Menu
Your Cart

சிவஞான போதம்: வழித்துணை விளக்கம்

சிவஞான போதம்: வழித்துணை விளக்கம்
-5 %
சிவஞான போதம்: வழித்துணை விளக்கம்
ஆ.ஆனந்தராசன் (ஆசிரியர்)
₹399
₹420
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்நாட்டில் தோன்றி வழங்கி வரும் தத்துவத்துறை நூல்களுள் தலைசிறந்த அறிவுநூலாக விளங்குவது சிவஞான போதம் ஆகும். இந்நூல் அளவிற் சிறியது; சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடையது; அளக்கலாகா மலையையே தன்னுள் அடக்கிக் காட்டும் ஆடி போல அறிவு நூல்களின் பொருளனைத்தையும் தன்னுள்ளே அடங்கக் கொண்டு நிற்பது ; சித்தாந்த சைவத்தின் முப்பொருள் உண்மைகளை எடுத்து முறைப்படுத்தி வழங்குவது. இந்நூல் பன்னிரண்டு நூற்பாக்களால் ஆனது. நூற்பாக்கள் மூன்றடி அல்லது நான்கடி உடையன. நூற்பாக்களில் உள்ள மொத்த அடிகள் நாற்பது. நூலின் தொடக்கத்தில் ஆசிரியர் செய்த பாயிரம் உள்ளது. அதில் கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒன்றும், அவையடக்கச் செய்யுள் ஒன்றுமாக இரண்டு செய்யுட்கள் உள்ளன. சித்தாந்தப் பொருள்களைப் பெத்தம், முத்தி என்னும் இரு நிலைகளில் வைத்து விளங்க உணர்த்தும் விழுமிய நூல் சிவஞான போதம்.
Book Details
Book Title சிவஞான போதம்: வழித்துணை விளக்கம் (Sivagnana Bodham Vazhithunai Vilakkam)
Author ஆ.ஆனந்தராசன் (Aa.Aanandharaasan)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 464

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்நூல் இரண்டு வரிகளையுடைய சிறி குறட்பாக்களால் ஆனது என்றாலும் திருக்குறளைப் போல மிகவும் அரிய பெரிய கருத்துக்களைத் தன்பாற் கொண்டதாகும். ஆகவே இதனை உரை யின் துணையின்றிக் கற்பது எளிதன்று. 'திருவருட் பயனு‘க்குப் பழைய உரைகளோடு இக்காலத்தில் எழுந்த உரைகளும் பலவாக உள்ளன. அந்த உரைகளினின்றும் இந்த விளக்கவுரை ச..
₹285 ₹300
இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் 'பொய் காட்டி' என்று தொடங்குகிறது; 'வாழ்ந்தேன்' என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை..
₹190 ₹200
திருவாசகத்தில் உள்ள 51 பகுதிகளும் பதிக விளக்கங்களுடன்.....
₹219 ₹230