Menu
Your Cart

வழிநெடுக வைரங்கள்

வழிநெடுக வைரங்கள்
-5 % Available
வழிநெடுக வைரங்கள்
₹200
₹210
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மனித வாழ்க்கை முறைகளும் பின்பற்ற வேண்டிய நெறிகளும் கொட்டிக் கிடக்கிறது, நம் சங்க இலக்கியக் கருவூலங்களில். வள்ளுவனும் அவ்வையும் அள்ளித் தந்துள்ள அறிவுரைகள், நீதி நூல்கள் கூறும் நன்னெறிகள் - இப்படி நம் சான்றோர்கள் விட்டுச் சென்றுள்ளவற்றை நம் வாழ்வில் கடைப்பிடிக்க வலியுறுத்துகிறது இந்த நூல். கோபம், பொறாமை, புறம்பேசுதல் - இவை இல்லாத வாழ்க்கையை மனிதன் வாழவேண்டும் என்பதைத்தான் நம் சங்க கால நூல்கள் அனைத்தும் வலியுறுத்துகின்றன. அப்படிப்பட்ட இலக்கியங்களை ஆய்ந்து எடுத்து அழகாய் அடுக்கி, வாழ்வியல் உதாரணங்களோடும், சம்பவங்களோடும், கண்முன் விரியும் காட்சிகளோடும் தந்திருக்கிறார், நூலாசிரியர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி. திருவள்ளுவர், ஔவையார், பாரதியார், கணியன் பூங்குன்றனார், வள்ளலார், அழ.வள்ளியப்பா, பாரதிதாசன்... என அனைவரையும் இந்த நூலின் வழியே உலாவவிட்டிருக்கிறார் நூலாசிரியர். ஒவ்வொருவரும் பேணிக் காக்க வேண்டிய தனி மனித ஒழுக்கம், வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான வழிமுறைகள் என அனைத்து வகையான போதனைகளையும் எளிதாகச் சொல்லியிருப்பது இந்த நூலின் சிறப்பம்சம். நூலைப் புரட்டுங்கள்! உங்கள் வாழ்வைச் செம்மைப்படுத்திட இந்த வைரங்களை அள்ளுங்கள்!
Book Details
Book Title வழிநெடுக வைரங்கள் (Vazhineduga vairangal)
Author பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (Baskaran Krishnamurthy)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year 2021
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Life Style | வாழ்க்கை முறை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கிராமத்து வாழ்க்கை எப்போதுமே சுகமான, சுவையான அனுபவங்களைத் தரும். அதிலும் 70-80களின் வாழ்க்கைமுறை இனிமையானதாக இருந்திருக்கும். ஏனென்றால், இன்றைக்கு வேலை நேரம் போக மீதமுள்ள நேரத்தை எல்லாம் பேஸ்புக்கும், வாட்ஸ்அப்பும் இன்ன பிற சமூக வலைதளங்களும் எடுத்துக்கொள்கின்றன. ஆனால், கிராமத்தில் வாழ்ந்த சிறுவர்களி..
₹181 ₹190
தேசப்பற்றை எழுத்தின் மூலமாகவும் பேச்சின் மூலமாகவும் இசை முதலான கலைகளின் வழியாகவும் நாட்டு மக்களிடம் சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.அவருடைய இந்த எண்ணத்தின் வெளிப்பாடே `நாட்டுக்கொரு பாட்டு'. இதில் 44 நாடுகளின் தேசியகீதங்களை தமிழில் மொழிபெயர..
₹333 ₹350