Menu
Your Cart

விதைவழி செல்க

விதைவழி செல்க
-4 %
விதைவழி செல்க
கோ. நம்மாழ்வார் (ஆசிரியர்)
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

விதைசார் அரசிலை அறிவதற்கான எளியவாசல் இப்புத்தகம்:

          ஒரு கிராமத்தில், ஒரு வீட்டுப்பரணில் பழைய ராட்டை ஒன்று கிடந்தது. அந்த ராட்டையை கீழே இறக்கி தூசு தட்டினார்கள். அதில் எப்படி நூல் நூற்பது என்று காந்திக்கு அக்கிராமத்து மக்கள் கற்றுக்கொடுத்தார்கள். மக்கள்தான் முதன்முதலில் காந்திக்கு நூல் நூற்க சொல்லிக் கொடுத்தார்கள்! அதன்பிறகு, “இந்த ராட்டைகளை நிறைய செய்துகொள்ளுங்கள். நாம் எல்லோருமே நூல் நூற்கலாம். நாமே பஞ்சை விளைய வைப்போம். நாமே நெய்வோம். நாமே அவைகளை உடுத்திக்கொள்வோம்” என தேசத்துக்குச் சொன்னார் காந்தி.

          அப்படியானால், நம்மிடம் ‘விதைகள்’ உள்ளன. நம்முடைய விதைகளை நிலத்தில் விதைத்தால் நம்முடைய நிலத்தில் விளையும். நாமே அதை அறுத்துக்கொள்ளலாம். எவருக்கும் கடன்பட வேண்டியதில்லை. எல்லோருக்கும் வேலைவாய்ப்பும், தேவையான அளவு உணவும் கிடைக்கும். காந்தி ராட்டையை ஆயுதமாகக் கொண்டு சுதந்திரம் வாங்கினார். நாம் விதைகளை ஆயுதமாக வைத்து நம்முடைய சுதந்திரத்தை காத்துக்கொள்ள இருக்கிறோம். அதற்காகத்தான் இந்த நெல்திருவிழா!

          விதைகளும் தண்ணீரும்தான் இன்று உலக அரசியலை நிலைநிறுத்துபவைகளாக மாறியிருக்கின்றன. இத்தனை போர்கள், இயற்கைசீற்றங்கள் அனைத்துக்கும் அப்பாலும் நம் சமூகம் கொஞ்சம் விதைகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது. ஆனால், அது பரவலாக்கப்பட வேண்டும், அதுவே காலத்தேவை. வரலாற்றில் எப்போதுமே பெண்கள்தான் விதைகளைச் சுமந்து தலைமுறை தலைமுறையாக காத்துவருகிறார்கள்.

         அவ்வகை செயலதிர்வின் நீட்சியாக, திருவண்ணமாலை சுற்றுப்புற விவசாயப் பெண்களின் கைகளுக்கு விதைநெல்லை ஒப்படைத்து, நம்மாழ்வார் அய்யா பேசிய அகமுறையும் உரையின் எழுத்துவடிவப் புத்தகமே ‘விதைவழி செல்க’. திருவண்ணமலை டேனிஷ் மிஷன் பள்ளியில், நிகழ்ந்த குக்கூ குழந்தைகள் வெளியின் ‘நெல்திருவிழாவில்’ அய்யா நம்மாழ்வார் ஆற்றிய பேச்சின் எழுத்தாக்கமான இப்புத்தகம், தன்னறம் நூல்வெளி வாயிலாக வெளியீடு அடைகிறது. விதைகளை தக்கவைக்கப் போராடும் ஒரு குடிமைச்சமூகத்தின் கருத்துக்கு வலுசேர்க்கும் நூலிது.

Book Details
Book Title விதைவழி செல்க (vithaivazhi selga)
Author கோ. நம்மாழ்வார் (K. Nammalvar)
Publisher தன்னறம் (Thannaram)
Published On Aug 2019
Year 2019
Edition 01
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்க்கு கொடுக்கலாம். இவர் வாழ்நாளின் பெரும்பகுதியை, இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலேயே செலவி..
₹304 ₹320
பலவகையான நிலங்களைப் பற்றியும் அவற்றின் வளங்கள் பற்றியும் அவ்ற்றின் இன்றைய நிலை பற்றியும் விரிவாய் அலசும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு...
₹105 ₹110
உடல் பசி மூலமாக தாகம் மூலமாக,தூக்கம் மூலமாக இன்னும் பல்வேறு வழிகளில் தனது தேவையை நிறைவெற்றிக்கொள்ளும் ஞானம் மிக்கது நம் உடல். நோயைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. நோய் வேறு சிகிச்சை வேறு அல்ல என்ற இயற்கை மருத்துவத்தின் கூற்றை விளக்கும் நூல்...
₹29 ₹30
நம்மாழ்வாரின் இயற்கை குறித்தான கட்டுரைகள்...
₹143 ₹150