Menu
Your Cart

புலிக்குகை மர்மம்

புலிக்குகை மர்மம்
-4 %
புலிக்குகை மர்மம்
உதயசங்கர் (ஆசிரியர்)
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்நாவலில் வரும் கேப்டன் பாலு, மிகச் சாதாரண குடும்பப் பின்னணி கொண்டவன். படிப்பிலும் அவ்வளவு சூட்டிகையில்லை. பத்தாம் வகுப்பில், ஒரு முறை தோல்வியுற்றவன் ஆனாலும் மாதாகோவில் தெருவிலிருந்த பையன்களுக்கு, அவன் தான் கதாநாயகன். படிப்பினால் மட்டும் தலைமைப் பண்பு வருவதில்லை என்ற கருத்தும், இதிலிருந்து நாம் பெறுகிறோம். ஆசிரியருடைய ஆதனின் பொம்மை என்ற சிறார் நாவலிலும், இவனே நாயகன். மரம் ஏறுவதிலிருந்து கிரிக்கெட் வரை, எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும், அவனை அடித்துக் கொள்ள ஆளில்லை. எறிபந்து, கபடி, பம்பரம், கல்லா மண்ணா, மண்ணா மரமா, கோலிக்குண்டு செதுக்குமுத்துக் கல் எனக் கிராமத்து விளையாட்டுகள் சிலவற்றை இதில் அறிமுகப்படுத்தியிருக்கின்றார், ஆசிரியர். கோவில்பட்டி ஊரின் தெற்கு மூலையிலிருந்த, சொர்ணமலையின் அடிவாரத்தில் ஒரு புலிக்குகை இருக்கின்றது. இருள் சூழ்ந்த அந்தக் குகைக்குப் பெரியவர்களே போக பயப்படுவார்கள். குகைக்குக் கீழே இருந்த பெரிய மைதானத்தில், மேட்டுத்தெரு வெங்கடேஷ் குழுவுக்கும், மாதாக்கோயில்தெரு பாலு குழுவுக்கும், கிரிக்கெட்போட்டி நடக்கிறது. அச்சமயம் புலிக்குகையின் அருகில், அந்நியர்களின் சந்தேகத்துக்குரிய நடமாட்டத்தைச் சிறுவர்கள் கவனிக்கிறார்கள். தொடர்ந்து அவர்கள் குழுவில் விளையாடிய சிறுவன் மாரி, காணாமல் போகிறான். மாரி எங்கே? மாரியைத் தேடி பாலு தலைமையில் சென்ற சிறுவர்கள், அவனைக் கண்டுபிடித்தார்களா? அந்தப் புலிக்குகைக்குள் இருந்த மர்மம் என்ன? அந்த சந்தேகத்துக்குரிய நபர்களின் தலைவன் யார்? தெரிந்து கொள்ள நாவலை வாசியுங்கள். பதின்பருவத்தினரின் வெறும் பொழுது போக்கு சாகசமாக இல்லாமல் சமூகத்துக்கு உதவக்கூடிய சாகசமும், விறுவிறுப்பும் நிறைந்த நாவல். அவசியம் இளையோர்க்கு வாங்கிக்கொடுத்து, வாசிக்கச் செய்யுங்கள்.
Book Details
Book Title புலிக்குகை மர்மம் (pulikugai marmam)
Author உதயசங்கர் (Udhayasankar)
Publisher வானம் பதிப்பகம் (Vanam Pathippagam)
Year 2020
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பேசும் தாடி..
₹86 ₹90
மரணத்தை வென்ற மல்லன்யாதார்த்தத்தில் நடக்க முடியாத ஒரு காரியத்தை மானசீகமாக நடத்தி வைக்க,அல்லது நடந்ததாக நினைத்துக்கொள்ள மந்திரங்கள் பயன்படுகின்றன.இந்த மந்திரங்களே மாயச் செயல்களைச் செய்வதாகக் கற்பிதங்கள் செய்யப்படுகின்றன.மாயஜாலங்களை மனம் நம்புகிறது.நம்ப வேண்டும் என்றூ ஆசைப்படுகிறது.அயதார்த்தமும்,மாயஎ..
₹29 ₹30
பறந்து... பறந்து...பெரியவர்கள் உறங்கும்போது மட்டுமே கனவு காண்பவர்கள்.ஆனால் குழந்தைகள் தங்களுடைய குழந்தைப் பருவத்தையே கனவாகக் காண்பவர்கள்.படைப்பூக்கம் மிக்க அந்தக்கனவுகளை மட்டும் நம்மால் சரியாக மொழிபெயர்க்க முடியுமானால்,அவற்றைச் செயல்படுத்த முடியுமானால்,இந்த உலகமே வண்ணமயமான கனவாகிவிடும்.குழந்தைகளின் ..
₹38 ₹40
இயற்கையின் அற்புத உலகில்..
₹95 ₹100