Menu
Your Cart

நவகாளி யாத்திரை

நவகாளி யாத்திரை
-5 %
நவகாளி யாத்திரை
சாவி (ஆசிரியர்)
₹38
₹40
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
“என்னுடைய இலட்சியங்களுக்குக் கீழ் வங்காளத்தில் கடும் சோதனை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன் இத்தகைய ஒரு பெரும் சோதனையில் நான் ஈடுபட்டதில்லை. இந்தப் பரீட்சையில் நான் தேறாமல் போனால் அது அஹிம்சா தர்மத்துக்குத் தோல்வியாகாது. அஹிம்சைக் கொள்கையை ஸ்தாபிக்க நான் கடைப் பிடித்த முறைதான் தோல்வி அடைந்ததாகும். இப்போது நான் தோல்வி அடைந்தாலும் பிற்காலத்தில் தோன்றப் போகும் உத்தமர்களும், மகான்களும் இந்த முயற்சியில் வெற்றி பெறுவார்கள் என்பது நிச்சயம்” என்று மகாத்மா காந்தி நவகாளி யாத்திரையின்போது கூறினார். ஆனால், உண்மையில் அஹிம்சைக் கொள்கையும் தோல்வியடையவில்லை; மகாத்மா கடைப்பிடித்த முறையும் தோல்வி அடையவில்லை. நவகாளியில் மகாத்மா ஆரம்பித்த அஹிம்சா இயக்கம் புது டெல்லியில் ஜனவரி 30-ஆம் தேதி பூர்த்தியாயிற்று. இந்த நூலில் உள்ள கட்டுரைகள் வெறும் நகைச்சுவைக் கட்டுரைகள் அல்ல; வெறும் பிரயாணக் கட்டுரைகளும் அல்ல; சரித்திரத்தில் இடம் பெற வேண்டிய முக்கிய நிகழ்ச்சியைப் பற்றிய தார்மீகக் கட்டுரைகள் ; காந்திஜியையும் அவருடைய ஜீவிய தர்மத்தையும் எல்லோரும் அறியத் தெளிவாக்கித் தரும் கட்டுரைகள் ; இலக்கியம் என்று சொல்வதற்குரிய ரஸமான கட்டுரைகள். தமிழுக்கும், தமிழ் நாட்டுக்கும், தமிழ் நாட்டிலுள்ள காந்தி பக்தர்களுக்கும் ‘சாவி’ சிறந்த பேருதவி புரிந்திருக்கிறார். – கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி
Book Details
Book Title நவகாளி யாத்திரை
Author சாவி (Savi)
Publisher தன்னறம் (Thannaram)
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சாவி என்கிற சா. விஸ்வநாதன் அறுபதாண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் வாழ்ந்து, பல முக்கியத் தடங்களைப் பதித்தவர். ஆனந்த விகடன், கல்கி போன்ற பத்திரிகைகளில் தொடக்கத்தில் இதழியல் பயின்று, தினமணி கதிரின் ஆசிரியராக இவர் பொறுப்பேற்றபிறகு நிகழ்த்திய சாதனைகள் பல. சாவிக்காகவே கலைஞரால் தொடங்கப்பட்ட இதழ் க..
₹133 ₹140
'நம் ஊர்க் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்?' திருவையாற்றில் வெள்ளைக்காரர்களைக் கண்டபோது நமக்குக் கிடைத்த வேடிக்கையும், தமாஷும் அமெரிக்காவில் நம் கல்யாணத்தை நடத்துகிறபோது அவர்களுக்கு ஏற்படலாம் என்று தோன்றியது. அந்த எண்ணம்தான் வாஷிங்டனில் திருமணத்துக்கு ..
₹133 ₹140
பத்திரிகையுலகப் பிதாமகர் என்று அழைக்கப்படும் சா. விஸ்வநாதன் (சாவி) என்பவரால் வாஷிங்டனில் திருமணம் என்ற நகைச்சுவைக் கதை எழுதப்பட்டது. இந்தக் கதை ஆனந்த விகடனில் பதினோரு அத்தியாயங்களாக வெளியானது. 1995ல் சென்னை தொலைக்காட்சியில் தொடராகவும் ஒளிப்பரப்பானது...
₹133 ₹140