துயரங்கள், வருத்தம் தோய்ந்த தொய்வற்ற சுய சம்பாஷணைகள் எனத் தனது கவிதையாடலை பரமேசுவரி நிகழ்த்தியிருக்கிறார். எனக்கான வெளிச்சம், ஓசை புதையும் வெளி என்ற முதல் இரண்டு கவிதைத் தொகுப்புகளுக்குப் பின்னர், ஆழ்மன உணர்வுகளின் வெளிப்பாடாக வாசிப்பின் ஊடாட்டத்தில் உள்ளுக்குள் ஒரு ரசவாதத்தை நிகழ்த்துகிற கவிதைகளை உள்ளடக்கிய மூன்றாவது தொகுப்பான ‘தனியன்’ கவிதைத் தொகுப்பின் மூலமாக தனித்துவமான முன்னகர்த்துதலைச் செய்திருக்கிறார் பரமேசுவரி.


                                                                                                               -பொன்.வாசுதேவன்



Book Details
Book Title தனியள் (Thaniyal)
Author தி.பரமேஸ்வரி (T. Parameswari)
Publisher அகநாழிகை (Aganazhikai)
Pages 112
Year 2014
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கலிகெழு கொற்கைநமது காலகட்டத்தின் சித்தாந்தங்கள் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கின்ற பெரும் விருட்சத்தின் அடிமரத்தில் கோடாலி வைத்தாயிற்று என்றும் சொல்லலாம். சித்தாந்தங்கள் தகர்ந்துபோகும் நிலை அண்மையில் ஏற்பட்டுக் கொண்டிருப்பதைக் காண முடிகிற்து. தனிமனித கருத்துச் சுதந்திரம் எந்த அளவில் பொதுமக்களால், ஆட்..
₹228 ₹240
கேளிக்கைப் பொருளாய் மதுப்புட்டிக்குள் அடைக்கலமாகிறது பேச்சு சொற்கள் குழறத் தொடங்கும் பொழுதில் தோழியை அழைக்கிறீர்கள் நட்பின் பெயரால் அழைப்பை ஏற்கும் அவளுக்குத் தெரியாது தன் குரல் அனைவருக்கும் பரிமாரப்படுகின்றதென்று மெதுவான தாள லயத்துடன் தொடங்கும் இசை நேரம் செல்லச்செல்ல முறுக்கேறுகிறது குரல்கள் தடிக்க..
₹94 ₹99