Menu
Your Cart

மலை முகட்டில் ஒரு குடில்

மலை முகட்டில் ஒரு குடில்
-5 %
மலை முகட்டில் ஒரு குடில்
ரமீஸ் பிலாலி (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒளி நிறமற்றது. ஆனால், ஆடியின் வழியே பாயும்போது அது ஏழு வண்ணங்களாகப் பிரிகிறது. மழைக்காலத்தில் நீராடி வழியே பாயும் கதிரொளி வானவில்லாய் வெளிப்படுகிறது. அதுபோல், குர்ஆன் வசனங்கள் ஒளியாகும். அவை அடியேனின் சிந்தை என்னும் ஆடியின் வழியே பல்வேறு கருத்துருவங்களாக வெளிப்பட்டதன் பதிவுகளே இக்கட்டுரைகள். எனவே, வானவில்போல் இந்நூல் ஒரு ஞானவில்! இக்கட்டுரைகள் அனைத்தையும் இணைக்கும் மைய இழை மாமறையாம் குர்ஆன் மட்டுமே. எனினும், இக்கட்டுரைகளில் பல்சமய, பல்தத்துவ ஒப்பாய்வுப் பார்வைகள் ஆங்காங்கே இருக்கின்றன. ஞானம் என்னும் நமது தொலைந்த ஒட்டகம் சீனாவில் மேய்ந்துகொண்டிருந்தாலும் அதனைப் பிடித்துக்கொண்டு வரத்தான் வேண்டும், அல்லவா?
Book Details
Book Title மலை முகட்டில் ஒரு குடில் (Malai mugattil oru kudil)
Author ரமீஸ் பிலாலி
ISBN 9788196504502
Publisher சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Pages 122
Year 2024
Edition 1
Format Paper Back
Category Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை, 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்நூல் நம் முன் நறுமண ரோஜாக்களால் ஆனதோர் உலகினைத் திறந்து வைக்கிறது. ரூஸ்பிஹான் என்னும் இஸ்லாமிய ஆன்மிகக் காதலின் மகத்தான ஞானி ஒருவர் வியப்புமிகு துணிச்சலுடன் விளக்கியுள்ள அகப்பார்வைகளின் பதிவுகளே இந்நூல். இந்த இனிய மொழிபெயர்ப்பு வாசகரை பரிபூரண அழகின், தெய்வீகக் காதலின் உலகிற்கு ஏந்திச் செல்கிறது. ..
₹190 ₹200
எழுநூறு ஆண்டுகளாக ஸூஃபிகளால் தமது ‘பாடத்திட்டத்தின்’ ஒரு பகுதியாகப் பயிலப்பட்டுவந்த நூல் இது. சராசரியான புலப்பாடுகளுக்கு அப்பால் அகப்பார்வைகளை உருவாக்குவதற்கு உதவும் ஸூஃபி செவ்வியல் படைப்புகளில் முதன்மையானவற்றுள் ஒன்று...
₹190 ₹200
ஸூஃபி ஞானி ஒருவரின் அகமிய உலகமும் அன்றாட வாழ்வியலும் சந்திக்கும் புள்ளிகள்... ஒளிவீசும் நாட்குறிப்புகளின் வடிவில்...
₹214 ₹225
“பாவங்கள் செய்வதால் உன் உள்ளம் கல்லைப் போல் கடினமாகிவிடுமே, அந்த நிலையை விட்டும் உன்னை நீ பாதுகாத்துக் கொள்” என்றார் ஆலிம். “அத்துடன், பாவங்கள் செய்யாததால் உன் உள்ளம் கல்லைப் போல் கடினமாகிவிடுமே, அந்த நிலையை விட்டும் உன்னை நீ பாதுகாத்துக் கொள்” என்றார் ஸூஃபி...
₹95 ₹100