Menu
Your Cart

ததும்பி வழியும் மௌனம்

ததும்பி வழியும் மௌனம்
-5 %
ததும்பி வழியும் மௌனம்
அ.வெண்ணிலா (ஆசிரியர்)
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழில் பத்தி எழுத்து என்ற ஒருவகை இலக்கியம் பத்திரிகைகளில் சமீப ஆண்டுகளாக பிரபலம் அடைந்துவருகிறது. ஆனால் பிரபல பத்திரிகைகளில் - பெண்கள் பத்திரிகைகளிலும் கூட - ஆண் எழுத்தாளர்களே இதுபோன்ற பகுதிகளில் இடம்பெற்றார்கள். பெண் மனம் விரும்புகிற ஓர் எழுத்தைப் பெண்ணால் படைக்க முடியும் என்ற நம்பிக்கையோடு ‘குங்குமம் தோழி’ இதழில் தொடங்கப்பட்ட ஒரு பத்தியை எழுதத் தொடங்கினார் அ.வெண்ணிலா. கணித ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், திரைப்பட இணை இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்ட அ.வெண்ணிலா, தமிழில் முதன்முதலாக ஒரு பிரபல பத்திரிகையில் பத்தி எழுதிய பெண் எழுத்தாளர் என்ற பெருமை பெற்றார். 38 இதழ்களில் அவர் எண்ணங்களுக்கு வண்ணம் தீட்டி சொற்சித்திரங்களாக அளித்தார். ‘பெண்களின் உலகம் இதுதான்’ என்ற மாயையில் உழன்று கொண்டு, குறிப்பிட்ட வட்டத்துக்கு உள்ளேயே செய்திகளை அளித்து வந்த பத்திரிகைகளிலிருந்து வேறுபட்டு நிற்கவும், அழகிய மாற்றம் காட்டவும் ‘குங்குமம் தோழி’க்குப் பெரிதும் உதவியது அ.வெண்ணிலாவின் கட்டுரைகள். சாதாரண மனுஷியின் ஓட்டங்களில் தொடங்கி, சாதனைப் பெண்களின் வாழ்க்கை வரை அவர் தொடாத மனம் இல்லை. கல்வி முதல் காதல் வரை அவர் எழுதாத செயலும் இல்லை. இப்படி, பெண் எழுத்தைப் பொன் எழுத்தாக்கி இலக்கிய மணம் கமழச் அவரது குறிப்பிடத்தக்க படைப்பு இதோ... உங்கள் சிந்தனையைத் தூண்டும் அழகிய நூலாக!
Book Details
Book Title ததும்பி வழியும் மௌனம் (Thadhumbi Vazhiyum Mounam)
Author அ.வெண்ணிலா (A.Vennila)
Publisher சூரியன் பதிப்பகம் (Suriyan pathipagam)
Pages 0
Year 2015
Category Speech | உரை, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

1930 – 2004 வரை எழுதி வெளிவந்த பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறார் கவிஞர் அ. வெண்ணிலா. கடினமான வேலையை எடுத்துக்கொண்டு, பெண்களின் சிந்தனைப் புரட்சியை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். பெண்களின் உணர்வுகள் நுட்பமாக வெளிப்படுகின்றன. கோதைநாயகி அம்மாளில் ஆரம்பித்து வெண்ணிலா வரைக்கும் ரசிக்கத்..
₹475 ₹500
தேர்தலின் அரசியல்‘அரசியல் கட்சிகள் இட ஒதுக்கீட்டை நிறைவு செய்ய பெண் வெட்பாளர்களை அறிவித்தால் மட்டும் போதாது.அவர்களின் சிதந்திரமான செயல் பாட்டையும் தீர்மானிக்க வேண்டும்.பெண் பிரதிநிதிகளின் அதிகாரத்தைக் கைப்பற்றும் குடும்பத்தின் பிற ஆண்களை கட்சியில் அனுமதிக்கக் கூடாது.’‘விதை இருக்கிறது,மருந்து இருக்கி..
₹86 ₹90
நூறு களிறுகளைப் போரில் கொன்று குவிக்கும் வீரனுக்கும், எதிரிகளே இல்லையென்னும் மாவீரனுக்கும், விரிந்து பரந்த ராஜ்ஜியத்தின் அரசனுக்கும், சட்டிச் சோறு வாங்கிச் சாப்பிட்டுக் காலம் கடத்தும் பரதேசிக்கும், செல்வத்தில் திளைக்கும் வணிகனுக்கும், சமன் குலைந்த நடத்தையுடன் இருக்கும் பித்தனுக்கும் நினைவுகள் ஒன்றே ..
₹475 ₹500