Menu
Your Cart

வார்ஸாவில் ஒரு கடவுள்

வார்ஸாவில் ஒரு கடவுள்
-5 %
வார்ஸாவில் ஒரு கடவுள்
தமிழவன் (ஆசிரியர்)
₹371
₹390
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வார்ஸா நகரின் சரித்திர நிழலில் அலையும் ஒரு தமிழனின் பார்வையினூடாக, பலரின் கதைகள் வருகின்றன. ஒரு கதையைக் குறுக்கும் நெடுக்குமாகப் பல கதைகளாய் பின்னும் சந்திரன், யுத்தம் தோய்ந்த பர்மாவிலிருந்து கோவைக்கு வந்தவர்களின் ஞாபகத்தோடு வாழ்கிறான். கிழக்கு, மேற்கு எனும் உலக முரண்களின் சங்கமமாய் வெளிப்படுகிறான். இரண்டாம் உலகப்போர் இடிபாடுகளையும் பெண்ணுடல் மீதான எண்ணங்களையும் சிந்தனையில் கொண்டு அலைகிறான். சரித்திரம் வழங்கிய மனநோயைச் சுமக்கும் நகரத்தில் தமிழ்க்கதையை ஐரோப்பியர் அனைவரும் வாசிக்கும்படி கூறுகிறான். இதற்கிடையில் ஒரு அரசியல்வாதி தோன்றி ஆதிவாசிகளின் லாட்ஜ் ஒன்றிலிருந்து பறந்துபோகிறான். பஞ்சாப், இலங்கை, ஆப்பிரிக்கா என நாடுகளைத் தாண்டும் ஒருவன் மின்சாரம் பாய்ச்சப்பட்டு இறந்தும்போகின்றான். சுற்றிச்சுழலும் கதையில் சந்திரனும் கடவுள் பேசுவதைக்கேட்கும் சிவநேசமும் எதார்த்தத்தையும் மாயத்தையும் கொண்டுவருகின்றனர். அகப்பயணம், சிறைவாழ்க்கை, வானத்தில் தோன்றும் மலர், நடந்தபடி பேசும் கடிகாரம் என பல நிகழ்வுகள் இந்நாவலில் குறிப்புகளாகின்றன. குடும்பம் வடிவம் இழக்கிறது. கிழக்கத்திய நாகரிகத்தின் பிரதிபலிப்பாய் மேற்கத்தியம் ஆகிறது. எதையோ இழந்தும் ஆன்மீகம் மேலுருவாகவும் ஒன்றைப் பற்றுவதற்கான நம்பிக்கையின்றியும் அனைத்தும் தேடல்கொண்டு அலைகின்றன. கடைசியாக ஒரு ரயில்வே நிலையத்தில் எங்குப் போவதெனத் தெரியாமல் ஸ்தம்பித்து நிற்கிறான் நாவலின் மையப்பாத்திரம். இதனால்தான் இந்நாவலுக்கு கனடா இலக்கியத்தோட்டமும் சிறந்த மொழிபெயர்ப்பு நாவலென கர்நாடக அரசும் விருதுகளை வழங்கியிருக்கின்றன.
Book Details
Book Title வார்ஸாவில் ஒரு கடவுள் (Varsavil Oru Kdavul)
Author தமிழவன் (Tamilavan)
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 512

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அமைப்பியலும் அதன் பிறகும் என்னும் இந்நூல் ஸ்ட்ரக்சுரலிசம் என்ற பெயரில் 1982இல் வெளிவந்தது. அப்போது இத்துறையில் வெளிவந்த முதல் நூலாக அது அமைந்தது. இந்நூலால் உந்துதல் பெற்று தமிழ் அறிவுலகம் பல வாத விவ்வாதங்களைக் கிளப்பியது. இது தொடர்பான நூல்களும் வெளிவந்தன. சிந்தனைப் போக்கில் மாற்றங்களும் ஏற்பட்டன. மா..
₹333 ₹350
இப்படைப்பில் தமிழ்ப் படிமங்களும் தமிழர்களின் வரலாற்று நிகழ்வுகளும் நினைவுகளும் பண்பாடும் அவர்களின் நூல்களும் நாட்டுப்புறவியலும் உள்மனமும் புராணங்களும் உரைநடையாக எழுதப்பட்டிருகின்றன...
₹62 ₹65
ஆடிப்பாவைபோல - தமிழவன் :ஆடிப்பாவைபோல என்ற நாவல், அதன் பெயர்சுட்டுவதுபோல இரு வடிவங்கள் கொண்டது. முன்பு ஆசிரியனை மையமாக்கி நாவலை அணுகினார்கள். ஆசிரியனின் ‘மரணத்துக்கு’ப்பின் வாசகனின் நோக்கில் நாவலை அடையாளப்படுத்துகிறார்கள். ஆகவே மூன்று வகையாக இந்த நாவலை வாசிக்கலாம். இளங்காதலர்கள் கதையில் ஊடாடினாலும் அ..
₹333 ₹350
தமிழில் எழுதப்பட்ட முதல் தொடர் உருவக நாவலான இது காலனிய அழகியலுக்கு எதிரான பின்காலனிய நாவல்...
₹133 ₹140