Menu
Your Cart

தி.ஜானகிராமன் கட்டுரைகள்

தி.ஜானகிராமன் கட்டுரைகள்
-5 %
தி.ஜானகிராமன் கட்டுரைகள்
தி.ஜானகிராமன் / T.Janakiraman (ஆசிரியர்), சுகுமாரன் (தொகுப்பாசிரியர்)
₹276
₹290
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தி.ஜானகிராமன் முதலும் முடிவுமாகப் புனைகதைக் கலைஞர். அரிதாகவே கட்டுரையாளராகச் செயல்பட்டிருக்கிறார். அவரது புனைவாக்கங்களின் எண்ணிக்கையையும் அளவையும் ஒப்பிட்டால் கட்டுரைகளாக எழுதியவை குறைவு. எனினும் அவை அவரது படைப்பியக்கத்தைப் புரிந்துகொள்ள முக்கியமானவை. இதுவரை வெளியானவையும் இதழ்களில் வெளிவந்து வாசகர்களுக்கு எட்டாதவையுமான கட்டுரைகளும் தி.ஜானகிராமன் அபூர்வமாக எழுதியிருக்கும் முன்னுரை, மதிப்புரைகளும் முதன்முறையாக நூல் வடிவில் தொகுக்கப்பட்டுள்ளன. எழுத்து, கலை, பயணம், சமூகம், தன்னனுபவம் ஆகிய பகுப்புகளாகத் தொகுக்கப் பட்டிருக்கும் இந்த நூல் ஓர் உண்மையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. அது – கலை உண்மையின் வெளிச்சமும் வாழ்வின் ஈரமும் வெளித்தெரியும் அவரது புனைவு எழுத்துகளுக்குச் சற்றும் குறைந்தவையல்ல தி.ஜானகிராமனின் புனைவு அல்லாத எழுத்துகளும்.
Book Details
Book Title தி.ஜானகிராமன் கட்டுரைகள் (T.Janagiraman Katturaikal)
Author தி.ஜானகிராமன் / T.Janakiraman
Compiler சுகுமாரன் (Sukumaran)
ISBN 9789355230096
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Published On Oct 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

விழைவுக்கும் நடப்புக்கும் இடையில் எழும் முரண்பாடு, எதிர் பார்ப்புக்கும் நிகழ்வுக்கும் மத்தியில் நிகழும் ஊசலாட்டம், இச்சைக்கும் அடக்கத்துக்கும் நடுவில் நிலைபெறும் உறவு, இவற்றை வெவ்வேறு காலப் பின்னணியில் வைத்து அலசும் புனைவு இந்நாவல். சாமான்யனான சட்டநாதன் எல்லாரும் மதிக்கும் சட்டமாக நிமிர்ந்து நிற்க ஒ..
₹570 ₹600
தமிழின் முக்கிய எழுத்தாளரான தி.ஜானகிராமனின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. 1954ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட இந்நூல் தற்போது தனது வெளியீட்டின் 60வது வருடத்தைக் கொண்டாடுகிறது...
₹214 ₹225
மோகமுள்- தி.ஜானகிராமன்:இந்த நாவல் பற்றி இலக்கியத் தரம் அறிந்தவர்கள் பெருமைப் படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை - பெரியதோர் சாதனை...
₹751 ₹790
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இரு..
₹219 ₹230